Just In
- 32 min ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லையாம்... இவங்க காதல் வாழ்க்கை நரகம்தானாம்...!
- 3 hrs ago குரு புதன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- 5 hrs ago 10 நிமிடத்தில் கடப்பா கார சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News 60 ஆடு.. விடிய விடிய கறிவிருந்து.. மணக்க மணக்க மட்டன் குழம்பு.. திண்டுக்கல்லின் மூக்கை துளைத்து.. அட
- Finance தர ரேட்டுக்கு ஆடம்பர எலக்ட்ரிக் காரை விற்கும் சீனா.. டெஸ்லா மூட்டை முடிச்சை கட்ட வேண்டியது தான்..!
- Movies Prakash Raj Net Worth: பிரகாஷ் ராஜுக்கு இத்தனை வயசாகிடுச்சா?.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
- Technology தேதி குறிச்சாச்சு! Airtel கஸ்டமர்களே உஷார்! இந்த தேதிக்கு பின்னர் ரீசார்ஜ் விலை அதிகரிக்கும்! Jio சிம் ரெடியா?
- Automobiles இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
- Sports CSK : எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. புதிய அஸ்திரத்தை எடுத்த சிஎஸ்கே.. கலக்கத்தில் எதிரணிகள்
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
செல்வ வளத்தை அள்ளித்தரும் பொன் மஞ்சள் அரளிச் செடி..!
மஞ்சள் அரளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பதால், சுத்தமான காற்றோட்டம் கிடைப்பதோடு, மஞ்சள் நிறம் என்பது மங்களத்தின் அடையாளம் என்பதால், அதிக அளவில் செல்வ வளத்தை வீட்டிற்கு கொண்டு வரும் வாஸ்து சாஸ்திரத்தில் க
மஞ்சள் அரளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பதால், சுத்தமான காற்றோட்டம் கிடைப்பதோடு, மஞ்சள் நிறம் என்பது மங்களத்தின் அடையாளம் என்பதால், அதிக அளவில் செல்வ வளத்தை வீட்டிற்கு கொண்டு வரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே வீடுகள் தோறும் மஞ்சள் அரளிச் செடியை தற்போது வளர்க்க தொடங்கிவிட்டனர். போதுமான இடவசதி இல்லாதவர்கள் வீட்டு மாடிகளில் சிறிய தொட்டிகளில் வளர்க்கத் தொடங்கி விட்டனர்.
அன்றைய கால கட்டங்களில் கிராமப் புறங்களில் பெரிய அளவில் வீட்டை கட்டி குடியிருப்பவர்கள், வீட்டை கட்டத் தொடங்கும் போதே, செய்யும் முதல் காரியம், வீட்டின் பின்புறத்தில் வீட்டு உபயோகத்திற்காக காய்கறி தோட்டங்களை அமைப்பார்கள். கூடவே நிழலுக்காகவும், சுத்தமான காற்றோற்றத்திற்காக நாலைந்து தென்னை மரங்களையும், மாமரங்களையும், பூஜைக்காக பூச்செடிகளையும், அழகுக்காக காகிதப் பூ செடியையும் நட்டு வைத்து விடுவார்கள்.
வீட்டை கட்டி முடிக்க குறைந்த பட்சமாக ஆறு மாதங்களாவது ஆகிவிடும். வீடு கட்டி குடியேறிய உடனேயே, வீட்டு தோட்டத்திலிருந்து கிடைக்கும் கிடைக்கும் காய்கறிகளையும், பழங்களையும் தாங்கள் பயன்படுத்திக் கொள்வதோடு அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் தந்து உதவுவார்கள். அதே போல் நகர்ப்புறங்களில் வீடு கட்டுபவர்கள் வீட்டின் மாடியிலேயே சிறிய அளவில் தோட்டங்களை அமைத்து பயன்படுத்தி வந்தார்கள்.
அப்போதெல்லாம், யாருமே வாஸ்து சாஸ்திரம் பற்றியோ, எந்த செடி அல்லது மரத்தை வைத்தால் நல்லது என்பது பற்றியோ அறிந்திருக்கவில்லை. தங்களின் அனுபவ அறிவை வைத்தே எந்த செடியை அல்லது மரத்தை வைத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சிந்தித்து அதன்படியே நடந்தகொண்டார்கள். காலப்போக்கில் வாஸ்து சாஸ்திரம் என்னும் நம்பிக்கை சம்பந்தமான விஷயத்தை மக்கள் சிந்திக்க தொடங்கினார்களோ, அப்போதே மரம் செடி கொடிகளையும் வாஸ்துவோடு சம்பந்தப்படுத்த தொடங்கிவிட்டனர்.