Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
மிகவும் மங்களகரமான மற்றும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரு யோகம் தான் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம். இந்த அரிய யோகமானது குரு மற்றும் சனியினால் உருவாகவுள்ளது.
கிரகங்கள் மற்றம் நட்சத்திரங்களின் இயக்கங்கள் தான் யோகம் மற்றும் தோஷங்கள் உருவாவதற்கு காரணங்களாகும். ஒருவரது ஜாதகத்தில் மங்களகரமான சுப யோகம் உருவானால், அந்நபர் புகழ் மற்றும் வெற்றியின் உச்சியை அடைவார். அதேப் போல் ஒருவரது ஜாதகத்தில் தோஷங்கள் உருவானால், அந்நபர் பல சவால்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

அந்த வகையில் மிகவும் மங்களகரமான மற்றும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரு யோகம் தான் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம். இந்த அரிய யோகமானது குரு மற்றும் சனியினால் உருவாகவுள்ளது. மேலும் இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கப் போகிறது மற்றும் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது.

அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் எப்படி உருவாகிறது?
எப்போது ஒரு கிரகம் நீண்ட காலத்திற்கு 2 ஆவது மற்றும் 11 ஆவது வீடுகளான செல்வத்தின் வீட்டிற்கு செல்கிறதோ, அப்போது அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது உருவாகிறது. வேத ஜோதிடத்தில், இந்த யோகம் நற்பலன்களை வாரி வழங்கும் அற்புதமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால், சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

2023 குருப் பெயர்ச்சி எப்போது?
ஏற்கனவே 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து மீன ராசியில் பயணித்து வரும் குரு பகவான், நட்புறவு கொண்ட செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த குரு பெயர்ச்சியானது 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை 03.33 மணிக்கு நிகழ்கிறது. இந்த குரு பெயர்ச்சிக்கு பின் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்போது இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது ஏராளமான நற்பலன்களை வழங்கவுள்ளது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் திடீரென்று நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் இந்த யோக காலத்தில் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்கு சந்தையில் இருப்பவர்கள், நல்ல நிதி வருமனத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோக காலத்தில் பணப்பிரச்சனைகள் நீங்கி, நல்ல பண பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் பரம்பரை சொத்துக்களில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனை நீங்கி, விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது நல்ல செழிப்பைத் தரும். பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











