சாணக்கிய நீதியின் படி இந்த நிலைகள் ஆண்களின் மனதில் இருக்கும் நிம்மதியை முற்றிலும் அழித்துவிடுமாம்!

இந்திய வரலாற்றில் இதுவரை அறியப்பட்ட ஞானம் மற்றும் அறிவில் சிறந்த மிகவும் மரியாதைக்குரிய மற்றும் சிறந்த நபர்களில் ஒருவர்.

பண்டைய கால ஞானிகள் "மற்றவர்களின் நடத்தை நம் உள்ளார்ந்த அமைதியை அழிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது" என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு ஞானி மட்டும் " மக்கள் தாங்களே தங்களுடைய மனஅமைதியை கெடுத்துக் கொள்கிறார்கள் " என்று கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல இந்தியாவின் சிறந்த இராஜதந்திரியான சாணக்கியர்தான்.

Things That Pull Down a Mans Peace of Mind

இந்திய வரலாற்றில் இதுவரை அறியப்பட்ட ஞானம் மற்றும் அறிவில் சிறந்த மிகவும் மரியாதைக்குரிய மற்றும் சிறந்த நபர்களில் ஒருவர். சாணக்யா ஒரு பிராமணராகப் பிறந்தார், ஆனால் அவரது அறிவும் விதியும் அவரை ஒரு பயணத்தில் அழைத்துச் சென்றது, அங்கு அவர் க்ஷத்திரிய சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்றினார். அவர் சிறப்பான வாழ்க்கைக்காக தன் கைப்பட எழுதிய நூல்தான் சாணக்கிய நீதி. அவரது ஞானம் மற்றும் அனுபவத்தில் இருந்து சாணக்கியர் சொல்லும் இந்த 6 விஷயங்கள் ஒரு மனிதனின் மன அமைதியை கெடுத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு மனிதன் இல்லாதவற்றில் கவனம் செலுத்துகிறான், அவனிடம் இருப்பதில் கவனம் இழக்கிறான். மனிதனால் தன்னுடைய தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அவர் இன்னும் அடைய முடியாத விஷயங்களை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதைப் பற்றி அவர் கவலைப்படுகிறார், இது அவரது நல்லறிவை இழக்கச் செய்துவிடும்.

#2

#2

மனிதன் தன்னை ஒரு நபருக்குக் கீழே வேலை செய்வதைப் பார்க்கும்போது, அவர் தன்னுடைய சுய நம்பிக்கையை இழந்து தன்னை தாழ்ந்தவராக நினைக்கிறார்.ஒருவன் தன்னிடம் போதிய அறிவும், முயற்சியும் இருந்தும் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற காரணங்களால் மற்றவர்களின் கீழே வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பாட்டால் அவரின் வாழ்க்கையில் இருக்கும் நிம்மதி அழிந்துவிடும்.

#3

#3

ஒரு மனிதன் ஆரோக்கியமற்ற உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு, தனது சொந்த ஆரோக்கியத்திற்கு மிகக் குறைந்த அக்கறை செலுத்தும்போது தனது மனஅமைதியை இழக்கிறான். இந்த நிலையான நடத்தையால் எதிர்மறை எண்ணங்கள், நல்வாழ்வு குறித்த பயம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நீண்டகால சேதம் ஏற்படுகிறது. இதனால் மனஅமைதி கெட்டுப்போகிறது.

#4

#4

அதிகளவு கோபப்படும் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடும் மனைவியை கொண்டவர்கள் எப்போதும் முரண்பட்ட உறவில் தன்னைக் காண்கிறார், அது அவரை மன அமைதியை இழக்கச் செய்கிறது.

#5

#5

ஒரு மனிதன், தன்னுடைய மகன் தனக்குக் கீழ்ப்படிய மறுத்து, வெளி உலகில் அவரது போதனைகளை ஒப்புக் கொள்ளவோ அல்லது மதிக்கவோ தவறிவிட்டான் எனில் ஆணின் மனஅமைதி பாதிக்கப்படும். அதேபோல தனது மகன் தன் மீதும் தனது மனைவி மீதும் தன்னை சரியாக வளர்க்கவில்லை என்று புகாரளித்தால் அவரின் நிம்மதி முழுமையாக கெட்டுவிடும்.

#6

#6

தனது மகளை விதவையாக பார்க்கும் நிலை எந்த ஆணுக்கும் ஏற்படக்கூடாது. அந்த நிலையில் இருக்கும் ஆண் அதற்குப்பின் வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion