Just In
- 2 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 4 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சூரியன் மகர ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கப் போகுது...
சூரியனின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் மகரம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
2022 ஆம் ஆண்டில் சூரிய பகவானின் ராசி மாற்றம் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர ராசியில் நிகழ்கிறது. இந்நாளில் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார். ஜோதிடத்தின் படி, மகர ராசிக்கு சூரியன் செல்வது மிகவும் விசேஷமானது. நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் மகரம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மகர சங்கராந்தி
சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் போது தான் தை மாதம் பிறக்கிறது. இது மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தான் தமிழகத்தில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இருந்து சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்கள் சூரியனின் முழு ஆசிகளைப் பெற தொடங்குகின்றன. மேலும் இந்நாளில் இருந்து பூமியில் சூரிய ஒளி அதிகம் கிடைக்கிறது. இந்த ஆண்டு மகர சங்கராந்தி ஜனவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டு மகர சங்கராந்தி ரோகிணி நட்சத்திரத்தில் தொடங்குகிறது.
ரிஷபம்
இந்த சூரிய பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானது என்பதை நிரூபிக்கப் போகிறது. இந்த சூரியனின் மாற்றத்தால், சிலர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறார்கள். மேலும் இந்த காலத்தில் வேலைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிப்பதால் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தினமும் காலையில் குளித்துவிட்டு சூரிய பகவானை வணங்கினால், சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, சமூகத்தில் மரியாதை அதிகரித்து, தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி நன்மைகளைத் தரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அதே வேளையில் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் இந்தக் காலகட்டத்தில் தேர்வில் தேர்ச்சி பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். சம்பள உயர்விற்கான வலுவான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உங்களுக்குத் தேவையான பணப் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில், இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, இந்த சூரிய பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானது என்பதை நிரூபிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவார்கள். தினசரி வருமானம் உயரும் வாய்ப்பு உண்டாகும். அதே நேரத்தில் நிலம் தொடர்பான வேலையில் இருப்பவர்களும் ஆதாயம் அடைவார்கள்.
மகரம்
சூரியன் மகர ராசிக்கு மாறியிருப்பதால், மகர ராசிக்காரர்களுக்க பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் வெற்றியும், கௌரவமும் கூடும். அதுமட்டுமின்றி அரசு வேலையில் இருப்பவர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும். அதே வேளையில் அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.