Just In
- 42 min ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சனியும், சந்திரனும் உருவாக்கும் விஷ யோகத்தால் இந்த ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகர ராசியில் உருவான விஷ யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில கிரகங்களுடன் சேரும் போது அது சுப, அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 31 ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்குள் நுழைந்தார். அதனால் மகர ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவானது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, விஷ யோகம் மங்களகரமானதாக கருதப்படவில்லை. மகர ராசியில் விஷ யோகம் உருவாகியிருப்பது சில ராசிக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகர ராசியில் உருவான விஷ யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
விஷ யோகமானது மிதுன ராசிக்காரங்களுக்கு தீங்கை விளைவிக்கும். ஏனெனில் இந்த யோகமானது மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம். பணியிடத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது மற்றும் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அதைத் திரும்ப பெறுவது கடினம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு விஷ யோக காலமானது சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. எனவே இந்த காலத்தில் உங்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் வணிகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள நினைத்தால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். இந்த காலக்கட்டத்தில் வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். உங்கள் தாயுடனான உறவு மோசமடையலாம்.
கும்பம்
விஷ யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை அதிகம் உருவாக்கும். ஏனென்றால் இந்த யோகம் கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது பணம் மற்றும் பேச்சு ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த காலத்தில் பண இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மேலும் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரம் மற்றும் வணிகத்தில் லாபம் குறைவாகவே இருக்கும். இக்காலத்தில் எதிர்மறை பலன்களைக் குறைக்க சிவபெருமானை மனதார வணங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)