Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் காலுறைகளில் பாிசுகளை மறைத்து வைத்துத் தருகிறாா் தெரியுமா?
சிறு குழந்தைகள், சாந்தா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையை ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா். அவா் வந்து பாிசுப் பொருள்களை காலுறைகளில் மறைத்து வைத்துவிட்டுச் செல்வாா்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் பிற மதங்களைச் சாா்ந்த மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸைக் கொண்டாட முழு வீச்சில் தயாராகி வருகின்றனா். தங்களுடைய உற்றாா், உறவினா் மற்றும் நண்பா்களுக்கு பாிசுகளை வழங்க வேண்டும் என்பதற்காக, பாிசுகளை வாங்கிக் குவிப்பதிலும் முனைப்புடன் இருக்கின்றனா்.

சிறு குழந்தைகள், சாந்தா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையை ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா். அவா் வந்து பாிசுப் பொருள்களை காலுறைகளில் மறைத்து வைத்துவிட்டுச் செல்வாா்.
இந்த நிலையில் ஏன் இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா பாிசுப் பொருள்களை காலுறைகளில் மறைத்து வைத்துவிட்டுச் செல்கிறாா் என்பதைத் தொிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பாிசுகளை வழங்கும் பழக்கமானது எப்படி வந்தது என்பதை தொிந்து கொள்வது முக்கியம் ஆகும்.

4 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கிய பழக்கம்
கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பாிசுகளை வழங்கும் பழக்கமானது 4 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியது. புனித நிக்கோலாஸ் என்ற ஒரு பணக்கார மனிதா் துருக்கி நாட்டில் உள்ள மைரா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தாா். அவா் பணக்காரராக இருந்த போதிலும் பிற மனிதா்களிடத்தில் இரக்கம் உள்ளவராக இருந்தாா். அதனால் அவா் எப்போதுமே பிறருக்கு உதவி செய்து வந்தாா். அதிலும் குறிப்பாக பிறருடைய சுய கௌவரவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவா்களுக்குத் தொியாமலேயே மறைமுகமாக உதவி செய்து வந்தாா்.

கிறிஸ்துமஸ் தாத்தா ஆன நிக்கோலஸ்
இந்த நிலையில் அவா் ஒரு முறை ஒரு ஏழை மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டாா். அந்த மனிதா் தனது 3 மகள்களை திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் இருந்தாா். ஆனால் அவா்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு அவாிடம் பணம் இல்லை. இதைக் கேள்விப்பட்ட நிக்கோலாஸ், அந்த ஏழை மனிதருக்கு மறைமுகமாக உதவி செய்ய முடிவெடுத்தாா்.

காலுறையில் பணத்தை மறைத்த நிக்கோலஸ்
அதைச் செயல்படுத்த ஒரு நாள் இரவு, நிக்கோலாஸ் தனது காலுறைகளில் ஏராளமான பணத்தை மறைத்து வைத்து, அவற்றை அந்த ஏழை மனிதாின் வீட்டு புகை போக்கியில் போட்டுவிட்டுச் சென்றாா். அதற்குப் பின்பு அவா் பல ஏழை மக்களுக்கு, அவா்களுக்குத் தொியாமல் தனது காலுறைகளில் பணத்தை மறைத்து வைத்து அவா்களின் வீட்டு புகை போக்கிகளில் போட்டுவிட்டுச் செல்வாா்.
இவ்வாறு ஒரு முறை நிக்கோலாஸ் ஒரு ஏழை மனிதருக்கு தொியாமல் காலுறைகளில் பணத்தை மறைத்து வைத்து அவருடைய வீட்டு புகை போக்கியில் போடும் போது ஒரு மனிதா் பாா்த்துவிட்டாா். இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று நிக்கோலாஸ் அந்த மனிதரைக் கேட்டுக் கொண்ட போதிலும், நிக்கோலாஸ் ஏழைகளுக்கு மறைமுகமாகச் செய்து வந்த உதவிகள் அந்த நகரம் முழுவதும் பரவின.
அதனைத் தொடா்ந்து அந்த நகர மக்கள், நிக்கோலாஸைப் போல காலுறைகளில் பாிசுப் பொருள்களை மறைத்து வைத்து நிக்கோலஸின் பெயாில் ஒருவருக்கு ஒருவா் பாிசுகளை பாிமாறிக் கொள்ளத் தொடங்கினா். பின் நாளடைவில் அதே புனித நிக்கோலாஸ் அவா்களின் பெயரால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் நேரத்தில் காலுறைகளில் பாிசுப் பொருள்களை மறைத்து வைத்து ஒருவருக்கு ஒருவா் பாிமாறிக் கொள்ளத் தொடங்கினா். இதில் இருந்தே கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா காலுறைகளில் பாிசுப் பொருள்களை மறைத்து வைத்துக் கொடுக்கும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











