Latest Updates
-
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மகா சிவராத்திரி அன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்
2022 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் சிவபெருமானுக்கு பால், பூக்கள், விபூதி, தயிர், வில்வ இலைகள் என்று பல பொருட்களால் அபிஷேகம் செய்து சிவனை வழிபடுவார்கள். பலர் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானை வழிபடுவார்கள்.

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது. மகா சிவராத்திரியால் உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் மேலும் உயரும். வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைகள் முடிவடையும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உண்டு. சிவபெருமானின் அருளால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த நாளில், மேஷ ராசிக்காரர்கள் சிவ சாலிசாவை பாராயணம் செய்து, அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

சிம்மம்
சிவருபெருமானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான சாதனைகளைப் புரிவார்கள். புதிய வேலையைப் பெற நினைப்பவர்களுக்கு அல்லது வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நல்ல வருவாயைப் பெற வாழ்க்கையில் பல புதிய வழிகள் திறக்கப்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வழங்குவது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் புதிய சிந்தனையுடன் முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்
மகா சிவராத்திரி இந்த ராசிக்காரர்களை புதிய சாதனைகளைப் படைக்க வைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்க. சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்நாளில், சிவனுக்கு வில்வ இலைகளைப் படைத்து வழிபடுவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது. அதோடு சில சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications