Just In
- 6 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 7 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 7 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 8 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்க கவிதை எழுதுறதுல கில்லாடிகளாம்...எல்லாரையும் கவிதையிலேயே கரெக்ட் பண்ணிருவாங்களாம்...!
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அனைவரும் ரசிக்கும்படி அழகாக பேசுவது என்பது பெரிய வரமாகும். இந்த நபர்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் அவர்களின் உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் கற்பனைகளை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த முடியும். அவர்களின் விரைவான வார்த்தைகளைக் கோர்க்கும் திறமையால் அவர்கள் உங்கள் நாளை எளிதாக்கலாம்.
இந்த நபர்கள் காதலிக்கும்போது, அவர்கள் தங்கள் காதல் மற்றும் அன்பை தங்கள் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தும் தீவிரமான காதலர்களாக இருப்பார்கள். இந்த கவித்திறமை சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிறக்கும்போதே கவிஞராக பிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அனைத்து ராசிகளையும் விட மிகவும் காதல் உணர்வு கொண்டவர்கள் மற்றும் அவர்கள் பிறவி கவிஞர்கள். பகல் கனவு காணும் மீன ராசிக்காரர்கள் தங்கள் கற்பனையில் இருந்து ஒரு சிறந்த கவிதையை உருவாக்கி தங்கள் அன்புக்குரியவர்களை சிறப்பாக உணர வைக்க முடியும். அவர்கள் உலகத்தை உணரும் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளனர் மற்றும் அனைத்தைக் குறித்தும் அழகான கவிதையை உருவாக்க முடியும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எதையாவது அல்லது யாரையாவது பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றால், அவர்கள் அதை ஒரு கவிதை வடிவில் செய்வார்கள். அவர்கள் உங்களைப் புகழ்வதற்கும் உங்களை ஆச்சரியப்படுத்துவதற்கும் கூட எளிதாக வார்த்தைகளை கொண்டு கவிதைகளை உருவாக்கலாம். இவர்களுடனான உரையாடல்கள் எப்பொழுதும் அழகானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கும்.
MOST READ: காமசூத்ரா கூறியுள்ள செக்ஸியான முத்தங்களின் வகைகள் என்னென்ன தெரியுமா? இதில் உங்களுக்கு பிடிச்சது எது?

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் கவிதைகள் அவ்வளவு அழகானதாக இருக்காது, ஆனால் அவை மற்றவர்களிடமிருந்து மிகவும் தனித்துவமானவையாக இருக்கும். அவர்கள் தங்கள் கடந்த காலத்தில் அழகைக் காணலாம் மற்றும் பெரும்பாலும் அதைக் கொண்டு கவிதைகளை உருவாக்கலாம். அவர்கள் தங்கள் கவிதைகள் மூலம் வெவ்வேறு விஷயங்களைப் பேச விரும்புகிறார்கள், எல்லாவற்றையும் வித்தியாசமாக கவனிக்கிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் உரையாடலில் மட்டுமல்ல, எழுதுவதிலும் வல்லவர்கள். அவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை கவிதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும். தங்கள் வார்த்தைகளால் மக்களைக் கவரக்கூடிய கலைத்திறன் இவர்களுக்கு அதிகம். இவர்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களுடன் உரையாட விரும்புவார்கள்.
MOST READ: உலகத்தையே நடுங்க செய்த திட்டமிட்ட படுகொலைகள்... இதில் எத்தனை இந்தியாவில் நடந்தது தெரியுமா?

துலாம்
துலாம் ராசியினர் அழகை ஆராதிப்பவர்கள். அவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இருக்கும் அழகைக் காணலாம் மற்றும் அவர்களின் கவிதை வெளிப்பாடுகளால் அவற்றைப் பற்றி பேச முடியும். அவர்கள் அனைத்திலும் உள்ள எதிர்மறையான மற்றும் நேர்மறையான பக்கங்களைக் காணலாம் மற்றும் அவற்றை தங்கள் கவிதைகளில் ஒன்றாக இணைக்க முடியும். எனவே அவர்களின் கவிதைகள் பெரும்பாலும் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கையானவையாக இருக்கும், ஏனெனில் அவை நேர்மறையில் கவனம் செலுத்துகின்றன.