For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...!

இந்து மதத்தில் தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். எந்தவொரு பூஜையும், சடங்கும் தேங்காய் இல்லாமல் முழுமைபெறாது. திருமணம் தொடங்கி இறுதி ஊர்வலம் வரை என அனைத்து நிகழ்வுகளிலும் தேங்காய் இடம் பெற்றி

|

இந்து மதத்தில் தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். எந்தவொரு பூஜையும், சடங்கும் தேங்காய் இல்லாமல் முழுமைபெறாது. திருமணம் தொடங்கி இறுதி ஊர்வலம் வரை என அனைத்து நிகழ்வுகளிலும் தேங்காய் இடம் பெற்றிருக்கும். தேங்காய் மந்திர, தந்திரங்களிலும் பயன்படுத்தப்படுறது. இந்த தேங்காய் உங்களின் வாழ்க்கையையே கூட மாற்ற இயலும்.

Coconut remedies that can bring wealth and prosperity

உண்மைதான் சில தேங்காயை முறையாக பயன்படுத்துவது அல்லது சரியான நாளில் கடவுளுக்கு படைப்பது போன்றவை வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்த உதவும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் தேங்காயைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றலாம், தேங்காய் மூலம் செய்யும் சடங்குகள் உங்களுக்கு என்ன பலன்களை வழங்கும் என்றும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெற்றியை பெறுவதற்கு

வெற்றியை பெறுவதற்கு

நீதிமன்றத்தில் நீங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருந்தால் தேங்காயை பயன்படுத்தி உங்கள் வீட்டில் ஒரு பூஜையை செய்யவும். பூஜையின் இறுதியில் தேங்காய் மீது ஒரு சிவப்பு மலரை வைக்கவும். அதன்பின்னர் வழக்கிற்கு செல்லும்போது அந்த மலரை உங்களுடன் எடுத்து செல்லுங்கள். முடிவு நீங்கள் எதிர்பார்த்தது போலவே வரும்.

கண் திருஷ்டி

கண் திருஷ்டி

கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க தேங்காயை பயன்படுத்தலாம். செவ்வாய்க் கிழமையன்று ஒன்றரை மீட்டர் சிவப்புத் துணியில் தேங்காயை சுற்றி அதனை கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவரை சுற்றி 7 முறை சுற்றவும். அதன்பின் அந்த தேங்காயை அனுமன் பாதத்திற்கு அருகில் வைக்கவும்.

நினைத்த காரியம் கைகூட

நினைத்த காரியம் கைகூட

உங்கள் வாழ்க்கையில் நிறைய தடைகள் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் படுக்கைக்கு அருகில் ஒரு தேங்காயை வைத்து விட்டு தூங்கவும். காலையில் அந்த தேங்காயை வேறு சில பிரசாதங்களுடன் சேர்த்து விநாயகர் கோவிலுக்கு கொடுத்து விடவும். இது உங்களின் அனைத்து தடைகளையும் நீக்கும்.

MOST READ: உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா? எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க

பணக்கஷ்டம்

பணக்கஷ்டம்

உங்கள் வாழ்க்கையில் அதிக நிதி நெருக்கடி இருந்தால் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் தேங்காயை எடுத்துக் கொண்டு அனுமன் கோவிலுக்கு செல்லவும். அனுமன் சிலையில் இருக்கும் குங்குமத்தை எடுத்து தேங்காயின் மீது ஸ்வஸ்திக் சின்னத்தை வரையவும். அதன்பின் கோவிலில் அமர்ந்து அனுமன் மந்திரத்தை கூறி வழிபடவும். இதனை 8 வாரம் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டம் நிரந்தரமாக நீங்கும்.

தொழில் நஷ்டம்

தொழில் நஷ்டம்

உங்கள் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால் வியாழக்கிழமைகளில் அரை மீட்டர் மஞ்சள் துணியில் தேங்காயைச் சுற்றி அதனுடன் சில மஞ்சள் நிற இனிப்புகளை சேர்த்து விஷ்ணு பகவான் கோவிலுக்கு கொடுக்கவும்.

வறுமை

வறுமை

உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து வறுமை இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்யுங்கள். தேங்காயை லக்ஷ்மி தேவிக்கு வைத்து படைத்து விட்டு அதனை உங்கள் வீட்டு லாக்கரில் வைக்கவும். இது உங்கள் வறுமையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும்.

MOST READ: அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவுதான் இது...!

சனிபகவான்

சனிபகவான்

உங்கள் வாழ்க்கையில் சனிபகவான் பலவீனமாக இருந்தால் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நீரில் தேங்காயை மூழ்கடித்து சனிபகவானுக்கு வைத்து வழிபடுங்கள். இவ்வாறு செய்யும்போது "ஓம் ராம்துதாய நம " என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். இதனை 7 வாரம் தொடர்ந்து செய்வது உங்களுக்கு சனிபகவான் மற்றும் அனுமனின் பூரண அருள் கிடைக்கும்.

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்ந்த தேங்காய் மற்றும் சில போர்வைகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் காலசர்ப்ப தோஷத்தின் விளைவை குறைக்கும்.

ஏகாஷி தேங்காய்

ஏகாஷி தேங்காய்

நீங்கள் மூன்று கண்களைக் கொண்ட ஒரு தேங்காயைக் கண்டால், அது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த தேங்காயை ஏகாஷி தேங்காய் என்று அழைக்கப்படுகிறது, இதனை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். இந்த தேங்காய் மகாலக்ஷ்மி வசிக்கும் இடம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தீபாவளி அன்று பூஜை செய்வது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும்.

MOST READ: இந்த 6 ராசிகாரங்க எப்பவும் மத்தவங்க உதவிய எதிர்பார்த்தே வாழ்வாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

விதை

விதை

தேங்காய் ஒரு தாயின் வயிற்றில் இருந்து (மரத்தில்) விழும் விதை போன்றது என்று கூறப்படுகிறது, எனவே ஒரு பெண் தனது வயிற்றில் ஒரு விதை (கருவை) 9 மாதங்களுக்கு சுமந்து செல்லும் ஒரு தேங்காயை உடைக்கக்கூடாது, ஏனெனில் அது இயற்கையின் சட்டத்திற்கு எதிரானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coconut Remedies That Can Bring Wealth And Prosperity

A coconut is considered to very auspicious in Hindu mythology. These remedies that can bring wealth and prosperity.
Desktop Bottom Promotion