Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
சனி அமாவாசை அன்று இதை செய்தால் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகுமாம்...
ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள்.
2021 சனி அமாவாசை டிசம்பர் 04 ஆம் தேதி ஆகும். இந்த நாளில் தான் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை நாளில் நிகழ்கிறது. சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும்.
சனி பகவான் ஒரு நீதிமான். ஒருவர் கெட்டது செய்தால் அவருக்கு கெடு பலன்களையும், நல்லது செய்தால் நல்ல பலன்களையும் தரக்கூடியவர். எனவே தவறு செய்யாதவர்கள் சனி பகவானைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் சனி பகவான் தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்துவதில்லை.

ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள். அதில் வேலையில் தடங்கல், பணப் பிரச்சனை, எந்த வேலையையும் எளிதில் முடிக்க முடியாமை, திடீர் காயங்கள் அல்லது தொடர்ச்சியான இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்கள் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இதிலிருந்து விடுபட சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை தானமாக வழங்குவது சிறந்த வழியாகும்.
இப்போது சனி அமாவாசை நாளில் எவற்றையெல்லாம் தானமாக வழங்கினால் சனி பகவானின் தாக்கம் குறையும் என்பதைக் காண்போம்.

நல்லெண்ணெய்
சனி பகவானின் கடுமையான தாக்கம் அல்லது தோஷம் நீங்க, ஒரு பௌலில் நல்லெண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பௌலுடன் எண்ணெயை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். ஏனெனில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடிக்கும் என்பதால், இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சி அடைவதாக நம்பப்படுகிறது.

கருப்பு உளுத்தம் பருப்பு
முழு கருப்பு உளுத்தம் பருப்பு ஒரு கருப்புத் துணியில் கட்டி, அதை வெள்ளிக்கிழமை இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் அல்லது அருகில் வைத்து தூங்க வேண்டும். பின் மறுநாள் சனிக்கிழமை அன்று அந்த உளுத்தம் பருப்பு மூட்டையை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். இதனால் சனியின் தாக்கம் குறையும்.

ஆண்டிமினி
ஒரு கருப்பு ஆண்டிமினியை வாங்கி, அதை தலை முதல் கால் வரை 9 முறை வைத்து எடுத்து, நிலத்தில் புதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சனி தோஷம் மற்றும் சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

சனி மந்திரம்
'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌண் சஷ்ண்யே நமஹ்' என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் சனியின் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இவ்வாறு சனி பகவானை மனதில் நினைத்து சொல்வதன் மூலம், சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

சனியின் பாதங்கள்
ஒருவரது ஜாதகத்தில் சனியின் தாக்கம் இருந்தால், அவர்கள் எப்போதும் சனி பகவானை தொழும் போது, சனியின் பாதங்களைத் தான் பார்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சனி பகவானின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து தொழாதீர்கள்.



Click it and Unblock the Notifications