Just In
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 3 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காயத்ரி மந்திரம் சொல்லும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா பலன் கிடைக்காது...
காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன.
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் இந்து தர்மத்தில் காயத்ரி மந்திரம் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. பலர் தங்களின் குழந்தைகளுக்கு இந்த காயத்ரி மந்திரத்தை தான் முதலில் கற்பிப்பார்கள். அந்த அளவில் காயத்ரி மந்திரம் இந்துக்களுக்கு முக்கியமானது. அதே சமயத்தில் காயத்ரி மந்திரம் தெய்வ வழிபாட்டிலும் உச்சரிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மந்திரம் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன. இந்த மந்திரத்தை சொல்லும் போது விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறான உச்சரிப்புடன் மந்திரத்தைக் கூறினால், அது வாழ்க்கையை பாதிக்குமாம். இப்போது காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது என்னென்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
காயத்ரி மந்திரம்
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."
அசைவ உணவை உண்ணக்கூடாது
காயத்ரி மந்திரத்தை சொல்லும் முன் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் முன் சைவ உணவுகளையே உண்ண வேண்டும். எவ்வித அசைவ உணவுகளையும் உண்ணக்கூடாது. அதுமட்டுமின்றி, அல்கஹாலை அருந்தக்கூடாது.
ஒரு டம்ளர் நீரைக் குடிக்கவும்
காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம், நோய்களில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நீடித்திருக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கியிருக்கும். முக்கியமாக இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகு, ஒரு டம்ளர் நீரை குடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்
காயத்ரி மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தவிர, மதிய வேளையிலும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம். முக்கியமாக காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் இவ்வாறு செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
108 முறை சொல்லவும்
நம்பிக்கைகளின் படி, காயத்ரி மந்திரத்தை சொல்வதாக இருந்தால், குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை 108 ருத்ராட்ச ஜெபமாலைகளைக் கொண்டு சொல்வது இன்னமும் நல்லது. ஏனெனில் ருத்ராட்ச மணிகள் புனிதமானது. இதனால் நற்பலன்களை அதிகம் பெறலாம்.