Just In
- 3 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 3 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 4 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 5 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இந்த 5 ராசிக்காரங்க மாதிரி மோசமான சுயநலவாதியா இருக்க யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன?
நாம் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் சுயநல எண்ணங்கள் நிச்சயம் இருக்கும், இது முற்றிலும் இயற்கையானது.
நாம் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் சுயநல எண்ணங்கள் நிச்சயம் இருக்கும், இது முற்றிலும் இயற்கையானது. ஆனால் அதற்கு உங்களை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது, உங்களின் பிறந்த ராசியும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். நாம் அனைவரும் சுயநலவாதிகள் என்றாலும், நம்மில் சிலர் இந்த பண்பை மற்றவர்களை விட அடிக்கடி பயன்படுத்துகிறோம்.
பெரும்பாலான சுயநலவாதிகள் இது தங்களின் பிரச்சனையல்ல என்றும் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் பிரச்சினையாக 'ஒருபோதும் இருப்பதில்லை. உங்கள் ராசியின் காரணமாக இந்த குணாதிசயம் உங்கள் ஆளுமையை எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியும், அதை எப்படி பெறுவது என்பதும் தெரியும். உறுதியாக இருப்பது ஒரு பெரிய விஷயம் ஆனால் சில நேரங்களில் அது கையை விட்டு போகலாம். மேஷ ராசிக்காரர்கள், தனக்குத்தான் முதலில் என்ற மனப்பான்மையுடன் மிகவும் உறுதியானவர்களில் ஒருவர். அவர்கள் விரும்பியதைப் பெறுவதற்காக மரணம் வரை போராடுகிறார்கள். தியாகங்கள் செய்வது வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அசௌகரியமாக இருப்பதை வெறுக்கிறார்கள், ஆனால் வேறு ஒருவருக்கும் அந்த வாய்ப்பு தேவை என்பதை உணர மறுக்கிறார்கள்.
ரிஷபம்
இவர்கள் நம்பகமானவர்கள் மற்றும் நிலையானவர்கள் என்றாலும், சுயபாதுகாப்பிற்கான அவர்களின் உந்துதல் பெரும்பாலும் அவர்களை பொருள்முதல்வாதி, சுயநலம் மற்றும் பேராசை கொண்டவர்களாக ஆக்குகிறது. அவர்கள் அதிக உணர்திறன், அதிகப்படியான உடைமை மற்றும் அதிக உணர்ச்சிவசப்படும் திறன் கொண்டவர்கள். எதுவுமே இவர்களுக்கு ஒருபோதும் போதாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு தடையையும் எதிர்கொள்வதில் பயமின்றி இருப்பார்கள். நீங்கள் அந்த தடையாக இருந்தால், விளையாட்டு உங்களுக்கு விரைவில் முடிந்துவிடும். ‘நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்கும்' என்று இவர்கள் நம்புகிறார்கள், அதுவே இவர்களையும் சுயநலமாக ஆக்குகிறது. இவர்கள் விரும்புவதை இவர்களின் கண்கள் நேசிக்கின்றன. இவர்களுக்கு உறுதியான மற்றும் உண்மையான உறவுகள் வேண்டுமெனில் இவர்கள் சில தியாகங்களை செய்ய வேண்டுமென்று இவர்கள் உணர வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரரர்கள் மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைத்து குறைபாடுகள் மற்றும் தவறான செயல்கள் மீது கூர்மையாகக் கண் வைத்திருக்கிறார்கள், இது இவர்களுக்குப் நல்லது ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு அல்ல. ஆனால் இந்த பண்பினால் மற்றவர்களை முதலில் விமர்சிக்கிறார்கள். இவர்கள் மீது கடினமாக இருப்பது இன்னும் நல்லது ஆனால் மற்றவர்கள் மீதும் அவ்வாறு இருப்பது நல்லதல்ல என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
இவர்கள் தங்கள் சொந்த சுயநல காரணங்களுக்காக தங்கள் சூழலுக்கு ஏற்ப மாறுகிறார்கள். இந்த மனப்பான்மை அவளது ஒன்றுக்கொன்று மாறக்கூடிய வழிகளுக்கு இட்டுச் செல்கிறது மேலும் இவர்கள் மேலோட்டமானவர்களாகவும், வீணானவர்களாகவும் காணப்படலாம். நீங்கள் இவர்களுடன் பழகினால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு இவர்களின் தேவைகளும், ஆசைகளும் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.