Just In
- 32 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த 5 ராசிக்காரங்களுக்கு பணத்தை விட காதல்தான் முக்கியமாம்... உங்க காதலன் அல்லது காதலி ராசி என்ன?
கடக ராசி நேயர்களுக்கு அன்பை விட முக்கியமானது எதுவுமில்லை. அவர்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறார்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் காயப்படுவதை அவர்களால் பார்க்க முடியாது
இவ்வுலகமே அன்பால் இயங்கிக்கொண்டிருக்கிறது. பணம் இல்லையென்றாலும், நம்மிடம் அன்பு செலுத்த ஒரு நபர் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அன்பின் சக்தி அளப்பரியது. இது கடினமான தடைகளைத் தகர்த்து, ஒரு நபரை நேசிப்பதாக உணர வைக்கும். அதனால் அவர்கள் ஒருபோதும் தனிமையாகவோ அல்லது ஏமாற்றமாகவோ உணர முடியாது. காதல் என்பது மிகவும் ஆறுதலான உணர்வு மற்றும் பெரும்பாலும், அது எதையும் விட, பணத்தை விடவும் முன்னுரிமை பெறுகிறது. பணம் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அல்லது செல்வாக்கு பெற்றதாக இருந்தாலும், முடிவில் அன்பு எப்போதும் வெற்றி பெறும்.
அன்புதான் இங்கு நிலையானது என பெரும்பாலான மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதேசமயம் சிலருக்கு அன்பை விட பணம் முக்கியமாக இருக்கும். ஆனால், நீங்கள் பணத்தை விட அன்பை தேர்ந்தெடுக்கும் ஒருவரா? என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஜோதிடம் உங்களுக்கு உதவும். பணத்திற்கு மேல் அன்பை தேர்ந்தெடுக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு அன்பை விட முக்கியமானது எதுவுமில்லை. அவர்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறார்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் காயப்படுவதை அவர்களால் பார்க்க முடியாது. ஆயிரம் முறைக்கு மேல் கூறினாலும், பணத்தை விட அன்பைதான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அன்பிற்கு பதிலாக பணத்தைத் தேர்ந்தெடுக்கும் எண்ணம் துளிகூட இந்த ராசிக்காரர்களுக்கு வருவதில்லை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சில சமயங்களில் பணத்தின் மீது பேராசையுடன் இருக்கலாம். ஆனால் பணத்திற்கும் அன்பிற்கும் இடையே ஒரு தேர்வு வைக்கப்பட்டால், அவர்கள் எப்பொழுதும் இரண்டாவது சிந்தனையின்றி அன்பைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் நிதி ரீதியாக சிரமப்படுகிறார்களா? என்பதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் எதற்கும் மேலாக தங்கள் கூட்டாளியின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நடைமுறை மற்றும் தர்க்கரீதியானவை. ஆனால் இதயத்தின் விஷயங்களை உள்ளடக்கியிருந்தால், கன்னி ராசிக்காரர்கள் எந்த நாளிலும் அன்பைத் தேர்ந்தெடுப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர் ஆபத்தில் இருந்தால் அல்லது மிக முக்கியமாக அவர்களுக்குத் தேவைப்பட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. கன்னி ராசிக்காரர்கள் இந்த முடிவைப் பற்றி மிகவும் தைரியமாக உள்ளனர். மேலும் யாராலும் அவர்களை வேறுவிதமாக உணர முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதல் மற்றும் ஆசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. பணம் ஒரு நாள் தீர்ந்துவிடும், ஆனால் காதல் ஒருபோதும் இழக்கப்படாது என்று அவர்கள் நம்புகிறார்கள். விருச்சிகம் தேடும் நிலையான துணை காதல். யாரோ ஒருவர் தங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை அறிவதில் அவர்கள் ஆறுதல் அடைகிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அன்பானவர்களைக் கொண்ட தங்கள் சொந்த சிறிய உலகில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் வசதியான மற்றும் நல்ல வாழ்க்கை முறையை விரும்பினாலும், அவர்கள் பணத்திற்காக தங்கள் அன்புக்குரியவர்களை தியாகம் செய்ய மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகியவை தங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களில் அதிக கவனம் செலுத்துவதால் அன்பை விட பணத்தையையே அதிகம் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் வெற்றிக்கும் இடையே உணர்வுகளும் அன்பும் வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆதலால், இந்த ராசிக்காரர்கள் அன்பை விட பணத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள்.