Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வீட்டில் சிவலிங்கம் வைத்தால் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. இல்லன்னா கஷ்டங்கள் அதிகரிக்கும்...
வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வணங்கக்கூடாது என்பதில்லை. இருப்பினும் வீட்டில் சிவலிங்கத்தை வைப்பதற்கு சில விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறினால் அது ஒருவரின் பாவத்தை அதிகரிப்பதோடு, வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்கும்.
மும்மூர்த்திகளுள் அழிக்கும் கடவுள் தான் சிவபெருமான். இவர் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர்கள் இவ்வுலகில் ஏராளமானோர் உள்ளனர். பொதுவாக சிவபெருமானை வழிபட மக்கள் கோவில்களுக்கு தான் செல்ல வேண்டும். ஏனெனின் சிவலிங்கத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பர்.
ஆனால் சிவனின் பக்தர்கள் சிவபெருமான வழிபட தங்களின் வீடுகளில் சிவலிங்கத்தை நிறுவுகின்றனர். வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வணங்கக்கூடாது என்பதில்லை. இருப்பினும் வீட்டில் சிவலிங்கத்தை வைப்பதற்கு சில விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறினால் அது ஒருவரின் பாவத்தை அதிகரிப்பதோடு, வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்கும். இப்போது வீட்டில் சிவலிங்கம் இருக்கும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.
சரியான இடத்தில் வைக்கவும்
சிவலிங்கத்தை வீட்டில் தொடர்ந்து வழிபட முடியாத இடத்தில் வைக்காதீர்கள். அதோடு சிவலிங்கம் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக சிவன் வைக்கும் இடமானது வசதியாக அமர்ந்து சிவனை வழிபடும் வகையில் இருக்க வேண்டும்.
மஞ்சள் கூடாது
என்ன தான் மஞ்சள் பெண்களின் அழகை அதிகரிக்கும் ஓர் அழகுப் பொருளாகவும், மருத்துவ குணம் நிறைந்த பொருளாக இருந்தாலும், சிவனுக்கு மஞ்சளை படைக்ககூடாது என்பது தெரியுமா? எனவே தெரியாமல் கூட சிவலிங்கத்தின் மேல் மஞ்சளை தடவாதீர்கள்.
குங்குமம் கூடாது
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்ய விரும்புபவர்கள், குங்குமத்தை மறந்தும் லிங்கத்தின் மீது தடவாதீர்கள். ஏனெனில் ஒரு பெண்ணின் கோரிக்கைகளில் கணவனின் நீண்ட ஆயுளுடன் குங்குமமும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. சிவன் ஒரு அழிக்கும் கடவுள். எனவே சிவலிங்கத்தின் மீது ஒருபோதும் குங்குமத்தை பூசக்கூடாது.
தங்கம், வெள்ளி
வீட்டில் வைக்கப்படும் சிவலிங்கம் எப்போதும் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் இருக்க வேண்டும். சிவலிங்கத்தின் மீது பானையில் இருந்து விழுதும் நீர்த்துளிகள் தொடர்ந்து லிங்கத்தின் மீது கொட்ட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
துளசி இலைகள்
துளசி இலைகளை சிவலிங்கத்திற்கு படைக்கக்கூடாது. வேண்டுமானால் வில்வ இலைகளைக் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்யலாம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் எழுந்து குளித்த பிறகு சிவலிங்கத்திற்கு சந்தனம் இட வேண்டும்.
தேங்காய் நீர்
சிவலிங்கத்தின் மீது தேங்காயை நீரால் அபிஷேகம் செய்யக்கூடாது. ஆனால் தேங்காயை படைக்கலாம். அதேப்போல் தாழம் பூ, சம்பங்கி அல்லது செண்பக பூக்களைக் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்யக்கூடாது. ஏனெனில் இந்த பூக்கள் சிவபெருமானால் சபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.