Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
2022 டிசம்பர் 03 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு செல்லும் போது பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது மனித வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பை நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். அதில் புத்திகாரகனான புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் முதலாவதாக 05 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறவுள்ளார். அதன் பின் டிசம்பர் 28 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லவுள்ளார்.

இதில் புதன் தனுசு ராசிக்கு செல்லும் போது பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும். இப்போது தனுசு ராசியில் புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
பத்ர ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். ஏனெனில் இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது வயது மற்றும் மறைமுக நோய்களுக்கான வீடாகும். எனவே இந்த யோக காலத்தில் இதுவரை பாடாய் படுத்திய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் வாங்குவது நல்லது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மிதுனம்
பத்ர ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த யோகத்தின் போது மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் இருப்பார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலத்தில் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சூப்பராக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகம் அபரிமிதமான பலன்களைத் தரப்போகிறது. ஏனெனில் புதன் மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது வேலை மற்றும் பணியிடத்திற்கான வீடாகும். இதனால் வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் லாபகரமாக இருக்கும். முதலீடு செய்ய இது ஏற்ற காலமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் இக்காலத்தில் ஆதரவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications