Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
சந்திர கிரகண நாளில் உருவாகும் சிறப்பான யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இந்து மதத்தில் கிரகணங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சந்திர கிரகணம் மற்றும் 2 சூரிய கிரகணம். இவற்றில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இந்த சந்திர கிரகண நாளில் இரண்டு சுப யோகங்கள் உருவாகி வருவதால், இந்நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. அதோடு இந்த சந்திர கிரகணம் வைகாசி மாதத்தின் பௌணர்மி நாளில் வருகிறது. இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவதும், தானம் செய்வதும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை
கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது என்பது நம்பிக்கை. கிரகண காலத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்படும். இருப்பினும் எப்படி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லையோ, அதேப் போல் சந்திர கிரகணமும் தெரியாது. இதனால் இந்தியாவில் சூதக் காலம் எதுவும் இல்லை. ஆனால் இந்த சந்திர கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரப் போகிறது.

சந்திர கிரகணத்தின் போது உருவாகும் சிறப்பு யோகங்கள்
இந்து நாட்காட்டியின் படி, ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் காலை 6.16 மணி வரை வரியன் யோகம் இருக்கும். இந்த யோக காலத்தில் மேற்கொள்ளும் எந்த வேலையும் வெற்றிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. மே 16 ஆம் தேதி காலை முதல் மதியம் 2.30 மணி வரை, பரிகா யோகம் இருக்கும். இந்த யோகத்தில் எதிரிகள் வீழ்த்தப்பட்டு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேஷம்
சந்திர கிரகணத்தின் போது மேஷ ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் நற்பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சாதகமான காலம். இந்நாளில் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமாக இருக்கப் போகிறத. இக்காலத்தில் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு இந்நாளில் திருமண வரன் உங்களைத் தேடி வரக்கூடும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த சந்திர கிரகணம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். பணியிட மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications