Just In
- 16 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 56 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சாணக்கிய நீதியின் படி இந்த குணமுள்ளவர்கள் வாழ்க்கையில் தீராத செல்வத்தை பெறுவார்களாம்...!
பூமியில் மனித வாழ்க்கையை பொறுத்தவரை அத்தகைய பொருள்சார்ந்த மகிழ்ச்சியை பூர்த்தி செய்வதற்கான செல்வம் எப்போதுமே ஒரு முக்கிய தேவையாகவே இருந்தது.
மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் பொருள் சார்ந்ததாகவே இருப்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. தன்னிடம் இருக்கும் செல்வத்தின் அடிப்படையிலேயே தங்கள் மகிழ்ச்சியின் எல்லைகளை மனிதர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். இந்து மதத்தில், லக்ஷ்மி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார்.
பூமியில் மனித வாழ்க்கையை பொறுத்தவரை அத்தகைய பொருள்சார்ந்த மகிழ்ச்சியை பூர்த்தி செய்வதற்கான செல்வம் எப்போதுமே ஒரு முக்கிய தேவையாகவே இருந்தது. எனவே லக்ஷ்மி தேவி தொடர்ந்து ஏராளமான செல்வத்தையும் செழிப்பையும் எங்களுக்கு ஆசீர்வதிப்பார் என்று பிரார்த்தனை செய்கிறோம். செல்வத்தின் பற்றாக்குறை மகிழ்ச்சியான வாழ்க்கையில் இடையூறை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் ஏற்படும் செல்வத்தின் பற்றாக்குறையை எப்படி போக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
சாணக்கிய மந்திரம்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி " முர்கா யாத்திரை புஜியந்தே தன்யம் யாத்திரை சுசிஞ்சிதம் | தம்பத்தே கலாஹோ நாஸ்தி தத்ரா ஸ்ரீ ஸ்வயமகதா " இதன் அர்த்தம் என்னவெனில் இந்த ‘மூன்று' காரியங்களைச் செய்வதை மனதில் வைத்திருக்கும் ஒருவர், எப்போதும் லக்ஷ்மி தேவியின் அருளால் ஆசீர்வதிக்கப்படுவார் என்பதாகும்.
முதல் காரியம்
முட்டாள்களுக்கு பதிலாக ஒரு புத்திசாலியின் ஞானத்தையும், அறிவையும் பாராட்டும் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாகும். அந்த குடும்பத்தில் லக்ஷ்மி தேவி வசித்து, ஆசீர்வதிக்கிறார், அங்கு நீதிமான்கள் மதிக்கப்படுகிறார்கள், ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டாவது காரியம்
ஒருவரின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை அவமதிக்காத வீடு, வீட்டிற்கு வருபவர்களை வெறும் கையுடனும், வெறும் வயிறுடனும் திருப்பி அனுப்பாத வீடு கோவிலை விட புனிதமானதாகும். லக்ஷ்மி தேவி அத்தகைய வீடுகளையும் குடும்பங்களையும் அபரிமிதமான செல்வத்துடனும், செழிப்புடனும் வாழ ஆசீர்வதிக்கிறார்.
MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா?
மூன்றாவது காரியம்
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் ஒன்றாக வாழும் வீடு, லக்ஷ்மி தேவியால் ஆசீர்வதிக்கப்படுகிறது. தம்பதியினர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தாலோ அவர்களில் ஒருவர் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து அவமரியாதை செய்தால் அந்த குடும்பம் லக்ஷ்மி தேவியால் கைவிடப்படும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றியும் சாணக்கியர் கூறியுள்ளார்.
பண இழப்பு
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் சொன்ன முதல் விஷயம் உங்களின் நிதி நெருக்கடி. நீங்கள் நிதி இழப்பை சந்திக்கிறீர்கள் என்றால், அதை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். இதற்குக் காரணம், உங்கள் பணப் பிரச்சினையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவ மாட்டார்கள், அவர்கள் ஆதரவைக் காட்டினாலும் அது போலியானது.
தனிப்பட்ட பிரச்சினைகள்
சாணக்கியரின் கூற்றுப்படி எப்போதும் ரகசியமாக வைக்க வேண்டிய இரண்டாவது விஷயம் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள். தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் எப்போதும் கேலி செய்யப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள். மக்கள் தங்கள் பின்னால் சிரிப்பார்கள்.
MOST READ: உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்?
மனைவியின் குணம்
ரகசியமாக வைக்கப்பட வேண்டிய மூன்றாவது விஷயம் மனைவியின் குணம் மற்றும் நடத்தை. இதனை ரகசியமாக வைத்திருப்பவர்கள்தான் இறுதியில் ஞானி எனப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு முன்னால் தங்கள் மனைவிகளைப் பற்றி பேசும் ஆண்கள் தாங்கள் விரும்பாத ஒன்றைச் சொல்லலாம் என்று அவர் கூறினார்.