Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
காயத்ரி மந்திரம் சொல்லும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா பலன் கிடைக்காது...
காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன.
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் இந்து தர்மத்தில் காயத்ரி மந்திரம் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. பலர் தங்களின் குழந்தைகளுக்கு இந்த காயத்ரி மந்திரத்தை தான் முதலில் கற்பிப்பார்கள். அந்த அளவில் காயத்ரி மந்திரம் இந்துக்களுக்கு முக்கியமானது. அதே சமயத்தில் காயத்ரி மந்திரம் தெய்வ வழிபாட்டிலும் உச்சரிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மந்திரம் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன. இந்த மந்திரத்தை சொல்லும் போது விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறான உச்சரிப்புடன் மந்திரத்தைக் கூறினால், அது வாழ்க்கையை பாதிக்குமாம். இப்போது காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது என்னென்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

காயத்ரி மந்திரம்
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

அசைவ உணவை உண்ணக்கூடாது
காயத்ரி மந்திரத்தை சொல்லும் முன் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் முன் சைவ உணவுகளையே உண்ண வேண்டும். எவ்வித அசைவ உணவுகளையும் உண்ணக்கூடாது. அதுமட்டுமின்றி, அல்கஹாலை அருந்தக்கூடாது.

ஒரு டம்ளர் நீரைக் குடிக்கவும்
காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம், நோய்களில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நீடித்திருக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கியிருக்கும். முக்கியமாக இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகு, ஒரு டம்ளர் நீரை குடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்
காயத்ரி மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தவிர, மதிய வேளையிலும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம். முக்கியமாக காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் இவ்வாறு செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

108 முறை சொல்லவும்
நம்பிக்கைகளின் படி, காயத்ரி மந்திரத்தை சொல்வதாக இருந்தால், குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை 108 ருத்ராட்ச ஜெபமாலைகளைக் கொண்டு சொல்வது இன்னமும் நல்லது. ஏனெனில் ருத்ராட்ச மணிகள் புனிதமானது. இதனால் நற்பலன்களை அதிகம் பெறலாம்.



Click it and Unblock the Notifications