Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
வெறும் தண்ணீரை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துரதிர்ஷ்டத்தை எப்படி விரட்டலாம் தெரியுமா?
ருக்கு தூய்மைப்படுத்தும் குணம் இருப்பதால் அது அனைத்து மத கலாச்சாரங்களிலும் முக்கிமான இடம் வகிக்கிறது. குறிப்பாக இந்து மதத்தில் நீருக்கென்று அசாதாரண இடமுள்ளது.
மனிதர்கள் உயிருடன் வாழ அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீர் ஆகும். அதனால்தான் நம் முன்னோர்கள் " நீரின்றி அமையாது உலகு " என்று கூறி வைத்துள்ளனர். மனிதர்கள் மட்டுமின்றி பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் நீர் இன்றி உயிர் முடியாது. நீர் நமது உயிரை காப்பாற்றுவதற்கு மட்டுமல்ல நம் வாழ்க்கை செழிக்கவும் உதவும்.

நீருக்கு தூய்மைப்படுத்தும் குணம் இருப்பதால் அது அனைத்து மத கலாச்சாரங்களிலும் முக்கிமான இடம் வகிக்கிறது. குறிப்பாக இந்து மதத்தில் நீருக்கென்று அசாதாரண இடமுள்ளது. இந்துக்கள் நீரை புனிதமானதாக கருதுகிறார்கள், இந்தியாவில் மொத்தம் ஏழு புனித நதிகள் உள்ளது. கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவேரி ஆகும். இவற்றின் பிறப்பிடங்கள் யாத்திரை ஸ்தலங்களாக கருதப்படுகிறது. தண்ணீர் எப்படி நம் வாழ்க்கையை மாற்ற உதவும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரின் முக்கியத்துவம்
தண்ணீரானது குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படுவதில்லை. அது செல்வம், அதிர்ஷ்டத்தை வழங்குவதுடன் வாழ்க்கையில் இருக்கும் துரதிர்ஷ்டத்தை விரட்டும் ஆற்றல் கொண்டுள்ளது. பண்டைய வேதங்கள் நீர் துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்ற சில வழிகளைக் கூறியுள்ளது.

பரிகாரம் 1
ஒரு பானையில் தண்ணீரை நிரப்பி அதனை சூரியன் கீழ் வைக்கவும். பின்னர், விஷ்ணு மற்றும் சூரியனுக்காக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இந்த தண்ணீரை மா இலை அல்லது அசோக் மரத்தின் இலை மூலம் தெளிக்கவும். இது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை முழுமையாக விரட்டும்.

பரிகாரம் 2
உங்கள் வீட்டின் நுழைவாயிலில், எப்போதும் ஒரே இரவில் கடல் உப்பு கலந்த தண்ணீர் கிண்ணத்தை வைக்கவும். ஒவ்வொரு காலையிலும் தண்ணீரை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைச் செய்வது உங்கள் வீட்டிற்குள் வரும் எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கும்.

பரிகாரம் 3
தினமும் மாலை மாட்டு சாணத்துடன் லோபன் தூபத்தை எரிக்கவும், அதன் புகை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நன்றாக அடைகிறது என்பதை உறுதிப்படுத்தவும். இது வீட்டிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள எந்தவொரு தீய சக்தியையும் தடுக்கிறது.

பரிகாரம் 4
நெய்யில் கற்பூரத்தை நனைத்து ஒவ்வொரு படுக்கையறை மற்றும் நுழைவாயிலின் வாசலில் எரிக்கவும். இந்த பரிகாரம் உங்களுக்கு கேட்ட கனவு ஏற்படாமல் தடுக்கும் மேலும் இது தூக்கமின்மையையும் சரி செய்கிறது.

பரிகாரம் 5
உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து எதிர்மறையை விலக்கி வைக்க நீங்கள் விரும்பினால், சங்கில் தண்ணீர் ஊற்றி அதனை வீடு முழுவதும் தெளிக்கவும். அதன்பின் தினமும் மாலை சங்கு ஊதுவதை வழக்கமாக்குங்கள்.

பரிகாரம் 6
உங்களைச் சுற்றி எதிர்பாராத சில தீய செயல்கள் நடப்பதை நீங்கள் உணர்ந்தால், மாலையில ஒரு வெள்ளை காகிதத்தில் சிறிது உப்பு போட்டு, உங்கள் வீட்டின் மூலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தனை இடங்களில் வைக்கவும். அதிகாலையில் அனைவரும் எழுந்திருக்குமுன், யாருடனும் பேசாமல் வெள்ளைத் தாள்கள் அனைத்தையும் சேகரித்து அவற்றை பாயும் நீரில் மூழ்கடித்து விடுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

பரிகாரம் 7
இறந்த மூதாதையர்களின் புகைப்படங்களை வீடு முழுவதும் வைக்கக்கூடாது என்று வாஸ்து அறிவுறுத்துகிறது. அவை ஒரே இடத்தில் வைக்கப்பட வேண்டும், குறிப்பாக நுழைவாயிலை எதிர்கொள்ளும் இடத்தில் வைக்கக்கூடாது. மேலும், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உடமைகளை விட்டுச்செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற விஷயங்கள் எதிர்மறை மற்றும் தீய சக்தியை ஈர்க்கின்றன, எனவே, வீட்டை வழக்கமாக வண்ணம் தீட்ட வேண்டும் மற்றும் இதுபோன்ற எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

மக்களுக்கு நீர்
பூமியில் வாழ்வதற்கான அமிர்தத்தின் ஒரு வடிவம் நீராகும். இந்துக்களால் நீரானது சுத்திகரிப்பு, உயிரைக் காப்பாற்றுவது மற்றும் பாவத்தை அழிப்பது என்று கருதப்படுகிறது. இந்து மதத்தில், நீர் மற்றும் பால் கருவுறுதலின் அடையாளமாக மதிக்கப்படுகின்றன, இதன் பற்றாக்குறை பலனற்ற தன்மையையும், மலட்டுத்தன்மையையும் மரணத்தைத் தூண்டும்.

கோவில் குளங்கள்
பெரும்பாலான இந்து கோவில்களிலும் அதைச் சுற்றியும், கோவில் குளம் நீர் ஒரு அத்தியாவசிய இடமாக இருப்பதைக் காணலாம். ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் / நகரத்திலும் குறைந்தபட்சம் ஒரு கோவிலாவது குளத்துடன் கட்டப்பட்டிருக்கும். அதில் கணிசமான நீரும் எப்போதும் இருக்கும். பாவத்தை கழுவ மக்கள் புனித நதிகளில் நீராடுவதைப் போல, இந்த கோவில் குளங்களும் இந்த நோக்கத்திற்கு உதவுகின்றன.



Click it and Unblock the Notifications