Just In
- 6 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 6 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 7 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்கள தெரியாம கூட காதலிச்சிராதீங்க... இல்லனா ஏன்டா காதலிச்சோம்னு ரொம்ப வருத்தப்படுவீங்க...!
காதல் உறவுகளுக்கு பெரும்பாலும் பிரச்சனையாக இருப்பது காதலர்களுக்குள் இருக்கும் சில குணங்கள்தான். காதல் நீண்ட காலம் தொடர்ந்து திருமணத்தில் முடிய தடையாக இருப்பது காதலர்களின் ஆளுமையும் அவர்களின் பிடிவாதமும், ஈகோவும்தான். சிலர் சுதந்திரமானவர்களாகவும், எளிமையானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களை காதலில் சமாளிப்பது மிகவும் எளிதானது.
அதே சமயம் காதலில் மிகவும் பகுத்தாய்ந்தவர்களுடன் இருப்பது எரிச்சலை ஏற்படுத்தும். உங்கள் காதலரின் ஆளுமையைப் பற்றிய குறிப்புகளை அவர்களின் ராசி அடையாளத்திலிருந்து தெரிந்து கொள்வது விரக்தியிலிருந்தும் மகிழ்ச்சியற்ற உறவிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். எந்தெந்த ராசிக்காரர்களை காதலிப்பது மிகவும் கடினம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பிறவியிலேயே அதிகம் பேசுபவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி நிறைய பேசுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் துணை என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள், இதன் விளைவாக, இது மோசமான தொடர்பு மற்றும் தோல்வியுற்ற உறவுக்கு வழிவகுக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த எண்ணங்களில் தொலைந்து போகிறார்கள் அல்லது அவர்களின் எல்லைக்குள்ளேயே நிற்க விரும்புகிறார்கள். இந்த இராசி அடையாளம் பெரும்பாலும் இரட்டை இயல்பைக் குறிக்கிறது, இது சில நேரங்களில் காதலில் தவறான தொடர்புக்கு வழிவகுக்கிறது. எதையாவது கூறுவதும் அதற்கு நேர்மாறாகச் செய்வதும் அவர்களின் இயல்பில் உள்ள ஒன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் இயல்பு மிகவும் பிடிவாதமாக இருப்பதால் அவர்களை காதலிப்பது மிகவும் கடினமானதாக இருக்கலாம். இவர்கள் "என் வழி தனிவழி" என்ற கருத்தை நம்புகிறவர்கள். மேலும் சமரசம் செய்யும் எண்ணம் இவர்கள் இரத்தத்திலேயே கிடையாது. இவர்களின் கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள், மேலும் இறங்கி வரவும் மாட்டார்கள். இது பெரும்பாலும் வாக்குவாதங்களுக்குக் காரணமாகிறது, இறுதியில் இவர்கள் உறவை விட்டே வெளியேறிவிடுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உள்முக சிந்தனையாளர்கள் மற்றும் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிக்கல்களைக் கொண்டிருப்பதால் அவர்களுடன் இருப்பது கடினமாகிறது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கு இரக்கம் என்பதே இல்லை, அதுவே உங்கள் உணர்வுகளைப் பற்றி அவர்களிடம் சொல்வது சவாலான பணியாக அமைகிறது. மேலும், இன்னும் சிக்கல் என்னவென்றால், அவர்கள் தங்கள் மூளைக்குள்ளோ அல்லது இதயத்திலோ என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள், இது அவர்களின் துணைக்கு தவறான சிக்னல்களை மேலும் அளிக்கிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தி தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் அதிகமாக நேசிப்பதால் அவர்கள் அடிக்கடி பொறாமை மற்றும் புண்படுத்தப்படுகிறார்கள். கூடுதலாக, அவர்கள் இரகசியமாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளை சிதறடிக்க மாட்டார்கள், இவை அனைத்தும் விருச்சிக ராசிக்காரர்களை காதலிப்பதை கடினமாக்குகின்றன.
MOST READ: இந்த 5 ராசி ஆண்கள் மனைவிக்கு எப்போதும் நேர்மையான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தினமும் வெளியே சென்று புதிய நண்பர்களை உருவாக்க விரும்புவார்கள் மற்றும் இயற்கையாகவே அலைந்து திரிபவர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் காதலர்களுக்கு தங்கள் ஆளுமைப் பற்றிய தவறான தோற்றத்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாக காதலித்தாலும், அவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பது போன்ற எண்ணங்களுக்கு பயந்து, பெரும்பாலும் காதலில் இருந்து வெளியேறிவிடுவார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் பெரும்பாலும் தங்கள் காதலரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை, அதனால்தான் அவர்களுடன் உறவில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாக இருக்கும்.