Just In
- 1 hr ago Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- 7 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 9 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 11 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
Don't Miss
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னைக்கு இது தான் தீர்வு.. ஆனா மக்கள் ஏற்க மாட்டேங்கிறாங்க..!
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
அகோரிகளின் வாழ்க்கைமுறை என்பது மிகவும் கடினமான அதேசமயம் மிகவும் விசித்திரமான ஒரு வாழ்க்கை முறையாகும். அவர்களின் அன்றாட வாழ்க்கையை நம்மால் ஒருநாள் கூட வாழமுடியாது.
அகோரிகளின் வாழ்க்கைமுறை என்பது மிகவும் கடினமான அதேசமயம் மிகவும் விசித்திரமான ஒரு வாழ்க்கை முறையாகும். அவர்களின் அன்றாட வாழ்க்கையை நம்மால் ஒருநாள் கூட வாழமுடியாது. இவர்களிடம் காணப்படும் சில அருவருக்கத்தக்க மற்றும் விரும்பத்தகாத நடைமுறைகள் மிகவும் தீவிரமானவை. இதனால்தான் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவதற்கு காரணமாகின்றன.
இந்து மதத்தை சேர்ந்தவர்களாலேயே இவர்களின் சில நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, ஏனெனில் இவர்களின் வழிபாட்டு முறைகள் சாதாரண மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இருப்பினும், இவர்கள் மற்றவர்களால் வணங்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வினோதமான பழக்கங்களில் முக்கியமானது பிணங்களை சாப்பிடுவதாகும். அகோரிகள் ஏன் பிணங்களை சாப்பிடுகிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அகோரிகளின் வாழ்க்கைமுறை
அகோரிகளின் அருவருக்கத்தக்க செயல்களில் முக்கியமானவை தூக்கி எறியப்பட்ட பிணங்களின் மாமிசத்தை சாப்பிடுவது, சிறுநீரை குடிப்பது மற்றும் மண்டை ஓட்டில் இருக்கும் கழிவுகளை சாப்பிடுவது போன்றவையாகும். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா கினாராம் என்ற புகழ்பெற்ற அகோரி ஏற்றுக்கொண்ட வழிகளில் இருந்து அவர்கள் இந்த நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
பயங்கரமான பழக்கங்கள்
இறந்த பெரும்பாலான மனித உடல்கள் தகனம் செய்யப்பட்டு, எஞ்சியுள்ளவை கங்கை ஆற்றில் வீசப்பட்டாலும், சில அப்புறப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற அப்புறப்படுத்தப்பட்ட சடலங்களை வைத்திருப்பதில் அகோரி துறவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்த அழுகிய சடலங்களை பல விசித்திரமான வழிகளில் பயன்படுத்துகிறார்கள்.
மண்டை ஓடுகள்
அவர்கள் அழுகிய உடல்களை உட்கார்ந்து தியானத்தில் ஈடுபட தங்கள் இருக்கைகளாகப் பயன்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் மாமிசத்தைக் கிழித்து சாப்பிடுகிறார்கள், அவர்கள் எலும்புகளை உரித்து, தங்கள் வீடுகளில் தொங்கவிடுகிறார்கள். அவர்கள் மண்டை ஓட்டை வெளியே எடுத்து மாலையாக அணிந்துகொள்கிறார்கள் அல்லது உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள கிண்ணங்களாக பயன்படுத்துகிறார்கள்.
அகோரிகளின் பண்புகள்
அகோரி துறவிகள் கடினமான ஆத்மாக்கள் ஆவர். இவர்களின் தேவை மிகவும் குறைவுதான். இவர்கள் உணவுக்காக பிச்சை எடுக்க மாட்டார்கள். ஒதுக்கப்படும் சடலங்களில் இருந்து தனக்கான உணவைப் பெறுவார்கள். தங்களை மூடிமறைக்க அல்லது மோசமான வானிலையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு மிகக் குறைந்த துணி அல்லது முற்றிலும் துணியே தேவையில்லை. இவர்களுக்கு என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, தாங்கள் விரும்பியதை விரும்பும் நேரத்தில் செய்வார்கள்.
அகோரிகளின் தோற்றம்
அவர்கள் உடல் முழுவதும் அழுக்கு மற்றும் சாம்பலை பூசிக்கொண்டு காண்பதற்கு விரும்பத்தகாதவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும் தோன்றுகிறார்கள். வாழ்க்கையில் எதைப் பற்றியும் அவர்களுக்கு கொஞ்சமும் பயம் இருக்காது. அவர்கள் சிரிப்பது, அழுவது, கத்துவது மற்றும் வித்தியாசமான கருத்துக்களை கூறுவது என்று வாழ்க்கையை நகர்த்துவார்கள். பெரும்பாலும் சிலர் தாங்கள் சொல்வதை ஆர்வத்துடன் கவனித்து, அவர்களின் கருத்துக்கள் சில எதிர்கால நிகழ்வுகள் அல்லது வாழ்க்கையின் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன என்று கருதுகின்றனர்.
ஏன் இந்த விசித்திர பழக்கங்கள்?
அகோரி துறவிகள் துறவறத்தின் கடுமையான பாதையில் உள்ளனர். உலகின் அனைத்து பொருட்களின் செல்வங்கள் மற்றும் உடமைகளை அவை நிலையற்றவை மற்றும் ஏமாற்றுவதாகக் கருதுகின்றனர். உலகின் பிடியிலிருந்து மற்றும் அடிமைத்தனங்களிலிருந்து தப்பித்து அறிவொளியை அடைவதற்கான அவர்களின் முயற்சியில், உலகின் ஏமாற்றும் விஷயம் மற்றும் பிணைப்புகளிலிருந்து தங்கள் உடலையும் மனதையும் பிரிக்கும் பாதையை அவர்கள் எடுத்துள்ளனர்.
MOST READ: தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
சுய உணர்தல்
உலகின் பொருட்களையும் வசதிகளையும் கைவிடுவது இவ்வுலக இருப்பைத் தாண்டி அவற்றை உயர்த்தி, முழுமையான உண்மையைப் பற்றிய புதிய புரிதலுக்கு கொண்டு செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட பாதை மிகவும் வழக்கத்திற்கு மாறானது மற்றும் வெறுக்கத்தக்கது என்றாலும், அவர்கள் சுய உணர்தலுக்கான விரைவான பாதையில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
மனித மாமிசத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
மனித உடல் முக்கியத்துவமற்ற மற்றும் தற்காலிகத்தின் சின்னம் என்பது அகோரி துறவிகளின் உறுதியான நம்பிக்கையாகும். உடல் ஆன்மாவை உள்ளடக்கியது மற்றும் காலத்துடன் அதன் மரணத்தை எதிர்கொள்கிறது. ஆத்மா அதன் தற்போதைய உடலை விட்டு வெளியேறிய பிறகு இன்னொரு உடலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மனித மாமிசம் உணர்த்துவது
பூமிக்குரிய வாழ்க்கைக்கு மனிதர்களை பிணைக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று உடலுடன் இணைந்திருப்பது என்றாலும், அழுகிய மாமிசத்தை சாப்பிடுவது மற்றும் தகனம் அல்லது புதைகுழிகளில் வாழ்வது உள்ளிட்ட மிகவும் விரும்பத்தகாத சில வழிகளில் அதை இணைப்பதன் மூலம் உறுதியான வழியைக் கடக்க முடியும் என்று அகோரிகள் நம்புகிறார்கள்.