Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 5 ராசிக்காரங்க வரப்போற மாதங்களில் மோசமான பணக்கஷ்டத்தை சந்திக்க போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த வேகம் தெரிவதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த வேகம் தெரிவதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை வழங்கியுள்ளது. வருடத்தின் முடிவு எப்போதும் அனைவருக்கும் எதிர்பார்க்காத சில திடீர் பலன்களை வழங்கும். அந்த வகையில் வரவிருக்கும் மாதங்களில் நிதிரீதியாக மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பவர்கள் சிலர் உள்ளனர், ஆனால் சிலர் கடுமையான நிதி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
ஜோதிட கணிப்புகளின் படி, 2022 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில், அவர்களின் ராசி அறிகுறிகளின் அடிப்படையில் மிகவும் நல்ல நிதி நிலையைப் பெறாத சிலர் இங்கே உள்ளனர். இவர்களின் பணக்கஷ்டம் இந்த மாதங்களில் மிகவும் மோசமாக மாறப்போகிறது. இந்த துரதிர்ஷ்டமான ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மீதமுள்ள மாதங்கள் சோதனை நிறைந்ததாக இருக்கப்போகிறது. அவர்கள் நிதிச்சிக்கலை சந்திக்க அவர்கள் பணம் சம்பாதிக்க மமுயற்சி எடுக்காததே காரணம். அவர்களின் விளையாட்டுத்தனமான மற்றும் கவலையற்ற இயல்பு காரணமாக, அவர்கள் வேலையில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். அவர்களுக்கென ஒரு திட்டத்தை உருவாக்கி அதில் உறுதியாக இருக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்ல உங்கள் துணை அல்லது நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்.
சிம்மம்
சிம்மம் அதிக தன்னம்பிக்கை கொண்ட ராசியாகும். இதன் காரணமாக, அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உதவி மற்றும் கருத்துகளைப் பெற வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்வதில்லை. மிகவும் வெற்றிகரமான மக்கள் கூட ஒரு வழிகாட்டியைக் கொண்டிருப்பதன் மூலம் அதிக பலனைப் பெறலாம். அவர்களின் அதீத நம்பிக்கை பணப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் இன்னும் சில வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள வெற்றிகரமான நபர்களின் ஆலோசனையுடன் வேலை செய்யத் தொடங்குவது நல்லது.
மீனம்
மீனம் பொதுவாக சோம்பேறிகளாக அறியப்படுகிறார்கள். அதனாலேயே அவர்கள் நிதி விஷயத்தில் பின்தங்கி இருக்கிறார்கள். வாய்ப்பு வந்தாலும், கடினமாக உழைக்க விரும்பாததால், அவர்கள் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் வெறுமனே தங்கள் ஆறுதல் மண்டலத்தில் தப்பிக்க விரும்புகிறார்கள். இதனால், குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருட இறுதி மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. ஒரு திட்டத்தில் கூடுதல் வேலை, நேரம் மற்றும் முயற்சிகளை அவர்கள் விருப்பத்துடன் செலவிட்டாலும், அதற்கு சமமான வெகுமதிகளைப் பெறுவது கடினம். அவர்கள் அங்கீகாரம் மற்றும் இழப்பீடு பெறுவார்கள் ஆனால் அவர்கள் முயற்சிக்கும், தகுதிக்கும் ஏற்ற பலனை பெற மாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தோல்வி பயம் காரணமாக புதிய வாய்ப்புகளை இழக்கும் அல்லது புதிதாக ஒன்றை தொடங்குவதை தவிர்க்கும் போக்கு உள்ளது. எனவே, சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் விலகிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் நிதி நலனுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் இதுவே சரியான நேரம். தோல்வி பயம் மிகவும் வலுவாக இருப்பதால், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தோல்விகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் நடவடிக்கை மாறாவிட்டால், அவர்களின் நிதிச் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும்.