Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் உங்க திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காதாம்...
சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும், திறமையான அரசியல்வாதியாகவும் மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார்.
சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும், திறமையான அரசியல்வாதியாகவும் மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆச்சார்ய சாணக்கியரின் வார்த்தைகளை ஒருவர் ஏற்றுக்கொண்டால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் இருந்து பிரச்சினைகளை அகற்ற முடியும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது அனைவரும் விரும்பும் வரமாகும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இந்த வரம் கிடைப்பதில்லை. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமமான அன்பையும் மரியாதையையும் கொடுத்தால்தான் தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும். சாணக்கியரின் சில கொள்கைகளைப் பின்பற்றினால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறலாம். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெற கணவனும் மனைவியும் சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிண்டல்
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எதிலும் பரிகாசம் செய்யக்கூடாது. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இதுதான் முக்கியக் காரணம் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகளை புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் திருமண வாழ்க்கை விரைவில் முறிந்துவிடும்.

ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது
உங்கள் திருமண வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் பேசிக் கொள்ள வேண்டும். கணவன்-மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நீங்கள் பேசுவதை உடனே நிறுத்தி விடாதீர்கள். அப்படிச் செய்தால் சிறு சண்டையே பெரிய சண்டையாக மாறும்.

ஒத்துழைப்பு இல்லாமை
கணவன்-மனைவி இருவரும் சிறிய, பெரிய பணிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே விட்டு விடுகின்றனர். இது முதலில் நன்றாகத் தோன்றினாலும் பின்னர் நாளடைவில் அதுவே மோதலுக்கு வழிவகுக்கும். திருமண வாழ்வு வெற்றிபெற கணவன்-மனைவியின் ஒத்துழைப்பு அவசியம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, தம்பதிகள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும்.

கோபம்
கோபம் என்பது கணவன்-மனைவி இடையேயான அனைத்து உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு உணர்ச்சியாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் ஏமாற்றத்தையும், தோல்வியையும் சந்திப்பார்கள். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஆண்களும் பெண்களும் தங்கள் கோபமான தன்மையைக் கவனித்து, பிரச்சினையை அமைதியாக தீர்க்க வேண்டும்.

செலவுகள்
வாழ்க்கையை ஒழுங்காக வாழ பணம் மிகவும் அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பணப் பயன்பாடு குறித்து தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும். இருவரில் ஒருவர் பண விஷயத்தில் ஏமாற்றத் தொடங்கும் போது, உங்கள் உறவு விரைவில் சிதையத் தொடங்கும். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் வசதிக்காக செலவு செய்வது நல்லது. ஆனால் தேவையற்ற செலவுகள் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது.

மற்றவர்களிடம் அந்தரங்க விஷயங்களைப் பகிர்வது
கணவன் மனைவி இடையேயான விஷயங்களில் ரகசியம் எப்போதும் காக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் நடக்கும் அந்தரங்க விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும், மற்றவர்களிடம் அவற்றை சொல்லக்கூடாது. இது துணைக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது மற்றும் திருமண வாழ்க்கையில் சிரமங்களை உருவாக்குகிறது. எனவே உங்களின் அந்தரங்கத் தகவலை எந்த மூன்றாம் நபருக்கும் தெரியப்படுத்தாமல் கவனமாக இருங்கள்.

ஒழுக்கமின்மை
மனிதராக பிறந்த அனைவரும் கண்ணியத்துடன் வாழ வேண்டும். அதை மீறுவது எந்த உறவையும் சீர்குலைக்கும். ஆணோ, பெண்ணோ தங்கள் கண்ணியத்தை மறந்துவிட்டால், உறவு முறிவதற்கு அதிக நேரம் எடுக்காது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி கணவனும் மனைவியும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

பொய்
கணவன் மனைவிக்கு இடையேயான உறவு நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையிலானது. ஒருவரையொருவர் பொய் சொல்வது அல்லது ஏமாற்றுவது கணவன்-மனைவி உறவில் முடிவில்லாத விரிசலை உருவாக்குகிறது.



Click it and Unblock the Notifications











