Just In
- 1 hr ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 2 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மாணிக்கவாசகர் மேல் மட்டும் சிவபெருமானுக்கு ஏன் பாசம் அதிகம் தெரியுமா?
மார்கழி மாதம் என்றாலே, எப்படி ஆண்டாள் திருப்பாவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடலுக்கும் அளிக்கிறோம். மாணிக்கவாசகர் மீது இறைவன் சிவப
இறைவன் ஒருவர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தால் அவருக்காக அடியும் வாங்கிக் கொள்வார் என்பதை சிவன் மீது மாணிக்கவாசகர் வைத்திருந்த அன்பின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். பெண்கள் சிவபெருமானை புகழ்ந்து பாடவேண்டும் என்பதற்காகவே, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் ஆதியும் அந்தமும் காணமுடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்துவதற்காக, 'ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே' எனப் பாடினார். திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த பெண்கள் திருவெம்பாவை பாடல்களை பாடி அண்ணாமலையாரை துதித்தனர்.
மார்கழி மாதம் என்றாலே, எப்படி ஆண்டாள் திருப்பாவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடலுக்கும் அளிக்கிறோம். அது மட்டுமல்லாமல், எந்த ஒரு சின்னஞ்சிறிய கோவிலாக இருந்தாலும், சைவ சமயக் குறவர்கள் என்றழைக்கப்படும் நால்வர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் சிலைகள் கண்டிப்பாக இருக்கும்.
MOST READ: உடலுறவு மூலம் பரவும் இந்த கொடிய புற்றுநோய் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
அதில், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு மாணிக்கவாசகருக்கு உண்டு. இவர்கள் மூவரையும் திருவிளையாடல் புரிந்து தடுத்தாட்கொண்டு தன்னோடு இணைத்துக்கொண்டார். ஆனால் மாணிக்கவாசகரிடம் தன்னுடைய திருவிளையாடலை நடத்தியதோடு நில்லாமல், ஆதியும் அந்தமும் இல்லாத தன்னைப் பற்றி பாடல் பாடச்சொல்லி, அதை தானே தன் கைப்பட எழுதி, அதற்கு திருவாசகம் என்று பெயரிட்டு கையொப்பமும் இட்டு கொடுத்துள்ளார் என்றால், மாணிக்கவாசகர் மேல் இறைவன் எந்த அளவுக்கு பாசம் வைத்திருப்பார்.