Just In
- 1 hr ago Today Rasi Palan 26 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுப்பது நல்லது..
- 7 hrs ago மேஷ ராசியில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாத தொடக்கம் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 9 hrs ago இதுல உங்க நெற்றி எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
- 10 hrs ago 1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்...
Don't Miss
- News இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து
- Finance ஏர்டெல் துணை நிறுவனத்தின் ஐபிஓ.. கல்லாகட்டும் மத்திய அரசு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
- Automobiles புதுசா கார் வாங்க போறீங்களா! டாப்5 ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் கொண்ட கார்கள் லிஸ்ட்! எல்லாமே எஸ்யூவி கார்
- Sports என்னை வச்சி தானே விளம்பரம் பண்றீங்க.. அஜித் அகாருக்கு விராட் கோலி மறைமுக குட்டு
- Movies Actress Nayanthara: நயன்தாராவை இயக்கும் சசிகுமார்.. லைன் கட்டும் அடுத்தடுத்த படங்கள்!
- Technology அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும். கனவு அறிவியலின் படி, நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன.
கனவு சாஸ்திரத்தில், ஒவ்வொரு கனவிற்கும் சில அர்த்தம் உள்ளது. சாஸ்திரத்தின் படி, கனவில் காணும் அனைத்துமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் கனவில் காணும் சில விஷயங்கள், பண வரவின் அறிகுறியாக கருதப்படுகிறது. கனவு உலகமானது நிஜ உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் தூங்கும் போது இந்த கனவு உலகிற்கு செல்கிறோம். சில சமயம் நமக்கு வரும் கனவானது நம் ஆழ்மனதின் எண்ணமாக அல்லது ஆசையாக இருக்கும். ஆனால் நாம் காணும் ஒவ்வொரு கனவும் நனவாக வேண்டும் என்ற அவசியமில்லை.
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும். கனவு அறிவியலின் படி, நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன. சில சமயங்களில் அந்த கனவுகள் நல்லவையாகவோ, சில நேரங்களில் அவை மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். இப்போது ஒருவரது கனவில் என்னென்ன விஷயங்களை கண்டால், பணக்காரர் ஆக வேண்டுமென்ற கனவு நனவாகும் என்பதைக் காண்போம்.
விளக்கு
உங்களின் கனவில் தீபம் எரிவது போன்று தென்பட்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் கனவில் விளக்கை காண்பது உங்களைத் தேடி நிறைய பணம் வரப் போகிறது என்பதற்கான அறிகுறி.
காதணி
நீங்கள் தூங்கும் போது கனவில் காதணிகளை காண்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே இந்த கனவு வந்த நாளில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
மோதிரம்
கனவு சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் கனவில் மோதிரம் அணிவதைக் கண்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கனவில் மோதிரம் வருவது லட்சுமி தேவியின் அருள் உங்கள் மீது உள்ளது என்று அர்த்தம்.
பாம்பு
கனவில் பாம்பு வந்தாலே பலரும் அச்சம் கொள்வதுண்டு. ஆனால் ஒருவரது கனவில் பணம் வைக்கும் பெட்டிக்கு அருகே பாம்பைக் கண்டால், அது பணம் உங்களைத் தேடி வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
பால்
நீங்கள் உங்கள் கனவில் பால் குடிப்பது போன்று காண்கிறீர்களா?அப்படியானால் உங்கள் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது, நீங்கள் பணக்காரர் ஆவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
தங்கம்
கனவில் தங்கத்தைக் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கம் லட்சுமி தேவி இருக்கும் பொருளாகும். இந்த தங்கம் ஒருவரது கனவில் வந்தால், அவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உள்ளது என்றும், அவர் விரைவில் பணக்காரர் ஆகப் போகிறார் என்றும் அர்த்தம்.
ரோஸ்
ஒருவர் தனது கனவில் ரோஸ் அல்லது தாமரைப் பூவைக் கண்டால், லட்சுமி தேவியின் அருள் பொழியப் போகிறது என்று அர்த்தம். ஏனெனில் ரோஜா, தாமரை ஆகிய இரண்டுமே லட்சுமி தேவிக்குரிய மலர்களாகும்.