உங்க பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப குரு பகவானை நினைச்சு 11 வியாழக்கிழமை இத செய்யுங்க...

கடன் பிரச்சனை மற்றும் பணப் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறீர்கள் என்றால் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமையில் ஒரு பரிகாரத்தை செய்து வாருங்கள்.

இன்று பலரும் பணக் கஷ்டத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் சம்பாதித்தாலும், நாம் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது என்பது கடினமாக உள்ளது. வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்காக வாங்கும் சம்பளம் போதாமல் பலர் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்து, அதற்கு மாதந்தோறும் வட்டியும் கட்டி வருகிறார்கள். இப்படியே கடன் வாங்கி ஒரு கட்டத்தில் கடனைக் கட்ட முடியாமல் திண்டாடக் கொண்டிருக்கிறார்கள்.

Do This Guru Pariharam On Thursday To Remove Money Problems In Tamil

நீங்களும் இப்படி கடன் பிரச்சனை மற்றும் பணப் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறீர்கள் என்றால் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமையில் ஒரு பரிகாரத்தை செய்து வாருங்கள். அதுவும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 வியாழக்கிழமை செய்து வந்தால், குரு பகவான் பணப் பிரச்சனையைப் போக்க ஏதாவது ஒரு வழியைக் காட்டுவார். குறிப்பாக இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன பரிகாரம்?

என்ன பரிகாரம்?

குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு காலையில் எழுந்து குளித்ததும், மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். பெண்கள் செய்வதாக இருந்தால், தலையில் மஞ்சள் நிற பூவை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, குரு பகவான் இருந்தால் அவருக்கு மஞ்சள் நிற பூவை வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் செய்யலாம்.

மஞ்சள் பரிகாரம்

மஞ்சள் பரிகாரம்

பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்த பின்னர், விளக்கேற்ற வேண்டும். அதன் பின் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் தூளில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பச்சை கற்பூரம் நல்ல வாசனை கொண்டது என்பதால், இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.

குரு மந்திரம்

குரு மந்திரம்

தயாரித்து வைத்துள்ள மஞ்சள் கிண்ணத்தை இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, அதன் மேல் வலது உள்ளங்கையை வைத்து மூடி, பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து, 'ஓம் ஸ்ரீகுருவே நமஹ' என்ற குரு மந்திரத்தை 27 முறை உச்சரித்து, குரு பகவானை மனதார நினைத்து, உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனை நீங்க வேண்டும், கடன் தீர வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் இடவும்

தினமும் நெற்றியில் மஞ்சள் இடவும்

பூஜை செய்த மஞ்சளை பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சளை தினமும் காலையில் குளித்துவிட்டு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வியாழக்கிழமை வரைக்கு வேண்டிய மஞ்சள் தூளை பூஜைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வியாழக்கிழமை அன்று புதிதாக மஞ்சளை பூஜை செய்து பயன்படுத்த வேண்டும்.

11 வியாழக்கிழமை செய்யவும்

11 வியாழக்கிழமை செய்யவும்

இப்படி இந்த மஞ்சள் பூஜையை தொடர்ந்து 11 வியாழக்கிழமை செய்து, அந்த மஞ்சளை நாள்தோறும் நெற்றியில் வைத்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணக்கஷ்டம் விரைவில் நீங்கும். குருபகவானை நம்பி இந்த பரிகாரத்தை செய்து வந்தால், கூடிய சீக்கிரம் பண பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, May 19, 2022, 17:58 [IST]
Desktop Bottom Promotion