Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!
பிரதமையில் தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் விரதமிருந்து வழிபடும் நவராத்திரி விழா தசமி திதியில் ‘விஜயதசமி' என்ற பெயருடன் நிறைவடைகிறது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் ஒரு விழா நவராத்திரி விழா. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்பது நாட்கள் இந்த விழா விமரிசையாக நடைபெறும். இந்த நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

'சாரதா நவராத்திரி' என்பது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பக்ஷத்தில் கொண்டாடப்படும். தேவி துர்கையை போற்றும் விதமாக இந்த பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பிரதமையில் தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் விரதமிருந்து வழிபடும் இந்த விழா தசமி திதியில் 'விஜயதசமி' என்ற பெயருடன் நிறைவடைகிறது.
தீமையை நன்மை அழிக்கும் ஒரு நாளாக இந்த நாள் கொண்டாடப்படுவதால் ஸ்ரீ ராமருடன் இந்த நாளை ஒருங்கிணைக்க முடியும். தசரதரின் மகனான ஸ்ரீ ராமர், ராவணனை வீழ்த்தியதும் இதே நாளில் தான் என்று கூறப்படுகிறது. விஜயதசமி நாள் இந்த 2021 ஆம் ஆண்டில் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது மற்றும் அந்த நாளில் சுப முகூர்த்தம் மற்றும் இதர தகவல்களை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.

தசரா மற்றும் விஜயதசமி
தமிழகத்தில் மகிஷாசுரனை துர்கை வதம் செய்த திருநாளை விஜயதசமி தினமாக கொண்டாடப்படுகிறது. அதேப்போல், ராமர் இராவணனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக வட இந்தியாவில் தசரா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி 2021 தேதி:
புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியின் தசமி நாளன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் காலண்டரின் படி, இந்த ஆண்டு அக்டோபர் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. இறைவனின் திருவுருவ சிலையை கரைப்பதற்கான நிகழ்வும் இந்த நாளில் நடைபெறும்.

தசரா 2021 - தசமி திதி மற்றும் பூஜைக்கான சுப முகூர்த்தம்:
இந்த ஆண்டில் தசமி திதி அக்டோபர் 14 ஆம் நாள் மாலை 6.52 தொடங்கி மறுநாள் அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 06.02 மணி வரை உள்ளது.
தீர்க்க பஞ்சாங்கம் அடிப்படையில் பூஜைக்கான நேரம் பின்பவருமாறு:
பூஜைக்கான நேரம் - 01:15 மதியம் முதல் 03:33 மதியம் வரை
விஜய முகூர்த்தம் - 2:01 மதியம் முதல் 2:47 மதியம் வரை

தசராவின் சிறப்பம்சம்:
தசரா பண்டிகை புராணங்களின் படி இரண்டு முக்கிய நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் என்ற கருத்தையே இரண்டு நிகழ்வுகளும் முன்வைக்கிறது.
இந்த நாளில் தேவி துர்க்கை, அரக்கன் மகிஷாசுரனை அழித்து தொடர்ந்து 9 நாட்கள் நடந்த போரில் வெற்றியடைந்தார். இலங்கை அரசன் ராவணனும் மகிஷாசுரன் துர்கா தேவியிடம் தோற்றது போலவே ஸ்ரீ ராமரிடம் தோற்றுவிட்டான். இந்த விதத்தில் தேவி துர்க்கை மற்றும் ஸ்ரீ ராமர் ஆகிய இருவரும் அழிவு மற்றும் துன்பத்தை போக்கி தர்மத்தை நிலைநாட்டினர்.

ராம்லீலா
ராவணனை தோற்கடித்த ஸ்ரீ ராமரின் வெற்றியை நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பாரம்பரியம் ‘ராவண தஹன்' என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராவணன், அவன் மகன் மேகநாத் (இந்திரஜித்) மற்றும் அவன் தம்பி கும்பகர்ணன் ஆகியோரின் உருவ சிலையை எரிப்பதைக் காண மக்கள் கூட்டம் குவியும். ஸ்ரீ ராமர் வேடமணிந்த ஒருவர் ராவணன் மற்றும் மற்ற உருவச்சிலைகள் மீது அம்பு தொடுத்து அவற்றை எரித்து சாம்பலாக்கி விடுவது இந்நாளில் வழக்கம். தீமையை அழிக்கும் ஒரு சடங்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
துளசிதாசரின் ராமசரிதமானஸ் இதிகாசத்தை அடிப்படை கொண்ட நாடகம் நடத்தப்பட்டு நடிகர்கள் அதில் பங்கேற்று நடிப்பார்கள். ராம்லீலா போல் இதுவும் ஒரு பிரபல நிகழ்வாகும். யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ராம்லீலாவும் ஒன்று என்பது ஒரு சுவாரஸ்யமான தகவலாகும்.



Click it and Unblock the Notifications











