Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க பொய் சொல்வதில் உலகமகா கில்லாடிகளாம்... இவங்க எதை சொன்னாலும் நம்பிராதீங்க...!
நேர்மையான மனிதர்களைத் தவிர, ஏமாற்றுபவர்கள், மோசமான பொய்யர்கள் உலகத்தை கடினமான இடமாக மாற்றுகிறார்கள். அவர்கள் பொய் சொல்வதை தவிர்க்க முடியாது.
நேர்மையான மனிதர்களைத் தவிர, ஏமாற்றுபவர்கள், மோசமான பொய்யர்கள் உலகத்தை கடினமான இடமாக மாற்றுகிறார்கள். அவர்கள் பொய் சொல்வதை தவிர்க்க முடியாது. இந்த கட்டாய பொய்யர்களில் பலர் வஞ்சம், மோசடி மற்றும் அப்பட்டமான பொய்களை நம்பியிருக்கிறார்கள். நாம் இதை உணராமல் இருக்கலாம், ஆனால் நமக்குள் இருக்கும் சில எதிர்மறை குணங்கள் நல்ல குணங்களை வென்று நாம் விரும்புவதைப் பெறுவதற்காக பொய் சொல்கின்றன.

அனைவருமே தங்கள் தேவைக்காக பொய் கூறுபவர்களாக இருந்தாலும் சிலர் அதனையே முழுநேர வேலையாகக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வழியில் காரியங்களைச் செய்ய பொய்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். யாராவது தன்னை விமர்சிப்பதையோ அல்லது குற்றம் சாட்டுவதையோ இவர்கள் விரும்புவதில்லை. குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க பொய்யை ஒரு கேடயமாக இவர்கள் பயன்படுத்துவார்கள். இந்த தீய குணம் ஐந்து ராசிக்காரர்களிடம் அதிகமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்
அவர்கள் சாதாரண பிரச்சினைகளை கூட பொய் சொல்லும் அளவிற்கு மிகைப்படுத்துகிறார்கள். அவர்களின் உணர்ச்சியற்ற செயல்களையும், வார்த்தைகளையும் மறைப்பதற்காக பொய் கூறுகிறார்கள். ஏனெனில் , அவர்களால் உணர்ச்சியற்ற தன்மையை கையாள முடியாது. அவர்களின் தவறான செயல்கள் சுற்றியிருப்பவர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.

சிம்மம்
அவர்கள் அதிக கவனத்தைப் பெற அல்லது அவர்கள் மீது வெளிச்சம் பொழிய பொய்களின் உதவியை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அகங்காரமாக இருக்கலாம் மற்றும் பொய் பேசுவதை மறைக்கலாம், ஆனால் அவர்கள் புகழ், பிரபலம் போன்றவற்றைப் பற்றி பொய் சொல்வதன் மூலம் மிகச்சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள். அவர்கள் கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பார்கள், ஏனென்றால் பொய் சொல்லும்போது அவர்களால் கண் தொடர்பு கொள்ள முடியாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உண்மையை மாற்றிவிடுவார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு எளிதானது. அவர்கள் என்ன செய்தாவது மோதல்களைத் தவிர்க்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அனைவரிடமும் மிகவும் சுமூகமான நபர் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் கெட்ட பிம்பம் இருக்க முடியாது, நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று மற்றவர்கள் அறியும்படி நடந்து கொள்ளமாட்டார்கள்.

விருச்சிகம்
இவர்கள் பொய் சொல்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அதில்சிறந்தவர்கள். அவர்கள் அடையாளம் காண முடியாத வகையில் மிகவும் நன்கு பராமரிக்கப்பட்ட இமேஜைக் கொண்டுள்ளனர். அவர்கள் எதைப் பற்றியும் எந்த இடத்திலும் தொடர்ந்து பொய் சொல்வார்கள், மேலும் உடனடியாக அதிலிருந்து விடுபடுவார்கள். அவர்கள் சுழலும் விரிவான, அடுக்கடுக்கான கதைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களின் பொய்களை ஒருவர் அடையாளம் காண முடியும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அதை செய்வார்கள். அவர்கள் மோதல்களைத் தவிர்க்கிறார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு சங்கடமாகவும், அசௌகரியமாகவும் இருக்கிறது. அவர்கள் பிரச்சனையில் இறங்காதபடி உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக வளைப்பார்கள். அவர்களின் பொய்கள் அவர்களுக்கு பெரும் இழப்பைச் ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அவர்கள் இறுதியில் சமநிலையிலிருந்து தடுமாறிவிடுவார்கள்.



Click it and Unblock the Notifications











