Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
அயோத்தி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது ராமர் கோவிலும், பாபர் மசூதியும் தான். பல வருடங்களாக அயோத்தி வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் தான் திடீரென்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக அயோத்தி பிரச்சனை இருந்தது. இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தது தான் அயோத்தி. இந்த நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அயோத்தி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது ராமர் கோவிலும், பாபர் மசூதியும் தான். பல வருடங்களாக அயோத்தி வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் தான் திடீரென்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய அயோத்தி நகரத்தைப் பற்றி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இக்கட்டுரையில் அயோத்தி நகரத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை #1
விஷ்ணுவின் அவதாரமான ராமர் பிறந்த ஊர் தான் அயோத்தி. எனவே இந்தியாவில் அயோத்தி ஒரு புனிதமான நகரமாக கருதப்படுகிறது.

உண்மை #2
புத்த, சமண, சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் சீன ஆதாரங்களின்படி, அயோத்தி நகரத்தின் பழைய பெயர் "சாகேதா", இது அதன் அற்புதமான கட்டிடங்களுக்கு ஒத்திருக்கிறது.

உண்மை #3
பழங்கால இந்திய ராஜ்ஜியங்களில் ஒன்றான கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது அயோத்தி தான். இந்த பெருமை எப்போதுமே இதற்கு உண்டு.

உண்மை #4
அயோத்தியின் பெருமை அறிந்த பின், இந்தோனேசியாவில் உள்ள யோகயாகார்த்தா மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுதயா போன்ற நகரங்களுக்கு அயோத்தி என பெயரிடப்பட்டது என்பது தெரியுமா?

உண்மை #5
சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஒரு குப்தா ஆட்சியாளர் (அநேகமாக ஸ்கந்தகுப்தா) தான் தனது தலைநகரை சாகேதாவுக்கு மாற்றினார். மேலும் அவர் தான் சாகேதாவின் பெயரை 4 ஆம் நூற்றாண்டில் அயோத்தி என மாற்றினார் என்றும் கூறுகின்றனர்.

உண்மை #6
பயணிகள் அடிக்கடி வரும் நகரமாக அயோத்தி இருந்ததால், கவுதம புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற சாமியார்களுக்கு இது ஒரு முக்கியமான மையமாக மாறியது.

உண்மை #7
ராஜா ஹரிஷ்சந்திரா அல்லது மன்னர் ஹரிச்சத்திராவின் பிறப்பிடமாக அயோத்தி கருதப்படுகிறது. இவர் இந்தியாவில் சத்தியத்தின் சின்னமாக கருதப்படுபவர். இவர் தனது கனவில் ஒரு முனிவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, தனது ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து, குடும்பத்தை விற்று, ஒரு அடிமையாக ஆனார்.

உண்மை #8
தென் கொரியாவிற்கும், அயோத்திக்கும் ஒரு மரபணு தொடர்பு உள்ளது தெரியுமா? ஆம், கொரியாவின் மிகப்பெரிய வம்சத்தின் இளவரசியான ஹியோ ஹ்வாங்-ஓகே அயோத்தியில் கடல் வழி பயணித்தவரின் மகளாகும். இவர் கொரியாவின் காரா வம்சத்தின் ராஜாவான கிம் சுரோவை மணந்தார்.

உண்மை #9
11 ஆம் நூற்றாண்டில் கஹாதவால வம்சத்தால் வைணவத்தை ஊக்குவித்ததன் மூலம், அதாவது வைணவத்திற்கு ராம வழிபாட்டு முறையைக் கொண்டு வந்ததன் மூலம், அயோத்தி இந்தியாவில் ஒரு முக்கியமான புனித யாத்திரை மையமாக உருவெடுத்தது.

உண்மை #10
அயோத்தி மற்றும் கிம்ஹே (தென் கொரியாவில்) நகரங்கள் மார்ச் 2001 இல் சகோதரி நகரங்களாக மாறியது; நவம்பர் 2014 இல் அயோத்தி மற்றும் ஜங்காபூர் (நேபாளத்தில்) நகரங்கள் சகோதரி நகரங்களாக மாறியது.



Click it and Unblock the Notifications











