Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
தினமும் இந்த விஷயங்களை செய்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. பணப்பிரச்சனையும் இருக்காது..
ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
நாம் அனைவருமே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காகவே அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்கிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். ஏனெனில் சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைய கஷ்டப்படுவார்கள். ஆனால் வெற்றி கிடைக்காது. ஆனால் சிலர் லேசான முயற்சியைத் தான் எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் அதிர்ஷ்டம் தான்.

ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

#1
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் உண்ணும் போது கிழக்கு திசையை நோக்கி உண்ண வேண்டும். கிழக்கு திசையை நோக்கி சாப்பிடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேப் போல் உணவு உண்ணும் போது செருப்புக்களை அணியக்கூடாது.

#2
ஜோதிடத்தின் படி, வீட்டில் வழிபாடு செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீமைக்கருவேல மரத்தின் வேரை கொண்டு வந்து முறைப்படி வழிபட்டு, பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

#3
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கோவிலில் கொடுக்கப்படும் மலர்களை அப்படியே தூக்கிப் போடாமல், ஆற்றிலோ அல்லது ஓடும் நீரிலோ போட வேண்டும். இல்லாவிட்டால் குழியில் புதைக்க வேண்டும்.

#4
காலையில் எழுந்ததும் தவறாமல் பற்களைத் துலக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஏதாவது சாப்பிட வேண்டும். மேலும் குளிக்காமல் கடவுள் சிலையை தொடக்கூடாது. அது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் வீடுகளில் லட்சுமி வாசம் செய்வதில்லை என்பது ஐதீகம்.

#5
ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் கங்கை நீரைத் தெளிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் பரவும். ஒருவேளை கங்கை நீர் கிடைக்காவிட்டால், நீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து அந்நீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.



Click it and Unblock the Notifications