Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பண பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதோடு வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்தந்த கிழமைக்குரிய கடவுளை வழிபடுவதன் மூலம் ஆசியைப் பெறலாம். அந்த வகையில் புதன்கிழமை முதன்மை கடவுளான விநாயகருக்கு உரியது. இந்நாளில் விநாயகரை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருள் கிடைப்பதோடு, கிரகங்களில் புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

மேலும் புதன் கிழமைகளில் மனதார விநாயகரை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். அதே வேளையில் புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பண பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதோடு வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது புதன்கிழமைகளில் ஒருவர் மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள் எவையென்பதைக் காண்போம்.

கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது
கருப்பு நிற ஆடைகளை புதன்கிழமைகளில் அணியக்கூடாது என்று மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில் திருமணமான பெண்கள் புதன்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளுடன், கருப்பு நிற ஆபரணங்களை அணியக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்
புதன்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், புதன்கிழமைகளில் யாரிடமும் கடன் வாங்கக்கூடாது. புதன்கிழமைகளில் இம்மாதிரியான பண பரிவர்த்தனைகள் செய்வது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதோடு பண இழப்பும் ஏற்படலாம்.

எந்த பெண்ணையும் அவமதிக்காதீர்
பெண்களை எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும். அதுவும் புதன்கிழமைகளில் எந்த பெண்ணையும் தவறுதலாக கூட அவமதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஒரு பெண் புதன்கிழமையன்று அவமானப்படுத்தப்பட்டால், அந்நபருக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்காது. மேலும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மேற்கு திசையில் பயணிக்காதீர்
புதன்கிழமைகளில் மேற்கு திசைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புதன்கிழமைகளில் இந்த திசைகளில் பயணித்தால், எதிலும் தோல்வி கிடைப்பதோடு, பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது.

பிறர் மனம் புண்படும்படி பேசாதீர்
கிரகங்களில் புதன் புத்தி, விவேகம், பேச்சு மற்றும் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஆகவே புதன்கிழமையன்று யாருடைய மனமும் புண்படும்படி பேசாதீர்கள். ஒருவேளை இவ்வாறு செய்தால், அந்நபரின் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் இருக்காது. அதோடு பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications











