சிவபெருமான் புலித்தோலை மட்டும் ஆடையாக அணிந்திப்பதற்கு பின்னால் இருக்கும் புராண காரணம் என்ன தெரியுமா?

கம்பீரமான புலித்தோலை அணிந்து கைலாயத்தில் தியானம் செய்யும் ஈசனை நினைக்கும் போதே பரவசம் ஏற்படும்.

இந்து மதத்தின் முக்கிய கடவுளான சிவபெருமான் எப்போதுமே புதிர் போன்றவர்தான். மற்ற கடவுள்கள் எல்லாம் தங்க நகையுடன் ஜொலிக்கும் பொது ஈசன் மட்டும் எப்போதும் வெறும் புலித்தோலை ஆடையாக அணிந்து புலித்தோலின் மீது தியானம் செய்வதை நாம் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். புலித்தோல் அணியாத ஈசனின் புகைப்படத்தைக் கூட நம்மால் கற்பனை செய்ய இயலாது.

Reason For Shiva Wearing Tiger Skin in Tamil

கம்பீரமான புலித்தோலை அணிந்து கைலாயத்தில் தியானம் செய்யும் ஈசனை நினைக்கும் போதே பரவசம் ஏற்படும். ஆனால் ஈசன் இந்த புலித்தோலை அணிந்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? சிவபுராணத்தில் இதற்கான சுவராஸ்யமான காரணம் கூறப்பட்டுள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவபெருமானின் பூலோக வருகை

சிவபெருமானின் பூலோக வருகை

சிவபுராணத்தின் படி, சிவபெருமான் பூலோகத்தை அடிக்கடி பார்வையிட வருவார். அப்படி ஒருமுறை பூமியில் சுற்றியபோது ஒரு அடர்ந்த வனத்திற்கு சென்றார். அந்த காட்டில் பல ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். ஈசன் எப்போதும் பிறந்த மேனியாகத்தான் இருந்தார், அதைப்பற்றி அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை.

சிவபெருமானின் கவர்ச்சிகரமான உடல்

சிவபெருமானின் கவர்ச்சிகரமான உடல்

ரிஷிகளின் மனைவியாக இருந்த போதிலும், சிவபெருமானின் கவர்ச்சிகரமான உடல் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது. அவர்கள் இருப்பதை அவர் அறியாமல் இருந்தார், அவர்கள் இருப்பதை அவர் அறியாமல் இருந்தார். இதனை அறிந்த ரிஷிகள் அவர் ஈசன் என்று அறியாமல் அவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டனர்.

புலித்திட்டம்

புலித்திட்டம்

வனங்களில் சுற்றித்திரிபவர் ஈசன் என்று அறியாத ரிஷிகள் அவர் தினமும் வரும் வழியில் ஒரு குழியைத் தோண்டினர். சிவபெருமான் குழி அருகில் வந்ததும் அவர்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்த புலியை திறந்து விட்டனர்.

புலிவதம்

புலிவதம்

ஆதி யோகியான சிவன் எந்த சிரமமும் இல்லாமல் ஒரே நொடியில் அந்த புலியைக் கொன்று அதன் தோலை கிழித்தார். மேலும் தன் வெற்றியின் அடையாளமாக, சிவன் புலியின் தோலைத் தன் உடலில் சுற்றிக்கொண்டார். இவ்வளவு எளிதாக புலியைக் கொன்றவர் சாதாரண மனிதனாக இருக்க முடியாது என்பதை ரிஷிகள் உணர்ந்து அவரின் காலில் விழுந்தனர்.

குறியீட்டு முக்கியத்துவம்

குறியீட்டு முக்கியத்துவம்

அந்த அத்தியாயத்திலிருந்து, சிவன் புலித் தோலைத் தொடர்ந்து அணிந்தார், இது ஒரு மூர்க்க மிருகத்தின் மீதான வெற்றியை மட்டுமல்ல, மூன்று உலகங்களிலும் தனது சக்தியைக் காட்டியது.

புலியின் முக்கியத்துவம்

புலியின் முக்கியத்துவம்

புலி சின்னம் சிவபெருமானுடன் மட்டுமல்லாமல் இந்து புராணங்களில் உள்ள பல தெய்வ உருவத்திற்கும் தொடர்பு உள்ளது. உண்மையில், மகிஷாசுரமர்த்தினியாக - மகிஷாசுரன் என்ற அரக்கனை வீழ்த்திய தேவி எப்ப்போதும் ஒரு புலியுடன் சித்தரிக்கப்படுகிறார். புலியை அடக்குவது ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion