Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த 5 ராசிக்காரங்களுக்கு மோசமான எதிரியே அவங்கதான்... இவங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்குறவங்க...!
நாம் அனைவரும் நமது தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை கூற விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நம் தோல்விகளுக்கு நாம்தான் காரணாமாக இருப்போம்.
நாம் அனைவரும் நமது தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை கூற விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நம் தோல்விகளுக்கு நாம்தான் காரணாமாக இருப்போம். மற்றவர்களிடம் எப்பொழுதும் குறை காணும் நாம் பெரும்பாலும் நமக்குள் இருக்கும் மோசமான குணங்களைப் பற்றி ஆராய மறந்து விடுகிறோம். நமது பேராசை, ஏக்கம், நடத்தை, கோபம் என நமக்குள் இருக்கும் எதிர்மறை குணங்கள் பெரும்பாலும் நம்மை அழிவுப்பாதையை நோக்கி இழுத்துச் செல்கின்றன.

நமக்குள் இருக்கும் எதிர்மறை குணங்களை அறிந்து அவற்றை குறைத்து நேர்மறை குணமாக மாற்றும்போதே நாம் வெற்றியை நோக்கி முதலடி எடுத்து வைப்போம். இல்லயெனில் நமக்கு எதிரியாக நாமே மாறிவிடுவோம், இதுபோன்ற சூழலில் நமக்கு குழியை நாமே தோண்டிவிடுகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்கே மோசமான எதிரிகளாக மாறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமாக இருக்கும் ஒரு போக்கைக் கொண்டுள்ளார்கள், இது அவர்களை விடாமுயற்சியும், உறுதியும் கொண்டவர்களாக உருவாக்குகிறது, ஆனால் அது அவர்களைத் தடுக்கத் தொடங்கும் போது நீண்ட காலத்திற்கு அவர்களை காயப்படுத்தலாம். அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பாததால், இது ஆரோக்கியமற்ற உறவில் அவர்களை இருக்கச் செய்கிறது, மேலும் ஆக்கப்பூர்வமான முடிவையும் எடுக்க விடாமல் தடுக்கிறது. சமநிலையை இவர்கள் கற்றுக்கொள்ளாத வரை ஒருபோதும் இவர்கள் வெற்றியின் பக்கம் திரும்ப முடியாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் பரிபூரணத்தன்மை காரணமாக அவர்களின் சொந்த மோசமான எதிரியாக மறுக்கிறார்கள். எல்லாமே குறைபாடற்றதாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்த வெறித்தனமான எண்ணம் நரம்பியல்வாதத்திற்கு வழிவகுக்கிறது. இவர்கள் தங்களுக்கு அமைத்துக் கொண்ட சாத்தியமற்ற உயர்ந்த மற்றும் பெரும்பாலும் அடைய முடியாத தரநிலைகளைத் அடையத் தவறினால் அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. முக்கிய பிரச்சனை என்னவென்றால், இதற்கு எந்த தீர்வும் இல்லை. இவர்களின் ஒவ்வொரு சாதனைக்குப் பிறகும் அது அவர்களுக்கு அடுத்த இலக்கை நிர்ணயிக்கிறது. அது அவர்களை ஒரு முடிவில்லாத தேடலில் வைக்கிறது, அது அவர்களை ஒருபோதும் அமைதியாக இலக்கை அடைய அனுமதிக்காது.

மிதுனம்
நிதி விஷயத்தில் மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த எதிரியாக மாறுகிறார்கள். இவர்கள் பொறுப்பானவர்களாக இருந்தாலும், பொருட்களின் மீதான இவர்களின் ஆர்வம் இவர்களை அளவின்றி செலவழிக்கச் செய்கிறது. மிகவும் ஆடம்பரமான, ஸ்டைலான, ட்ரெண்டிங்கான விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது அதிக செலவில் அவர்களைத் தள்ளுகிறது. இது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் அர்த்தமற்ற கோபம் அவர்களை அவர்களுக்கே மோசமான எதிரிகளாக மாற்றுகிறது. இவர்கள் எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ இவர்க்ளுக்கு தகுதியானவர்கள் என்று உணர்ந்தால் இவர்கள் மனதில் எழும் ஒரே எண்ணம் பழிவாங்குதல் மட்டும்தான். இவர்களின் பழிவாங்கும் செயல்கள் அவர்களுக்கு ஒரு நல்ல தோற்றம் அல்ல. இது அவர்களின் மோசமான பக்கத்தைக் காட்டும். இதுவே இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் அவர்களின் பாதுகாப்பின்மை காரணமாக அவர்களின் சொந்த மோசமான எதிரியாக மாறுகிறார்கள். அவர்கள் எப்போதும் எதிர்மறையாகவே நினைக்கிறார்கள் மற்றும் அவர்களின் கற்பனையை அவற்றுடன் ஓட விடுகிறார்கள். இது அவர்களின் உறவுகளை தொந்தரனாவதாக மாற்றுகிறது. அனைவரும் தங்களை ஏமாற்றுவதாகவே இவர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு சிறிய கவனக்குறைவும் தங்கள் காதலரின் ஆர்வத்தை வேறொருவர் கவர்ந்ததற்கான அடையாளமாக இவர்கள் நினைப்பார்கள். இதனால் இவர்கள் பெரும்பாலான வாழ்க்கையை தனிமையில் கழிக்க நேரிடுகிறது.



Click it and Unblock the Notifications











