Just In
- 1 min ago
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
- 53 min ago
உங்க நோயெதிர்ப்பு சக்திய பலமடங்கு அதிகரிக்க...தினசரி நீங்க இத பண்ணா போதுமாம்...!
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- 16 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
Don't Miss
- News
ஹெலிகாப்டரில் வந்து ஏர்போர்ஸில் ரிட்டர்ன்.. பக்கா பிளானோடு தமிழ்நாடு வரும் மோடி.. நாளை அது நடக்குமா?
- Sports
ஐபிஎல் எலிமினேட்டர்- பெங்களூரு, லக்னோ அணிகள் இன்று மோதல்.. சாதிப்பாரா கோலி? ராகுல் அளிக்கும் சவால்
- Automobiles
ஒரு போதும் ஸ்கிட் ஆகி கீழே விழ மாட்டீங்க... சூப்பரான அம்சங்களுடன் கோமகியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
- Finance
இந்தியாவிடம் கெஞ்சிய ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா.. எதற்காக..?
- Movies
Top Gun Review: ஃபைட்டர் ஜெட் விமானியாக டாம் க்ரூஸ் தனது மிஷன் இம்பாசிபிளை முடித்தாரா? இல்லையா?
- Technology
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சந்திர கிரகண நாளில் உருவாகும் சிறப்பான யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
இந்து மதத்தில் கிரகணங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சந்திர கிரகணம் மற்றும் 2 சூரிய கிரகணம். இவற்றில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இந்த சந்திர கிரகண நாளில் இரண்டு சுப யோகங்கள் உருவாகி வருவதால், இந்நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. அதோடு இந்த சந்திர கிரகணம் வைகாசி மாதத்தின் பௌணர்மி நாளில் வருகிறது. இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவதும், தானம் செய்வதும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை
கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது என்பது நம்பிக்கை. கிரகண காலத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்படும். இருப்பினும் எப்படி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லையோ, அதேப் போல் சந்திர கிரகணமும் தெரியாது. இதனால் இந்தியாவில் சூதக் காலம் எதுவும் இல்லை. ஆனால் இந்த சந்திர கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரப் போகிறது.

சந்திர கிரகணத்தின் போது உருவாகும் சிறப்பு யோகங்கள்
இந்து நாட்காட்டியின் படி, ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் காலை 6.16 மணி வரை வரியன் யோகம் இருக்கும். இந்த யோக காலத்தில் மேற்கொள்ளும் எந்த வேலையும் வெற்றிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. மே 16 ஆம் தேதி காலை முதல் மதியம் 2.30 மணி வரை, பரிகா யோகம் இருக்கும். இந்த யோகத்தில் எதிரிகள் வீழ்த்தப்பட்டு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேஷம்
சந்திர கிரகணத்தின் போது மேஷ ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் நற்பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சாதகமான காலம். இந்நாளில் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமாக இருக்கப் போகிறத. இக்காலத்தில் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு இந்நாளில் திருமண வரன் உங்களைத் தேடி வரக்கூடும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த சந்திர கிரகணம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். பணியிட மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது.