Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
இந்த பொருட்களை வீட்டில் வெச்சிருந்தா உங்க அதிர்ஷ்டம் பிரகாசிக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்களேன்...
ஒவ்வொருவரும் சந்தோஷமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.
நாம் அனைவருமே சந்தோஷமாகவும், செல்வ செழிப்போடும் வாழ விரும்புவோம். ஒருவரது வீட்டில் சந்தோஷம் இல்லாவிட்டால் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒருவரது தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை ஒருசில பொருட்களைக் கொண்டு பிரகாசிக்க வைக்க முடியும்.

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஒருசில பொருட்களை வைத்திருப்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிப்பதாக கூறுகிறது. குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்ள வீட்டில் வைத்திருப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். அதோடு ஒருசில பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்படும். அதுமட்டுமின்றி, களிமண்ணால் ஆன பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஆகவே ஒவ்வொருவரும் சந்தோஷமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.

மண் பானை
மண் பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் குடிக்கும் நீர் மட்டுமின்றி உடலும் குளிர்ச்சியாக இருக்கும். வாஸ்துப்படி ஒரு வீட்டில் மண் பானை இருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மண் பானையானது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. அதுவும் வீட்டின் வடக்கு திசையில் மண் பானையை வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அதில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும். காலி மண் பானையை வைத்திருந்தால், அது அதிர்ஷ்டத்தை தராது.

களிமண் சிலைகள்
வீட்டின் வடகிழக்கு மற்றும் தென் மேற்கு திசையில் களிமண் சிலைகளை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இச்செயலால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம். முக்கியமாக இப்படி செய்வதால் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம்.

மண் குவளை
வீட்டின் வடக்கு திசையில் ஒரு மண் குவளையில் தண்ணீரை எப்போதும் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இச்செயலால் தெய்வங்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மண் விளக்குகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெய்வ வழிபாடுகளின் போது மண் விளக்குகளைப் பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கி, சந்தோஷம் பெருகி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மண் பாத்திரங்கள்
வீட்டில் மண் பாத்திரங்களை வைத்திருப்பது மிகவும் மங்களகளரமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இந்த பொருட்களைப் பயன்படுத்துவது வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை சீராக இருக்கும்.



Click it and Unblock the Notifications