Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மகா சிவராத்திரி அன்று இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா சிவனின் கோபத்துக்கு ஆளாவீங்க...
சிவனை வழிபடும் போது விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நற்பலன் கிடைக்காது. மேலும் சிவபெருமானுக்கு ஒருசில பொருட்களை படைத்து வழிபடக்கூடாது.
Maha Shivratri 2023: சிவபெருமானை நினைத்து மேற்கொள்ளும் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி விரதம். இந்த மகா சிவராத்திரியானது மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி, அதுவும் சனி பிரதோஷத்தன்று வருகிறது. மேலும் இந்த மகா சிவராத்திரியில் சனி, சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு கடவுளை வழிபடும் போதும், அந்த கடவுளுக்கு பிடித்தமான மற்றும் மகிழ்விக்கும் பெருட்களை வாங்கி படைப்போம். ஆனால் அந்த கடவுளுக்கு பிடிக்காத பொருட்களை வாங்கிக் கொடுக்கும் போது, அதன் விளைவாக கெடுபலன்களைப் பெறுவதோடு, அந்த கடவுளின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். அந்த வகையில் சிவனை வழிபடும் போது, அவருக்கு வில்வ இலை, பாங், ஊமத்தம் பூ, பால், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது நல்லது.
சிவனை வழிபடும் போது விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நற்பலன் கிடைக்காது. மேலும் சிவபெருமானுக்கு ஒருசில பொருட்களை படைத்து வழிபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக்கும். இப்போது எந்த பொருட்களை எல்லாம் சிவனுக்கு படைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

துளசி
துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்கிறார். அப்படிப்பட்ட துளசியை சிவபெருமானுக்கு எப்போதும் படைக்கக்கூடாது. லட்சுமி தேவி விஷ்ணு பகவானின் மனைவி. எனவே லட்சுமி தேவி குடியிருக்கும் துளசியை மற்ற கடவுகளுக்கு வழங்கக்கூடாது. முக்கியமாக சிவனுக்கு துளசியை படைப்பது பாவமாக கருதப்படுகிறது.

சங்கை பயன்படுத்தக்கூடாது
சிவபெருமானை வழிபடும் போது சங்கை பயன்படுத்தக்கூடாது. நிறைய பேர் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது, நீரை சங்கில் நிரப்பி அபிஷேகம் செய்வார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. ஏனெனில் சிவபெருமான் சங்கச்சூர்ணா என்ற அரக்கனை அழித்ததால், இவ்வாறு செய்வது கெட்டதாக கருதப்படுகிறது. எனவே தான் சிவனை வழிபடும் போது, சங்கு பயன்படுத்தப்படுவதில்லை.

மஞ்சள்
மஞ்சள் என்ன தான் மங்களகரமான பொருளாக இருந்தாலும், சிவபெருமானை வழிபடும் போது பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் சுடுகாட்டில் சிவன் வசிக்கம் போது, மஞ்சள் சுப காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே தான் சிவ வழிபட்டால், மஞ்சள் தடை செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு நிற பொருட்கள்
சிவனை வழிபடும் போது சிவப்பு நிற பொருட்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக செம்பருத்தி போன்ற சிவப்பு நிற பூக்களை சிவனுக்கு படைக்கக்கூடாது. இந்த பூ சிவனை மகிழ்ச்சியுற செய்வதற்கு பதிலாக கோபத்தை தான் வரவழைக்கும்.

தாழம்பூ
தாழம்பூ சிவபெருமானுக்கு படைக்கக்கூடாத பூக்களில் முதன்மையானது. ஒருவேளை அந்த பொருட்களை சிவனுக்கு படைத்தால், சிவனின் அருள் கிடைப்பதற்கு பதிலாக கோபத்திற்கே ஆளாக நேரிடும். ஏனெனில் புராணத்தில் தாழம்பூ சிவனிடம் சாபத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

குங்குமம்
மஞ்சளுக்கு அடுத்தப்படியாக குங்குமம் மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. அதனால் தான் இறைவனை வழிபடும் போது குங்குமம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சிவபெருமானுக்கு குங்குமத்திற்கு பதிலாக சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிவனுக்கு குங்குமத்தை படைக்கக்கூடாது. அவ்வாறு செய்வது சிவனை அவமதிப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. எனவே மறந்தும் சிவனுக்கு குங்குமத்தை படைக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











