Just In
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த 5 ராசிக்காரங்க அநியாயத்துக்கு இரக்க குணம் உள்ளவர்களாம்... இவங்க அன்புக்கு எல்லையே இல்ல!
மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் தனுசு ராசி நேயர்கள். அவர்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று தேவைப்படும்போது மக்களுக்கு உதவுவதாகும.
அன்பு, கருணை மற்றும் அக்கறை என்பது ஒரு நபருக்கு இருக்கக்கூடிய தூய்மையான பண்புகள். அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருள்கள் மீது இரக்கமும், பச்சாதாபமும் கொண்ட ஒரு கனிவான நபரை அனைவரும் உண்மையிலேயே போற்றுகிறார்கள். அதுபோன்று இருப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும். சிலர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அன்புடன், கருணையுடன் இருப்பார்கள். அது அவர்களின் தூய்மையான மனப்பான்மையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. எப்போதும் அன்புடன் இருக்கும் நபர்கள் மிகக்குறைவு. அப்படி இருக்கும் நபர்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், உங்களுக்கு ஜோதிடம் உதவும்.
ஜோதிடம் பன்னிரண்டு ராசிகளை நிர்ணயிப்பதன் மூலம் ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்க முடியும். எனவே, நீங்கள் கண்டுபிடிக்க உதவ கனிவான ராசி அறிகுறிகள் பட்டியல் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மீனம்
மற்றவர்களுக்கு உதவும்போது மீன ராசி நேயர்கள் மிகவும் நன்றாக உணர்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் அக்கறையுள்ள மற்றும் உண்மையான ஆன்மாவைக் கொண்டுள்ளனர். மற்றவர்கள் புன்னகைப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். எனவே, மற்றவர்கள் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் கூடுதல் மைல் செல்கிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கையின் மேல் அக்கறை செலுத்தும் அன்பானவர்கள் இந்த ராசிக்காரர்கள்.
தனுசு
மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் தனுசு ராசி நேயர்கள். அவர்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று தேவைப்படும்போது மக்களுக்கு உதவுவதாகும். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் விஷயங்களால் சுமையாக இருக்கும் மக்களை அவர்களின் வேடிக்கையான இயல்பு தானாகவே உற்சாகப்படுத்துகிறது. அவர்கள் மிகவும் கவலையற்றவர்களாகவும், கனிவாகவும், நேர்மறையாகவும் இருப்பதால் எல்லோரும் அவர்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள்.
துலாம்
தங்களால் இயன்ற போதெல்லாம் மக்களுக்கு உதவ துலாம் ராசிக்காரர்கள் நிறைய முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அனைவரிலும் அன்பானவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் எப்போதும் துன்பங்களுக்கு மத்தியில் அமைதியான தீர்வுகளைத் தேடுகிறார்கள். அவர்களின் நோக்கம் மகிழ்ச்சி, இரக்கம் மற்றும் தன்னலமற்ற சூழ்நிலைகளை சமநிலைப்படுத்துவதாகும்.
கும்பம்
ஒருவருக்கு உதவும்போது கும்ப ராசி நேயர்கள் மிகவும் உண்மையான சுயமாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தேவைப்படும் மக்களுக்கு உதவ வழிகளைத் தேடுகிறார்கள். அவர்களின் கனிவான இயல்பு அவர்களை மிகவும் அன்பான, மன்னிக்கும் மற்றும் அற்புதமான மனிதர்களாக ஆக்குகிறது. அவர்கள் விசுவாசமான மற்றும் நம்பகமான நண்பர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் மிகவும் விசுவாசமான மனிதர்கள். யாரையும் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார்கள். கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ அவர்கள் எதையும் செய்வார்கள். அவர்களின் கனிவான குணம் எல்லோருக்கும் பிடிக்கும் ஒன்று. அவர்கள் பொறுமை, நல்ல உள்ளம் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள். நீங்கள் விரும்புபவர்களுக்கு மத்தியில், நீங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை இந்த ராசிக்காரர்கள் ஏற்படுத்துவார்கள்.