Just In
- 49 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
2022 டிசம்பர் 03 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு செல்லும் போது பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது மனித வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பை நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். அதில் புத்திகாரகனான புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் முதலாவதாக 05 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறவுள்ளார். அதன் பின் டிசம்பர் 28 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லவுள்ளார்.
இதில் புதன் தனுசு ராசிக்கு செல்லும் போது பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும். இப்போது தனுசு ராசியில் புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
பத்ர ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். ஏனெனில் இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது வயது மற்றும் மறைமுக நோய்களுக்கான வீடாகும். எனவே இந்த யோக காலத்தில் இதுவரை பாடாய் படுத்திய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் வாங்குவது நல்லது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
மிதுனம்
பத்ர ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த யோகத்தின் போது மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் இருப்பார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலத்தில் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சூப்பராக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகம் அபரிமிதமான பலன்களைத் தரப்போகிறது. ஏனெனில் புதன் மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது வேலை மற்றும் பணியிடத்திற்கான வீடாகும். இதனால் வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் லாபகரமாக இருக்கும். முதலீடு செய்ய இது ஏற்ற காலமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் இக்காலத்தில் ஆதரவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)