Latest Updates
-
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
இந்த கோடுகள் நெற்றியில் இருப்பவர்கள் நீண்ட ஆயுளோடு ராஜயோகத்துடன் வாழ்வார்களாம்.. உங்க நெற்றியில் இது இருக்கா?
நம் கை நம் தலைவிதியை வரையறுப்பது போல், நெற்றி நம் எதிர்காலத்தையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது.
நம் கை நம் தலைவிதியை வரையறுப்பது போல், நெற்றி நம் எதிர்காலத்தையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது. வேத ஜோதிடத்தின் படி, இந்த கோடுகள் அனைத்து கிரகங்களாலும் பாதிக்கப்படுகின்றன. சாமுத்திர சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருவர் நெற்றியின் 7 வரிகளைப் பார்த்து அவர்களின் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை அறிந்து கொள்ளலாம்.

நெற்றிக் கோடுகளின் ஜோதிடம் அல்லது மெட்டோபோஸ்கோபி என்பது நெற்றியில் உள்ள வடிவங்கள் மற்றும் கோடுகள் மூலம் ஒரு நபரின் செயல்கள் மற்றும் எதிர்காலத்தைப் படித்து முன்னறிவிப்பதில் கவனம் செலுத்துகிறது. நெற்றியில் உள்ள இந்த கோடுகள் ஒரு நபரின் ஆளுமை மற்றும் நடத்தையைக் குறிக்கின்றன. உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகள் மற்றும் சின்னங்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வட்டக்கோடு
ஒருவருக்கு நெற்றியில் வட்டக் கோடு அல்லது கண்களுக்கு இடையே நேர்கோடு இருந்தால், அவர்கள் எதிர்காலத்தில் வெற்றியாளர்களாக மாறுவார்கள். அவர்கள் சிறந்த பேச்சாளர்கள், வலுவான மற்றும் கவர்ச்சிகரமானவர்கள்.

புருவத்திற்கு இடையேயான கோடுகள்
ஒரு நபர் சிரிக்கும்போது, இரண்டு புருவங்களின் நடுவிலும் கோடுகள் உருவாகின்றன என்றால், அது அவர்களின் இரக்க, ஆன்மீக நடத்தையின் குறியீடாகும். அவர்கள் சாத்வீக குணங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் அனைவருக்கும் உதவுகிறார்கள்.

ஸ்வாதிக் அல்லது திரிசூல முத்திரை
ஒரு நபரின் நெற்றியில் மேல்நோக்கி கோடுகள் அல்லது திரிசூலம் அல்லது ஸ்வஸ்திகா முத்திரை இருந்தால், அவர்கள் ஒரு ஆல்-ரவுண்டரின் குணங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் செல்வம், ஆரோக்கியமான குழந்தை மற்றும் நல்ல துணை மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

பிறை வடிவம்
சனி மற்றும் குரு கோடுகள் மேல் நெற்றியில் பிறை வடிவத்தை உருவாக்கினால், அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. சூரியன் மற்றும் சந்திரன் கோடுகளின் இணைப்பால், அவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்கள்.

உடையாத கோடுகள்
நெற்றியில் உடைக்கப்படாத நான்கு கோடுகள் இருந்தால், அந்த நபரின் வயது 90 ஐ விட நீண்ட காலம் வாழ்கிறார் என்று கூறப்படுகிறது.

வளைந்த கோடு
ஒரு நபரின் நெற்றியில் ஒரே ஒரு ஆழமான வளைந்த கோடு இருந்தால், அத்தகைய நபர் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருப்பார்கள். அவர்கள் கனிவான இதயம் மற்றும் தாராளமான நடத்தை கொண்டவர்கள்.

ஏழு கோடுகள்
ஜோதிட சாஸ்திரப்படி நெற்றியில் ஏழு கோடுகள் உள்ளன. இந்த ஏழு கோடுகள் ஏழு கிரகங்களைக் குறிக்கின்றன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. நெற்றியில் 3 முழுமையான மற்றும் தெளிவான கோடுகள் இருந்தால், அந்த நபர் பணக்காரராகவும், செழிப்பாகவும் மாறுகிறார். மேலும், ஒரு நபருக்கு மெலிந்த அல்லது வெற்று நெற்றியாக இருந்தால், அவர்கள் வறுமையில் வாழ்வார்கள்.



Click it and Unblock the Notifications