Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உங்க எல்லா பிரச்சனைகளும் நீங்கி அளவில்லா செல்வத்தை பெற சங்கடஹர சதுர்த்தியன்று இத பண்ணுங்க!
பெளர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருள். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களையும் போக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம்
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபடும் முக்கியமான நாளாகும். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று அவர் வெவ்வேறு பெயராலும், சிலைகள் வைத்தும் வணங்கப்படுகிறார். இந்த நவம்பர் மாத சங்கடஹர சதுர்த்தியன்று, கிருஷ்ண பக்ஷத்தின் நான்காம் நாளில், விநாயகப் பெருமான் கணபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த நாளில், 'சங்கஷ்ட கணபதி பூஜை' நடத்தப்படுகிறது. ஒவ்வொரு விரதமும் விரத கதையில் விளக்கப்பட்டுள்ள காரணத்திற்காக செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒன்று என சுமார் 13 விரத கதைகள் உள்ளன. விநாயக சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி என இரண்டு வகையான விநாயகர் விரதங்கள் உள்ளன. விநாயக சதுர்த்தி விரதம் சுக்ல பக்ஷத்தில் அனுசரிக்கப்படுகிறது, சங்கடஹர சதுர்த்தி கிருஷ்ண பக்ஷத்தில் கொண்டாடப்படுகிறது.

இரண்டில்சங்கடஹர சதுர்த்தி மிகவும் பிரபலமானது. ஏனெனில் இது உங்களின் அனைத்து பிரச்சனைகளில் இருந்து உங்களை முழுமையாக விடுவிக்க உதவுகிறது. விநாயக பெருமானை வழிபட்டு, உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் போக்க நீங்க என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் காணலாம்.

சங்கடஹர சதுர்த்தி
பெளர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருள். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களையும் போக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் ஒரு முறை அனுசரிக்கப்படுகிறது. விநாயகனை இந்நாளில் விரதம் இருந்து வழிப்பட்டால், உங்கள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியையும் எல்லா செல்வங்களையும் பெறுவீர்கள்.

சங்கடஹர சதுர்த்தி தேதி
சங்கடஹர சதுர்த்தி நவம்பர் மாதத்தில் 12ஆம் தேதி வருகிறது. சதுர்த்தி திதி 11 நவம்பர் 2022 அன்று இரவு 8:17 முதல் 12 நவம்பர் 2022 இரவு 10:25 வரை நீடிக்கும். நவம்பர் 12 அன்று இரவு 8:21 மணிக்கு சந்திரன் வானில் உதயமாகும்.

சங்கடஹர சதுர்த்தி விதி மற்றும் சடங்குகள்
- உங்கள் காலை புனித நீராடல் சடங்குகளை முடித்து புதிய ஆடைகளை அணியுங்கள்.
- சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உங்கள் விரதத்தை முழுமையாகக் கடைபிடியுங்கள். மாலையில் சந்திரனைப் பார்த்தவுடன் விரதத்தை முடியுங்கள்.
- பூஜை மற்றும் மந்திரங்களுடன் விநாயகப் பெருமானை வணங்கி, பகலில் கோயில்களுக்குச் செல்லுங்கள்.
- மாலையில், பூஜையைத் தொடங்கும் முன் புனித நீராடுங்கள்.
- விநாயகர் சிலைக்கு முன் தீபம் ஏற்றவும்.
- பூஜையை தடையின்றி நடத்தவும், சடங்கு நடைமுறையைத் தொடங்கவும் இறைவனின் ஆசிர்வாதத்தை பெறுங்கள்.
- சிலையை புதிய ஆடைகளால் அலங்கரியுங்கள்
- சிவப்பு மலர்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், தூபக் குச்சிகள் மற்றும் தூபம் ஆகியவற்றை இறைவனுக்கு வழங்கவும்.
- விநாயகருக்குப் பிடித்தமான இனிப்புகளை அவருக்கு படையலிடுங்கள்.
- பின்னர், இறைவனை போற்றிப்பாடி நோன்பை முடித்துக்கொள்ளவும்.
- இது உங்கள் வீட்டு வாசலில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவருகிறது
- வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்குகிறது.
- இறைவனின் பூஜையால் தடைகள், தடங்கல்கள் நீங்கும்.
- நீங்கள் ஆரோக்கியம் மற்றும் ஞானத்துடன் நீண்ட காலம் வாழ்வீர்கள்
- இது உங்கள் பாவங்கள் அனைத்தையும் நீக்கி உங்களை மோட்சத்திற்கு தயார்படுத்துகிறது

மற்ற சடங்குங்கள்

ஏன் விநாயகருக்கு முதல் பூஜை?
கணாதிப விநாயகர் சங்கடஹர சதுர்த்தி என்பது சிவபெருமான் தனது மகனான விநாயகப் பெருமானுக்கு இறுதித் தீர்ப்பை வழங்கும் ஒரு முக்கியமான நாள். விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, சிவன் மற்றும் பார்வதி ஆகிய கடவுள்களைத் தவிர மற்ற கடவுள்களை விட விநாயகப் பெருமான் உயர்ந்தவர், எனவே அவர் எவருக்கும் முன் முதல் பூஜைக்கு தகுதியானவர். செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்திற்காக விநாயகர் அறியப்படுகிறார். மேலும் எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்கும் முன் அல்லது எங்கும் பயணம் செய்வதற்கு முன்பு அவரை வழிபட்டுத்தான் தொடங்குகிறோம்.




Click it and Unblock the Notifications