Latest Updates
-
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மகா சிவராத்திரி அன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்
2022 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் சிவபெருமானுக்கு பால், பூக்கள், விபூதி, தயிர், வில்வ இலைகள் என்று பல பொருட்களால் அபிஷேகம் செய்து சிவனை வழிபடுவார்கள். பலர் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானை வழிபடுவார்கள்.

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது. மகா சிவராத்திரியால் உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் மேலும் உயரும். வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைகள் முடிவடையும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உண்டு. சிவபெருமானின் அருளால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த நாளில், மேஷ ராசிக்காரர்கள் சிவ சாலிசாவை பாராயணம் செய்து, அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

சிம்மம்
சிவருபெருமானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான சாதனைகளைப் புரிவார்கள். புதிய வேலையைப் பெற நினைப்பவர்களுக்கு அல்லது வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நல்ல வருவாயைப் பெற வாழ்க்கையில் பல புதிய வழிகள் திறக்கப்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வழங்குவது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் புதிய சிந்தனையுடன் முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்
மகா சிவராத்திரி இந்த ராசிக்காரர்களை புதிய சாதனைகளைப் படைக்க வைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்க. சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்நாளில், சிவனுக்கு வில்வ இலைகளைப் படைத்து வழிபடுவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது. அதோடு சில சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











