Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
சிவபெருமான் புலித்தோலை மட்டும் ஆடையாக அணிந்திப்பதற்கு பின்னால் இருக்கும் புராண காரணம் என்ன தெரியுமா?
கம்பீரமான புலித்தோலை அணிந்து கைலாயத்தில் தியானம் செய்யும் ஈசனை நினைக்கும் போதே பரவசம் ஏற்படும்.
இந்து மதத்தின் முக்கிய கடவுளான சிவபெருமான் எப்போதுமே புதிர் போன்றவர்தான். மற்ற கடவுள்கள் எல்லாம் தங்க நகையுடன் ஜொலிக்கும் பொது ஈசன் மட்டும் எப்போதும் வெறும் புலித்தோலை ஆடையாக அணிந்து புலித்தோலின் மீது தியானம் செய்வதை நாம் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். புலித்தோல் அணியாத ஈசனின் புகைப்படத்தைக் கூட நம்மால் கற்பனை செய்ய இயலாது.

கம்பீரமான புலித்தோலை அணிந்து கைலாயத்தில் தியானம் செய்யும் ஈசனை நினைக்கும் போதே பரவசம் ஏற்படும். ஆனால் ஈசன் இந்த புலித்தோலை அணிந்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? சிவபுராணத்தில் இதற்கான சுவராஸ்யமான காரணம் கூறப்பட்டுள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவபெருமானின் பூலோக வருகை
சிவபுராணத்தின் படி, சிவபெருமான் பூலோகத்தை அடிக்கடி பார்வையிட வருவார். அப்படி ஒருமுறை பூமியில் சுற்றியபோது ஒரு அடர்ந்த வனத்திற்கு சென்றார். அந்த காட்டில் பல ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். ஈசன் எப்போதும் பிறந்த மேனியாகத்தான் இருந்தார், அதைப்பற்றி அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை.

சிவபெருமானின் கவர்ச்சிகரமான உடல்
ரிஷிகளின் மனைவியாக இருந்த போதிலும், சிவபெருமானின் கவர்ச்சிகரமான உடல் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது. அவர்கள் இருப்பதை அவர் அறியாமல் இருந்தார், அவர்கள் இருப்பதை அவர் அறியாமல் இருந்தார். இதனை அறிந்த ரிஷிகள் அவர் ஈசன் என்று அறியாமல் அவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டனர்.

புலித்திட்டம்
வனங்களில் சுற்றித்திரிபவர் ஈசன் என்று அறியாத ரிஷிகள் அவர் தினமும் வரும் வழியில் ஒரு குழியைத் தோண்டினர். சிவபெருமான் குழி அருகில் வந்ததும் அவர்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்த புலியை திறந்து விட்டனர்.

புலிவதம்
ஆதி யோகியான சிவன் எந்த சிரமமும் இல்லாமல் ஒரே நொடியில் அந்த புலியைக் கொன்று அதன் தோலை கிழித்தார். மேலும் தன் வெற்றியின் அடையாளமாக, சிவன் புலியின் தோலைத் தன் உடலில் சுற்றிக்கொண்டார். இவ்வளவு எளிதாக புலியைக் கொன்றவர் சாதாரண மனிதனாக இருக்க முடியாது என்பதை ரிஷிகள் உணர்ந்து அவரின் காலில் விழுந்தனர்.

குறியீட்டு முக்கியத்துவம்
அந்த அத்தியாயத்திலிருந்து, சிவன் புலித் தோலைத் தொடர்ந்து அணிந்தார், இது ஒரு மூர்க்க மிருகத்தின் மீதான வெற்றியை மட்டுமல்ல, மூன்று உலகங்களிலும் தனது சக்தியைக் காட்டியது.

புலியின் முக்கியத்துவம்
புலி சின்னம் சிவபெருமானுடன் மட்டுமல்லாமல் இந்து புராணங்களில் உள்ள பல தெய்வ உருவத்திற்கும் தொடர்பு உள்ளது. உண்மையில், மகிஷாசுரமர்த்தினியாக - மகிஷாசுரன் என்ற அரக்கனை வீழ்த்திய தேவி எப்ப்போதும் ஒரு புலியுடன் சித்தரிக்கப்படுகிறார். புலியை அடக்குவது ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications











