Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
உங்க ஆசை நிறைவேறணுமா? அப்ப மகா சிவராத்திரி அன்று உங்க ராசிப்படி சிவனை வழிபடுங்க...
மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபட்டு வந்தால், சிவனின் அருளால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதுவும் சிறப்பான பலனைப் பெற, ஒவ்வொரு ராசிக்காரரும் அவர்களின் ராசிப்படி சிவனை வழிபட வேண்டும்.
Maha Shivratri 2023: அம்மனுக்கு நவராத்திரி என்றால், சிவனுக்கு மகாசிவராத்திரி. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த சிவராத்திரி சிவன் பார்வதியின் திருமண இரவாக கருதப்படுகிறது. இந்நாளில் தான் பார்வதி தேவி விரதமிருந்து சிவனின் பாதியானார் மற்றும் இதுப்போன்று பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபட்டு வந்தால், சிவனின் அருளால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதுவும் சிறப்பான பலனைப் பெற, ஒவ்வொரு ராசிக்காரரும் அவர்களின் ராசிப்படி மகா சிவராத்திரி நாளில் சிவனை வழிபட வேண்டும். இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி சிவனை வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு சிவப்பு சந்தனம் மற்றும் சிவப்பு நிற மலர்களால் பூஜை செய்ய வேண்டும். மேலும் "ஓம் நாகேஸ்வராய நம" என்னும் மந்திரத்தை 51 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று மல்லிகை பூக்களால் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். அத்துடன் சிவபெருமானின் ருத்ராஷ்டகத்தை சொல்ல வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு ஊமத்தம் பூ வாங்கி கொடுத்து வழிபட வேண்டும். மேலும் சிவபெருமானுக்கு ஊமத்தம் பூவால் பூஜை செய்யும் போது, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மகா சிவராத்திதி நாளன்று சிவபெருமானுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்வதோடு, சிவபெருமானின் ருத்ராஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று சிவனின் அருளைப் பெற விரும்பினால், சிவாலயத்தில் அமர்ந்து, ஸ்ரீ சிவ சாலிசாவை சிவராத்திரி இரவு முழுவதும் சொல்ல வேண்டும்.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானுக்கு ஊமத்தம் பூ மற்றும் பாங் போன்ற பொருட்களை மகா சிவராத்திரி நாளில் வாங்கி கொடுத்து, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொல்வதோடு, சிவ சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் தயிர் அல்லது பாலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சிவாஷ்டகம் மற்றும் சிவன் சஹஸ்ரநாமத்தை பாராயம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் ரோஜா மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். அதோடு, ஓம் அங்கரேஷ்வராய நம என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சிவனின் அருளைப் பெற மகா சிவராத்திரி நாளன்று மஞ்சள் நிற பூக்களை வாங்கி சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் சிவாஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் ஊமத்தம் பூ, பாங் போன்றவற்றை வாங்கி சிவனுக்கு கொடுக்கு சிவபெருமானை வழிபட வேண்டும். இது தவிர, ஓம் பார்வதி நாதயை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளன்று பால், தயிர், சர்க்கரை, நெய், தேன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதோடு, ஓம் நமசிவாய நமஹ என்ற மந்திரத்தையும், சிவாஷ்டகத்தையும் பாராயணம் செய்ய வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தம், தயிர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பூக்களை வாங்கி கொடுக்க வேண்டும். அதோடு ஓம் பாமேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











