Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
காயத்ரி மந்திரம் சொல்லும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா பலன் கிடைக்காது...
காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன.
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் இந்து தர்மத்தில் காயத்ரி மந்திரம் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. பலர் தங்களின் குழந்தைகளுக்கு இந்த காயத்ரி மந்திரத்தை தான் முதலில் கற்பிப்பார்கள். அந்த அளவில் காயத்ரி மந்திரம் இந்துக்களுக்கு முக்கியமானது. அதே சமயத்தில் காயத்ரி மந்திரம் தெய்வ வழிபாட்டிலும் உச்சரிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மந்திரம் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன. இந்த மந்திரத்தை சொல்லும் போது விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறான உச்சரிப்புடன் மந்திரத்தைக் கூறினால், அது வாழ்க்கையை பாதிக்குமாம். இப்போது காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது என்னென்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

காயத்ரி மந்திரம்
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

அசைவ உணவை உண்ணக்கூடாது
காயத்ரி மந்திரத்தை சொல்லும் முன் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் முன் சைவ உணவுகளையே உண்ண வேண்டும். எவ்வித அசைவ உணவுகளையும் உண்ணக்கூடாது. அதுமட்டுமின்றி, அல்கஹாலை அருந்தக்கூடாது.

ஒரு டம்ளர் நீரைக் குடிக்கவும்
காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம், நோய்களில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நீடித்திருக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கியிருக்கும். முக்கியமாக இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகு, ஒரு டம்ளர் நீரை குடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்
காயத்ரி மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தவிர, மதிய வேளையிலும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம். முக்கியமாக காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் இவ்வாறு செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

108 முறை சொல்லவும்
நம்பிக்கைகளின் படி, காயத்ரி மந்திரத்தை சொல்வதாக இருந்தால், குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை 108 ருத்ராட்ச ஜெபமாலைகளைக் கொண்டு சொல்வது இன்னமும் நல்லது. ஏனெனில் ருத்ராட்ச மணிகள் புனிதமானது. இதனால் நற்பலன்களை அதிகம் பெறலாம்.



Click it and Unblock the Notifications











