Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நவராத்திரியில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
நவராத்திரியின் முதல் நாளில் கலசம் நிறுவப்பட்டதும், கிரக நிலைகளால் நவராத்திரி காலமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த பொற்காலமாக இருக்கும்.

2022 ஆம் ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 அம் தேதி தொடங்குகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் மிகவும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் முதல் நாளில் கலசம் நிறுவப்பட்டதும், கிரக நிலைகளால் நவராத்திரி காலமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த பொற்காலமாக இருக்கும். ஏனெனில் நவராத்திரியில் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருளுடன், துர்கா தேவியின் ஆசியும் கிடைப்பதால், பலவிதமான நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
துர்கா தேவியின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். திருமணமானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். நவராத்திரி நாட்களில் மேஷ ராசிக்காரர்கள் சிலருக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்
நவராத்திரி காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக துர்கா தேவியின் முழு அருளும் கிடைக்கும். இக்காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் கடின உழைப்பினால் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் துர்கையின் அருள் முழுமையாக கிடைப்பதால், இக்கால கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்களின் நேர்மறையான அணுகுமுறையால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் வரன் தேடி வந்து, திருமணம் கைகூடும்.

விருச்சிகம்
துர்கா தேவியின் ஆசியால் விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சொத்துக்களால் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன்ன உறவு வலுபெறும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிதி நிலை வலுவாகும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். துர்கையின் அருளால் இக்காலத்தில் பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எந்த துறையில் இருந்தாலும் அதில் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். நவராத்திரி காலத்தில் நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். முக்கியமாக இக்காலத்தில் எந்த புதிய வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications