Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லட்சுமி நாராயண யோகத்தால் அடுத்த 2 நாட்கள் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் கடைசி யோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த யோகத்தால் ஆண்டின் கடைசி 2 நாட்கள் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் யோகங்களானது கிரகங்களின் சேர்க்கைகளால் உருவாகும். யோகங்களில் பல ராஜயோகங்கள் உள்ளன. அதில் ஒரு மங்களகரமான ராஜயோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகிறது. ஏற்கனவே புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 2022 டிசம்பர் 29 ம் தேதி நுழைந்தார். அதைத் தொடர்ந்து 2022 டிசம்பர் 29 ஆம் தேதி ஆடம்பரம், காதல், அழகு, செல்வம் ஆகியவற்றின் அதிபதியான சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழைந்தார்.
சுக்கிரன் மகர ராசிக்கு வந்ததும், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மகர ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவானது. இந்த ராஜயோகம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே நீடித்திருக்கும். ஏனெனில் புதன் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். 2022 ஆம் ஆண்டின் கடைசி யோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த யோகத்தால் ஆண்டின் கடைசி 2 நாட்கள் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராய ராஜயோக காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். வணிக விரிவாக்கத்திற்கான திட்டங்கள் நிறைவேறும். வேலையை மாற்ற திட்டமிட்டால், அதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவாகும்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் அனைத்து சுகங்களையும் பெற முடியும். நண்பர்களுடன் தொலைதூர பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தாயுடனான உறவு வலுவாகும். இந்த யோகத்தின் பார்வை பத்தாவது வீட்டில் விழுவதால், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இது அன்பு, உறவு, குழந்தைகள் ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் காதல் உறவுகளில் இனிமை இருக்கும். காதலித்துக் கொண்டிருந்தால் வரக்கூடிய புத்தாண்டில் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மறுபுறம் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)