கொரோனா வைரஸ் காத்திருந்து பழிவாங்குகிறதா? - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனா வைரஸ் கிருமி புதிதாக உருவானது அல்ல என்றும், சார்ஸ் வைரஸ் கிருமி தான் மரபணு மாற்றமாகி கொரோனா என்னும் புத்தம் புதிய ரிலீசாக வந்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கழைக்கழகத்தின்

உலகம் முழுவதும் ஆறு லட்சம் பேரை தொற்றி 30 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ள கொரோனா வைரஸ் கிருமி தற்போது புதிதாக உருவானது அல்ல என்றும் சார்ஸ் வைரஸ் கிருமி தான் மரபணு மாற்றமாகி கொரோனா என்னும் புத்தம் புதிய ரிலீசாக வந்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கழைக்கழகத்தின் (Johns Hopkins University) வைரஸ் ஆராய்ச்சி துறையின் சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Coronavirus Was First Developed In 2003 In China - Report

கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என பொருள். கோவிட் -19 கிருமியின் படத்தை புனேவில் உள்ள விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். அதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் கிருமி முதன் முதலில் சீனாவில் கடந்த 2003ஆம் ஆண்டு வாக்கிலேயே உருவானது என்றும், அதுவும் சீன மக்களின் உணவுப் பழக்கத்தினால் தான் இந்த வைரஸ் கிருமி உருவானது என்றும், இது பற்றிய எச்சரிக்கையை கடந்த 2007ஆம் ஆண்டிலேயே எச்சரித்துள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன. அதுவும் சுமார் 17 ஆண்டுகள் வரை மெல்ல மெல்ல மரபணு மாற்றமடைந்து வந்து தக்க சமயத்தில் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கிவிட்டது என்றும் விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கை எழுப்பியுள்ளனர்.

இன்றைய தேதியில் அனைத்து மக்களிடமும், செய்தி ஊடகங்களிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று தான். தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களைக்கொண்டு உலகின் 90 சதவிகித நாடுகளை பிடித்து அனைத்து மக்களையும் பீதியிலும் பயத்திலும் உறைய வைத்துள்ளது இந்த வைரஸ் கிருமி. இதுவரையிலும் சுமார் இருபத்தி நான்காயிரம் பேர்களை பலி வாங்கியதோடு, சுமார் ஐந்தரை லட்சம் பேர்கள் வரை இந்நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரையில், 20க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியதோடு, ஆயிரக்கணக்கானோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பற்றி பல வதந்திகள் உலா வந்தன. முதலில் இது அமெரிக்க சதி, சீனாவை முடக்க செய்யப்பட்ட பயோவார் என்று குற்றம் சாட்டியது சீனா. அதே நேரம் கண்டதையும் தின்றதால்தான் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று சீனாவை குற்றம் சாட்டியது அமெரிக்கா. இது ஏலீயன்கள் நம்மீது ஏவி விட்ட தாக்குதல் என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைரஸ் கிருமியை பரப்பியது யார்?

வைரஸ் கிருமியை பரப்பியது யார்?

அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு ராணுவ வீரர் தான் எங்கள் நாட்டில் இந்த கொரோனா வைரஸ் கிருமியை பரப்பியது என்று சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்கா மீது குற்றச்சாட்டை முன் வைத்தது. இந்த வைரஸ் கிருமி உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பற்றி பரவி வருகிறது. இந்த வைரஸ் கிருமியை அழிப்பதற்கு வளர்ந்த நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சீனர்களின் உணவுப் பழக்கம்

சீனர்களின் உணவுப் பழக்கம்

உலக நாடுகள் எல்லாம், கொரோனா வைரஸ் கிருமியின் தாக்குதலுக்கு ஆளாகி அவஸ்தைப்பட்டு வரும் நிலையில், முதன்முதலில் இக்கிருமி உருவான சீனாவிலோ, இதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. எந்த மருந்தைக் கொண்டு இதன் வீரியத்தை குறைக்க முடியும் என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்து ஆராய்ச்சிகளை செய்து வருகின்றன. உண்மையில் கொரோனா வைரஸ் கிருமி முதன் முதலில் சீனாவில் தான் உருவானது என்றும், அதுவும் கடந்த 2003ஆம் ஆண்டு வாக்கிலேயே உருவானது என்றும், அதுவும் சீன மக்களின் உணவுப் பழக்கத்தினால் தான் இந்த வைரஸ் கிருமி உருவானது என்றும், இது பற்றிய எச்சரிக்கையை கடந்த 2007ஆம் ஆண்டிலேயே எச்சரித்துள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

கரப்பான், பாம்பு, தேள்

கரப்பான், பாம்பு, தேள்

உலகின் பிற நாடுகளில், அசைவம் சாப்பிடும் மக்கள் பெரும்பாலும், ஆடு, நாட்டுக்கோழி, பிராய்லர் சிக்கன், கடல் உணவுகள், என ஒரு வரையறை வகுத்துக்கொண்டு தான் சாப்பிட்டு வருகின்றனர். சீனாவிலோ, இதற்கு நேர் மாறாக, இந்த மாதிரியான ஐட்டங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, என்னுடைய ரூட்டே வேற என்று சொல்வது போல், கரப்பான் பூச்சி, எறும்பு, தேள், பூரான், பாம்பு என ஊர்வன ஒன்றையும் பாக்கி வைக்காமல், அசராமல் சாப்பிட்டு வருகின்றர். கொஞ்சம் அசந்தால் மனிதர்களையும் கூட மசாலா தடவி சாப்பிடுவதற்கு தயார் என்பது போல் உள்ளனர்.

மரபணு சீரமைக்கப்பட்ட கொரோனா

மரபணு சீரமைக்கப்பட்ட கொரோனா

இந்த உணவுப் பழக்கம் தான் தற்போது உலக மக்கள் அனைவரும் துன்பப்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. காமெடியாக சொன்னால், ‘சீனாக்காரன் கறி சோறு தின்னதுக்கு நம்மளை கை கழுவ விட்டுட்டானே ' என்று புலம்ப வைத்துவிட்டனர் சீன மக்கள். சீன மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தைப் பற்றி கடந்த 2007ஆம் ஆண்டே, சீனாவால் உலக மக்களுக்கு மிகப்பெரிய வைரஸ் தொற்று அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது. தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமியானது, மரபணு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். இன்றுவரை சுமார் 30 ஆயிரம் பேர்களை பலிவாங்கியதோடு, ஆறு லட்சம் பேர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவர காரணமாக இருப்பதும் சீனர்களின் உணவுப் பழக்கம் தான் என்பதை அப்போதே விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு புறம்பான உணவுகள்

இயற்கைக்கு புறம்பான உணவுகள்

இது பற்றி, கடந்த 2007ஆம் ஆண்டில் வெளியான கிளினிகல் மைக்ரோபயாலஜி ரிவியூஸ் (Clinical Microbiological Review) என்னும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. அதில், சீனாவின் தெற்கு பகுதியில் வாழும் மக்கள், குதிரைவாலி வவ்வால் எனப்படும் ஒருவகை வவ்வால்களை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். குறிப்பாக இந்தப்பகுதியில் வாழும் மக்கள் இயற்கைக்கு புறம்பான உணவுகளை சாப்பிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதில் அதிக அளவில் வைரஸ் கிருமிகள் உள்ளதால், அதை தின்னும் மக்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

சீனாவில் உருவான சார்ஸ் வைரஸ்

சீனாவில் உருவான சார்ஸ் வைரஸ்

இதனால், இந்த வகையான விலங்குகள் மூலம் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் சார்ஸ் வைரஸ் கிருமிகள் உருவாகி தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது, ஆகவே, அதில் உள்ள ஆபத்துகளை நாம் புறக்கணிக்கக்கூடாது என்றும் அந்த கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாக கடந்த 2003ஆம் ஆண்டு உருவான சார்ஸ் நோய் கிருமி. இதுவும் சீனாவில் தான் உருவாகி, உலகம் முழுவதும் பரவி சுமார் 800க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியது.

புத்தம் புதிய ரிலீஸ்

புத்தம் புதிய ரிலீஸ்

தற்போது உருவான கொரோனா வைரஸ் கிருமி புதிதாக உருவானது அல்ல என்றும், சார்ஸ் வைரஸ் கிருமி தான் மரபணு மாற்றமாகி கொரோனா என்னும் புத்தம் புதிய ரிலீசாக வந்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) வைரஸ் ஆராய்ச்சி துறையின் சமீபத்திய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion