Just In
- 43 min ago
40 வயசு ஆயிடுச்சா? மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 4 hrs ago
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- 7 hrs ago
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- 14 hrs ago
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
Don't Miss
- News
74வது குடியரசுத் தினம்.. அக்னி வீரர்கள் முதல் பெண் BSF வீராங்கனைகள் வரை! விழாவில் ஏகப்பட்ட புதுமைகள்
- Movies
அதிர்ச்சி.. இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா விஷம் குடித்து தற்கொலை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- Finance
சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?
- Automobiles
ஓர் இன்ஸ்டாகிராம் பிரபலம் இப்படியா நடந்து கொள்வது? ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு ரூ.17,000 அபராதம் - போலீஸார் அதிரடி
- Sports
சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு சரவெடி விருந்து.. நியூசி,உடனான 3வது ODI.. பிட்ச்-ல் உள்ள சர்ஃபரைஸ்!
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பெண்களுக்கு பல திருமணம் முதல் 5 பைசாவுக்கு விவாகரத்து வரை இந்திய பழங்குடியினரின் அதிர்ச்சியளிக்கும் வழக்கங்கள்
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் நாம் அனைவரும் வேலை மற்றும் பணத்தின் பின்னால் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் போது சமூகத்தின் சில பிரிவினர் தங்கள் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுடன் வாழ விரும்புகிறார்கள். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எவ்வளவு சுலபமாக மாற்றி இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும் , அவர்கள் தங்கள் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுடன் வாழ்வதைத் தேர்வு செய்கிறார்கள்.
நாம் கேள்விப்படும் மற்றும் திரைப்படங்களில் பார்க்கும் விஷயங்களை விட நிச்சயமாக அவர்கள் வித்தியாசமான வாழ்க்கையையே வாழ்கின்றனர். அவர்களின் சில மரபுகள் உண்மையில் நம் பழக்கவழக்கங்களை விட மேம்பட்டதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன, ஆனால் சில பழக்கவழக்கங்கள் உண்மையில் நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளன.

சென்டினலீஸ் பழங்குடி, அந்தமான்
சென்டினலீஸ் பழங்குடியினர் உலகில் இருக்கும் மிகவும் தனித்துவமான பழங்குடியினங்களில் ஒன்றாகும். அவர்கள் "நவீன" சமூகத்துடன் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது முற்றிலும் விரோதமாக இருக்கிறார்கள். அவர்களின் பழங்குடி மரபுகளைப் பற்றி அதிகம் பேச முடியாது, ஏனெனில் வெளியுலகத்திற்கு இதுவரை எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு விசித்திரமான உண்மை ஆவார்கள் வாளிகளை விரும்புகிறார்கள். குறிப்பாக, சிவப்பு வாளிகளை. ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு அம்புகளால் தாக்கப்படாமல் தீவுக்கு ஒப்பீட்டளவில் நெருங்கியபோது, அவர்கள் பன்றிகளுடன் சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் வாளிகளை பரிசாக அளித்தனர். அந்த பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன. விசித்திரமாக, சென்டினலிஸ் சிவப்பு வாளிகளை எடுத்துக் கொண்டனர், ஆனால் பச்சை நிற வாளிகளை கரையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

ஜாரவா பழங்குடி, அந்தமான்
இந்த பழங்குடியினர் சென்டினலீஸ்களைப் போல நவீன மக்களை வெறுக்கவில்லை என்றாலும், அவர்கள் இன்னும் தங்கள் பழங்குடி பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளில் வேரூன்றி உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கிரேட் அந்தமான் ட்ரங்க் சாலையின் கட்டுமானமானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் நவீன உள்ளூர் சமூகங்களால் இந்த பழங்குடியினரை சுரண்டத் தொடங்கியுள்ளது. உணவு விஷயத்தில் ஜாரவாக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்கள் மீன், பன்றிகள் மற்றும் பிற விலங்குகளை ருசிப்பார்கள், ஆனால் அந்த பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மானைக் கூட தொட மாட்டார்கள், அவர்கள் மான்களை புனிதமாக கருதுகிறார்கள். மேலும், ஜாரவாவின் பழங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை பருவமடைந்த பிறகு மாற்றுகிறார்கள். ஒரு சிறுவன் காட்டுப் பன்றியை வேட்டையாடி கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும், ஒரு பெண் குழந்தைக்கு களிமண், பன்றி எண்ணெய் மற்றும் பசை ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, குழந்தைகளுக்கு அவர்களின் புதிய பெயர்களை சூட்டுவதைக் கொண்டாடும் விழா உள்ளது. இந்த பழங்குடியினர் கருத்தடை கொள்கைகளை அறிந்துள்ளனர் மற்றும் மூலிகைகள் மற்றும் தாவரங்களை கருத்தடைகளாக பயன்படுத்துகின்றனர்.

செஞ்சுஸ், ஆந்திரப் பிரதேசம்
செஞ்சுகள் முக்கியமாக ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் செஞ்சு எனப்படும் தெலுங்கு மொழியின் பேச்சுவழக்கைப் பேசுகிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செஞ்சுகள் மற்ற இந்திய பழங்குடியினருடன் ஒப்பிடும்போது, தங்கள் எண்ணங்களில் மிகவும் முன்னேறியவர்களாக இருக்கிறார்கள். செஞ்சு இளைஞர்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோரின் அழுத்தம் அல்லது ஆக்கிரமிப்பு எந்த விதத்திலும் இருப்பதில்லை.. மேலும், அவர்கள் கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள், பொதுவாக அவர்கள் ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வதில்லை. நமது இறுக்கமான சமூகத்தைப் போலல்லாமல், செஞ்சு பழங்குடியினர் விவாகரத்தை அனுமதிக்கிறார்கள், மேலும் விதவைகளும் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இருந்து நம் சமூகம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

பில்ஸ், ராஜஸ்தான்
பில் பழங்குடியினர் இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடியினங்களில் ஒன்றாகும், மேலும் மொத்த ராஜஸ்தானி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 39 சதவீதத்தை உள்ளடக்கியது. பில்ஸ் மிகவும் சுதந்திரமானவர்கள் மற்றும் அவர்களின் சொந்த விதிகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். பில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் பெண்கள் பில் சமூகத்தால் சமமாக நடத்தப்படுகிறார்கள். பழங்குடியின பெண்கள் ஹூக்கா புகைப்பது மற்றும் ஆண்களுடன் வெளிப்படையாக மது அருந்துவது போன்ற செயல்களை சுதந்திரமாக செய்கிறார்கள். மேலும், பில் சமூகம் பலதார மணத்தை நடைமுறைப்படுத்துகிறது, அங்கு ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளவும், அவர்களின் முதல் திருமணத்திற்குப் பிறகு பல கூட்டாளிகளை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

சாந்தால்ஸ், கிழக்கு இந்தியா
கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சாந்தல்கள் முக்கியமாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நகர்ப்புற உலகம் மற்றும் சமூகத்துடன் சில தொடர்புகளைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்கள் சாந்தாலியைத் தவிர வேறு பல மொழிகளைப் பேசுவதால் பன்மொழி பேசுகிறார்கள். இருப்பினும், அவர்களின் எழுதப்பட்ட மொழி புதியது மற்றும் சமீபத்தில் 1925 இல் உருவாக்கப்பட்டது. நாத்திகர்கள் இல்லை என்றாலும், சாந்தல்கள் சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு கோயில்களும் இல்லை சிலைகளும் இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் உள்ளூர் கடவுள்களையும், ஆன்மாக்களையும் வணங்குகிறார்கள். அவர்கள் பேய் பயம் கொண்டவர்கள் மற்றும் தங்கள் பகுதியின் "பேய்களை" சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த பேய்களை சமாதானப்படுத்த பழங்குடியினர் பெரும்பாலும் விலங்குகளை பலி கொடுக்கிறார்கள்.

முண்டாஸ், ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த பழங்குடியினர் எண்ணிக்கையில் சிறியவர்கள், ஆனால் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல, தங்கள் கிராமங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல, மேலும் விளையாட்டு, அரசியல், இலக்கியம், புரட்சியாளர்கள் போன்ற துறைகளில் விருதுகளைப் பெற்றுள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம் தயாள் முண்டாவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பழங்குடியினரின் ஒரு தனித்துவமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எவ்வாறு தங்கள் குடும்பப்பெயர்களைப் பெற்றனர் என்பதுதான். பெயர்கள் கடந்த கால புராணங்களில் இருந்து பெறப்பட்டவை. எ.கா: டோட்ராய் என்ற குடும்பப்பெயர் ஒருமுறை தேனைத் தேடி காட்டுக்குள் சென்ற மனிதனின் பரம்பரைக்குக் காரணம். அவர் ஒரு மரத்தின் குழியில் தேனைக் கண்டார், ஆனால் அதைப் பிரித்தெடுக்கும் முயற்சியில், அவரது முடி மற்றும் உடல் முழுவதும் தேனால் பூசப்பட்டது. கிராம மக்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது தலைமுடியை சுத்தம் செய்து மென்மையாக்க 7 பாத்திரங்கள் எண்ணெயை பயன்படுத்தினார்கள். அப்போதிருந்து, அவரது பெயர் தொட்ராய் ஆனது மற்றும் அவரது பரம்பரை குடும்பப் பெயரைப் பெற்றது! ஒவ்வொரு முண்டா குடும்பப் பெயரும் அவற்றின் தொடக்கத்திற்குப் பின்னால் இதுபோன்ற கதைகள் உள்ளன.

காசி பழங்குடி, மேகாலயா
காசி பழங்குடியினர் ஒரு அழகான அமைதியை விரும்பும் பழங்குடி மற்றும் அவர்கள் பேசும் மொழியின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். பெரும்பாலான காசிகள் தங்கள் பழங்குடி மதத்தை பின்பற்றும் அதே வேளையில், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற பிற மதங்களை ஏற்றுக்கொண்ட பல மதம் மாறியவர்கள் உள்ளனர். பழங்குடியினரை தனித்துவமாக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒரு தாய்வழி பழங்குடியினர், அதாவது அவர்கள் தாய்வழி பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். குழந்தைகளின் குடும்பப்பெயர்கள் தாயின் வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டவை, தந்தையை அல்ல. மேலும், தாய்க்குத்தான் சொத்துரிமை உள்ளது, தந்தைக்கு அல்ல. மேலும், காசி பழங்குடியினர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை விரும்புவதில்லை. விவாகரத்து செய்ய, பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அவருடைய விருப்பத்தை கேள்விக்குட்படுத்த முடியாது, அவரே குழந்தைகளையும் சொத்துக்களையும் வைத்திருக்கிறார்கள். மரணத்திற்குப் பிந்தைய சொத்து / முரண்பட்ட சொத்து எப்போதும் இளைய மகளுக்குச் செல்கிறது. அவர்களைப் பற்றிய மற்றொரு அருமையான விஷயம் அவர்களின் விவாகரத்து முறை. இளைய தலைமுறையினர் நீதிமன்றங்களை நாடினாலும், பெரும்பாலான காசிகள் பாரம்பரிய முறையைப் பின்பற்றுகிறார்கள். கணவன் மனைவிக்கு 5 பைசாவைக் கொடுக்கிறார், அதை மனைவி தன் பணத்தில் இருந்து 5 பைசாவை சேர்த்து திருப்பித் தருகிறார். அந்த நாணயங்களை கிராமத்து பெரியவரிடம் கொடுத்து எறிந்து விடுவார்கள். அவ்வளவுதான் விவாகரத்து முடிந்தது.