Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கங்கள் இருக்கும். நமது ஒவ்வொரு பழக்கமும், நடத்தையும் ஒவ்வொரு கிரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கங்கள் இருக்கும். நமது ஒவ்வொரு பழக்கமும், நடத்தையும் ஒவ்வொரு கிரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே தான் உங்களின் நடத்தை ஒவ்வொன்றும் உங்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் சாஸ்திரத்தின் படி நடந்து கொள்ளாமல் இருந்தால் அல்லது பழக்கவழக்கங்களானது மோசமானதாக இருந்தால், அதன் விளைவாக ஒருவரது நிதி நிலை பலவீனமாகி, அவர் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிட்டு, வறுமையை நோக்கி செல்ல வேண்டியிருக்கும்.

இது தவிர சில பழக்கவழக்கங்கள் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு கோபத்தை வரவழைத்து, அதன் விளைவாக பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க வைப்பதோடு, ஏழையாக்கும். இப்போது ஒருவரை ஏழையாக்கக்கூடிய அந்த பழக்கவழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.

படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது
நீங்கள் படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் உடனே அப்பழக்கத்தை உடனே தவிர்த்திடுங்கள். ஏனெனில் படுக்கையில் அமர்ந்து உணவு உண்பது வாஸ்து சாஸ்திரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. இம்மாதிரியான பழக்கம் வீட்டில் எதிர்மறையைக் கொண்டு வருவதோடு, குடும்பத்தின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதிக்கும். அதே வேளையில் வீட்டின் வறுமையும் மேலோங்கும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் கொடுப்பது
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்போதும் யாருக்கும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் கடன் சுமை தான் அதிகரிக்கும். அதோடு வீட்டின் மகிழ்ச்சியும், செழிப்பும் குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தூங்கும் முன் சமையலறையை அசுத்தமாக வைப்பது
எப்போதும் வீட்டின் சமையலறையானது சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள பாத்திரங்களை கழுவி விட்டு, சமைலறையை சுத்தமாக வைத்துவிட்டு தான் தூங்க வேண்டும். ஒருவேளை அசுத்தமாக வைத்திருந்தால், நமக்கு அன்னத்தை வழங்கும் அன்னபூரணி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி, வாஸ்து குறைபாடு கொண்ட வீடாக காணப்படும்.

இரவில் துணி துவைப்பது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, இரவு நேரத்தில் துணி துவைப்பது நல்லதாக கருதப்படுவதில்லை. இரவு நேரத்தில் துணி துவைத்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவியிருக்கும். ஏனெனில் இரவு நேரத்தில் தான் எதிர்மறை சக்திகள் அதிகம் உலாவிக் கொண்டிருக்கும். இந்நிலையில் இரவு நேரத்தில் துணி துவைக்கும் போது, அந்த வீட்டில் உள்ளோர் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் இரவு நேரத்தில் வெளியே துணியை காய போட்டால், அந்த ஆடைகளில் எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருக்கும். பின் அந்த ஆடைகளை அணியும் போது, அவர்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து, எந்தவொரு விஷயத்திலும் வெற்றி கிடைக்காமல் தோல்வியை சந்திக்க நேரிடும்.

இரவில் வீட்டை பெருக்குவது
நிறைய பேர் இரவு நேரத்தில் வீட்டை பெருக்குவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் வாஸ்துப்படி, துடைப்பத்தில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டை பெருக்கும் போது, லட்சுமி தேவி கோபப்படுவதோடு, வாஸ்து கடவுள்களும் கோபப்படுவார்கள். எனவே இந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால், வீட்டில் வறுமை வரத் தொடங்கும்.



Click it and Unblock the Notifications