Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!
பிரதமையில் தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் விரதமிருந்து வழிபடும் நவராத்திரி விழா தசமி திதியில் ‘விஜயதசமி' என்ற பெயருடன் நிறைவடைகிறது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் ஒரு விழா நவராத்திரி விழா. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்பது நாட்கள் இந்த விழா விமரிசையாக நடைபெறும். இந்த நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

'சாரதா நவராத்திரி' என்பது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பக்ஷத்தில் கொண்டாடப்படும். தேவி துர்கையை போற்றும் விதமாக இந்த பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பிரதமையில் தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் விரதமிருந்து வழிபடும் இந்த விழா தசமி திதியில் 'விஜயதசமி' என்ற பெயருடன் நிறைவடைகிறது.
தீமையை நன்மை அழிக்கும் ஒரு நாளாக இந்த நாள் கொண்டாடப்படுவதால் ஸ்ரீ ராமருடன் இந்த நாளை ஒருங்கிணைக்க முடியும். தசரதரின் மகனான ஸ்ரீ ராமர், ராவணனை வீழ்த்தியதும் இதே நாளில் தான் என்று கூறப்படுகிறது. விஜயதசமி நாள் இந்த 2021 ஆம் ஆண்டில் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது மற்றும் அந்த நாளில் சுப முகூர்த்தம் மற்றும் இதர தகவல்களை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.

தசரா மற்றும் விஜயதசமி
தமிழகத்தில் மகிஷாசுரனை துர்கை வதம் செய்த திருநாளை விஜயதசமி தினமாக கொண்டாடப்படுகிறது. அதேப்போல், ராமர் இராவணனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக வட இந்தியாவில் தசரா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி 2021 தேதி:
புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியின் தசமி நாளன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் காலண்டரின் படி, இந்த ஆண்டு அக்டோபர் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. இறைவனின் திருவுருவ சிலையை கரைப்பதற்கான நிகழ்வும் இந்த நாளில் நடைபெறும்.

தசரா 2021 - தசமி திதி மற்றும் பூஜைக்கான சுப முகூர்த்தம்:
இந்த ஆண்டில் தசமி திதி அக்டோபர் 14 ஆம் நாள் மாலை 6.52 தொடங்கி மறுநாள் அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 06.02 மணி வரை உள்ளது.
தீர்க்க பஞ்சாங்கம் அடிப்படையில் பூஜைக்கான நேரம் பின்பவருமாறு:
பூஜைக்கான நேரம் - 01:15 மதியம் முதல் 03:33 மதியம் வரை
விஜய முகூர்த்தம் - 2:01 மதியம் முதல் 2:47 மதியம் வரை

தசராவின் சிறப்பம்சம்:
தசரா பண்டிகை புராணங்களின் படி இரண்டு முக்கிய நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் என்ற கருத்தையே இரண்டு நிகழ்வுகளும் முன்வைக்கிறது.
இந்த நாளில் தேவி துர்க்கை, அரக்கன் மகிஷாசுரனை அழித்து தொடர்ந்து 9 நாட்கள் நடந்த போரில் வெற்றியடைந்தார். இலங்கை அரசன் ராவணனும் மகிஷாசுரன் துர்கா தேவியிடம் தோற்றது போலவே ஸ்ரீ ராமரிடம் தோற்றுவிட்டான். இந்த விதத்தில் தேவி துர்க்கை மற்றும் ஸ்ரீ ராமர் ஆகிய இருவரும் அழிவு மற்றும் துன்பத்தை போக்கி தர்மத்தை நிலைநாட்டினர்.

ராம்லீலா
ராவணனை தோற்கடித்த ஸ்ரீ ராமரின் வெற்றியை நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பாரம்பரியம் ‘ராவண தஹன்' என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராவணன், அவன் மகன் மேகநாத் (இந்திரஜித்) மற்றும் அவன் தம்பி கும்பகர்ணன் ஆகியோரின் உருவ சிலையை எரிப்பதைக் காண மக்கள் கூட்டம் குவியும். ஸ்ரீ ராமர் வேடமணிந்த ஒருவர் ராவணன் மற்றும் மற்ற உருவச்சிலைகள் மீது அம்பு தொடுத்து அவற்றை எரித்து சாம்பலாக்கி விடுவது இந்நாளில் வழக்கம். தீமையை அழிக்கும் ஒரு சடங்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
துளசிதாசரின் ராமசரிதமானஸ் இதிகாசத்தை அடிப்படை கொண்ட நாடகம் நடத்தப்பட்டு நடிகர்கள் அதில் பங்கேற்று நடிப்பார்கள். ராம்லீலா போல் இதுவும் ஒரு பிரபல நிகழ்வாகும். யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ராம்லீலாவும் ஒன்று என்பது ஒரு சுவாரஸ்யமான தகவலாகும்.



Click it and Unblock the Notifications