Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த 5 ராசிக்காரங்ககிட்ட மட்டும் நீங்க சண்டை போடவே கூடாதாம்... இல்லனா உங்களுக்கு ஆபத்தாம்..!
தனுசு ராசி நேயர்கள் வாக்குவாதத்தின்போது, அமைதியாக இருக்க மாட்டார்கள், கத்துவார்கள், கோப்படுவார்கள். அவர்களைத் தூண்டியதற்கு நீங்கள் வருத்தப்படும் அளவிற்கு உங்களிடம் நடந்து கொள்வார்கள்.
சிலர் சண்டைகள் போடுவதில் மிகுந்த கில்லாடியாக இருப்பார்கள். அவர்களிடம் சண்டை போட்டு யாராலும் ஜெயிக்க முடியாது. வாக்குவாதம் என்று வந்துவிட்டால், அதில் யார் சொல்வதையும் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்கள் சண்டையின் வேகம் சற்றும் குறையாமல் சண்டை போடுவார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திலும் அவை அதிக அழிவையே ஏற்படுத்தும். வாக்குவாதம் என்று ஒன்று வந்தால், அதில் அடுத்தவர் கூறுவதையும் நாம் கேட்க வேண்டும். அப்போதுதான் சண்டை முடிவுக்கு வரும். ஆனால், சிலர் எந்த விதத்திலும் அவர்கள் நின்று மற்றவர் சொல்வதைக் கேட்பதில்லை. வாக்குவாதத்தின் போது அத்தகையவர்களிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது.

ஜோதிடம் பன்னிரண்டு ராசி அறிகுறிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மக்கள் தங்கள் ஆளுமையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. எனவே, வாக்குவாதங்களின் போது ஒருபோதும் கேட்காத சிறந்த ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் குறுகிய மனநிலை கொண்டவர்கள் மற்றும் மனக்கிளர்ச்சி இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். வாக்குவாதத்தின் போது முதலில் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் மட்டும் சரி, மற்றவர்கள் அனைவரும் தவறு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தவறாக இருக்கலாம் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். விஷயங்கள் தங்கள் வழியில் செல்லவில்லை என்றால், அவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். அவர்கள் விரும்புவதை மட்டுமே செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் சொந்த கண்ணோட்டத்திற்கு அப்பால் பார்க்க மாட்டார்கள். சூழ்நிலை அவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என்றால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சில நேரங்களில் மிகவும் கோபமாக இருக்கலாம். அவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், ஆனால் அவர்கள் கோபப்படும்போது, அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. வாக்குவாதத்தின் போது மற்றவர்களிடம் என்ன சொன்னாலும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நேரத்தில், அந்த வாக்குவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே இந்த ராசிக்காரர்களின் ஒரே நோக்கம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். வாக்குவாதத்தின்போது, மற்றவர்கள் அவர்களிடம் சொன்னதை மறக்கவே மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் என்றென்றும் அந்த வெறுப்பை மனதில் வைத்திருக்க முடியும், மேலும் அவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் திருப்பி அடிப்பார்கள். எனவே நீங்கள் சொன்னதை அவர்கள் மறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசி நேயர்கள் வாக்குவாதத்தின்போது, அமைதியாக இருக்க மாட்டார்கள், கத்துவார்கள், கோப்படுவார்கள். அவர்களைத் தூண்டியதற்கு நீங்கள் வருத்தப்படும் அளவிற்கு உங்களிடம் நடந்து கொள்வார்கள். மற்றவர் சொல்வதை நிதானமாக கேட்க முடியாத நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஏதோ ஒரு வகையில் தவறாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். தனுசு ராசிக்காரர்களுடன் ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.

இதர ராசிக்காரர்கள்
மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வாக்குவாதத்தின் போது மற்றவர் சொல்வதை நிதானமாகக் கேட்பார்கள். தங்கள் தரப்பைச் சொல்ல பொறுமையாகக் காத்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











