Just In
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்ப கிருஷ்ண ஜெயந்தி அன்று இத செய்யுங்க...
அன்னை லட்சுமி தேவி மற்றும் கிருஷ்ணரின் ஆசியைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரம் தான் கிருஷ்ணர். இவர் உலகில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பிறந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாள் தான் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியில் பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்றே கூற வேண்டும்.
ஏனெனில் அஷ்டமி திதியானது 18 ஆம் தேதி நள்ளிரவு 1.49 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நள்ளிரவு 2.47 மணிக்கு முடிவடைகிறது. ஆகவே பலரும் உதய திதியை முன்னிட்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடவுள்ளனர். இன்னும் சிலர் அஷ்டமி திதிக்கு முன்னுரிமை அளித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதியே கொண்டாடினார்கள். அன்னை லட்சுமி தேவி மற்றும் கிருஷ்ணரின் ஆசியைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
மஞ்சள் நிற மாலை
கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்த பின்னர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று கிருஷ்ணருக்கு மஞ்சள் நிற மலர் மாலையை வாங்கி அணிவியுங்கள். இப்படி செய்வதன் மூலம் கிருஷ்ணரின் அருளைப் பெறுவதோடு, பணம் வருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
வலம்புரி சங்கு நீர்
உங்களின் ஆசைகள் நிறைவேற வேண்டுமா? அப்படியென்றால் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வலம்புரி சங்கில் நீரை நிரப்பி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதோடு பெயரும் புகழும் பெருகும்.
வெள்ளை நிற இனிப்புகள்
உங்கள் தொழிலில் வளர்ச்சியைக் காண வேண்டுமெனில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் 7 பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு பாயாசம் அல்லது வெள்ளை நிற இனிப்புக்களைக் கொடுங்கள். அதன் பின் ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இம்மாதிரி செய்யுங்கள். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். மேலும் உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
குங்கும பால் அபிஷேகம்
கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளன்று இரவு 12 மணிக்கு குங்குமம் கலந்த பாலால் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.
பசு அல்லது கன்று சிலை
உங்களுக்கு கிருஷ்ணர் போன்ற அழகான குழந்தை வேண்டுமா? அப்படியென்றால் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் குழந்தை வடிவத்தை வணங்குங்கள். மேலும் இந்நாளில் பசு அல்லது கன்று சிலையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.