Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
அயோத்தி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது ராமர் கோவிலும், பாபர் மசூதியும் தான். பல வருடங்களாக அயோத்தி வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் தான் திடீரென்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக அயோத்தி பிரச்சனை இருந்தது. இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தது தான் அயோத்தி. இந்த நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அயோத்தி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது ராமர் கோவிலும், பாபர் மசூதியும் தான். பல வருடங்களாக அயோத்தி வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் தான் திடீரென்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய அயோத்தி நகரத்தைப் பற்றி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இக்கட்டுரையில் அயோத்தி நகரத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை #1
விஷ்ணுவின் அவதாரமான ராமர் பிறந்த ஊர் தான் அயோத்தி. எனவே இந்தியாவில் அயோத்தி ஒரு புனிதமான நகரமாக கருதப்படுகிறது.

உண்மை #2
புத்த, சமண, சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் சீன ஆதாரங்களின்படி, அயோத்தி நகரத்தின் பழைய பெயர் "சாகேதா", இது அதன் அற்புதமான கட்டிடங்களுக்கு ஒத்திருக்கிறது.

உண்மை #3
பழங்கால இந்திய ராஜ்ஜியங்களில் ஒன்றான கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது அயோத்தி தான். இந்த பெருமை எப்போதுமே இதற்கு உண்டு.

உண்மை #4
அயோத்தியின் பெருமை அறிந்த பின், இந்தோனேசியாவில் உள்ள யோகயாகார்த்தா மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுதயா போன்ற நகரங்களுக்கு அயோத்தி என பெயரிடப்பட்டது என்பது தெரியுமா?

உண்மை #5
சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஒரு குப்தா ஆட்சியாளர் (அநேகமாக ஸ்கந்தகுப்தா) தான் தனது தலைநகரை சாகேதாவுக்கு மாற்றினார். மேலும் அவர் தான் சாகேதாவின் பெயரை 4 ஆம் நூற்றாண்டில் அயோத்தி என மாற்றினார் என்றும் கூறுகின்றனர்.

உண்மை #6
பயணிகள் அடிக்கடி வரும் நகரமாக அயோத்தி இருந்ததால், கவுதம புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற சாமியார்களுக்கு இது ஒரு முக்கியமான மையமாக மாறியது.

உண்மை #7
ராஜா ஹரிஷ்சந்திரா அல்லது மன்னர் ஹரிச்சத்திராவின் பிறப்பிடமாக அயோத்தி கருதப்படுகிறது. இவர் இந்தியாவில் சத்தியத்தின் சின்னமாக கருதப்படுபவர். இவர் தனது கனவில் ஒரு முனிவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, தனது ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து, குடும்பத்தை விற்று, ஒரு அடிமையாக ஆனார்.

உண்மை #8
தென் கொரியாவிற்கும், அயோத்திக்கும் ஒரு மரபணு தொடர்பு உள்ளது தெரியுமா? ஆம், கொரியாவின் மிகப்பெரிய வம்சத்தின் இளவரசியான ஹியோ ஹ்வாங்-ஓகே அயோத்தியில் கடல் வழி பயணித்தவரின் மகளாகும். இவர் கொரியாவின் காரா வம்சத்தின் ராஜாவான கிம் சுரோவை மணந்தார்.

உண்மை #9
11 ஆம் நூற்றாண்டில் கஹாதவால வம்சத்தால் வைணவத்தை ஊக்குவித்ததன் மூலம், அதாவது வைணவத்திற்கு ராம வழிபாட்டு முறையைக் கொண்டு வந்ததன் மூலம், அயோத்தி இந்தியாவில் ஒரு முக்கியமான புனித யாத்திரை மையமாக உருவெடுத்தது.

உண்மை #10
அயோத்தி மற்றும் கிம்ஹே (தென் கொரியாவில்) நகரங்கள் மார்ச் 2001 இல் சகோதரி நகரங்களாக மாறியது; நவம்பர் 2014 இல் அயோத்தி மற்றும் ஜங்காபூர் (நேபாளத்தில்) நகரங்கள் சகோதரி நகரங்களாக மாறியது.



Click it and Unblock the Notifications