Latest Updates
-
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்!
சனி அமாவாசை அன்று இதை செய்தால் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகுமாம்...
ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள்.
2021 சனி அமாவாசை டிசம்பர் 04 ஆம் தேதி ஆகும். இந்த நாளில் தான் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை நாளில் நிகழ்கிறது. சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும்.
சனி பகவான் ஒரு நீதிமான். ஒருவர் கெட்டது செய்தால் அவருக்கு கெடு பலன்களையும், நல்லது செய்தால் நல்ல பலன்களையும் தரக்கூடியவர். எனவே தவறு செய்யாதவர்கள் சனி பகவானைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் சனி பகவான் தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்துவதில்லை.

ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள். அதில் வேலையில் தடங்கல், பணப் பிரச்சனை, எந்த வேலையையும் எளிதில் முடிக்க முடியாமை, திடீர் காயங்கள் அல்லது தொடர்ச்சியான இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்கள் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இதிலிருந்து விடுபட சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை தானமாக வழங்குவது சிறந்த வழியாகும்.
இப்போது சனி அமாவாசை நாளில் எவற்றையெல்லாம் தானமாக வழங்கினால் சனி பகவானின் தாக்கம் குறையும் என்பதைக் காண்போம்.

நல்லெண்ணெய்
சனி பகவானின் கடுமையான தாக்கம் அல்லது தோஷம் நீங்க, ஒரு பௌலில் நல்லெண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பௌலுடன் எண்ணெயை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். ஏனெனில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடிக்கும் என்பதால், இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சி அடைவதாக நம்பப்படுகிறது.

கருப்பு உளுத்தம் பருப்பு
முழு கருப்பு உளுத்தம் பருப்பு ஒரு கருப்புத் துணியில் கட்டி, அதை வெள்ளிக்கிழமை இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் அல்லது அருகில் வைத்து தூங்க வேண்டும். பின் மறுநாள் சனிக்கிழமை அன்று அந்த உளுத்தம் பருப்பு மூட்டையை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். இதனால் சனியின் தாக்கம் குறையும்.

ஆண்டிமினி
ஒரு கருப்பு ஆண்டிமினியை வாங்கி, அதை தலை முதல் கால் வரை 9 முறை வைத்து எடுத்து, நிலத்தில் புதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சனி தோஷம் மற்றும் சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

சனி மந்திரம்
'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌண் சஷ்ண்யே நமஹ்' என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் சனியின் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இவ்வாறு சனி பகவானை மனதில் நினைத்து சொல்வதன் மூலம், சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

சனியின் பாதங்கள்
ஒருவரது ஜாதகத்தில் சனியின் தாக்கம் இருந்தால், அவர்கள் எப்போதும் சனி பகவானை தொழும் போது, சனியின் பாதங்களைத் தான் பார்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சனி பகவானின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து தொழாதீர்கள்.



Click it and Unblock the Notifications