Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
சாணக்கிய நீதியின் படி இந்த தகுதிகள் இருக்கும் ஆண்களை பெண்கள் தேடி வருவார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத் துணை நற்பண்புகள் நிறைந்த ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஒரு நபரின் நடத்தை அவரது ஆளுமைதான் அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத் துணை நற்பண்புகள் நிறைந்த ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு நபரின் இயல்புகள், தகுதிகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். அதில் பெண்கள் விரும்பும் ஆண்களின் குணங்களையும் விவரித்துள்ளார்.

சாணக்கியரின் கூற்றுப்படி, சில குணங்கள் ஆண்களை சிறந்தவர்களாக ஆக்குகின்றன. பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் சில குணங்கள் ஆண்களிடம் உள்ளன. இயற்கையாகவே இத்தகைய ஆண்களிடம் பெண்கள் மிக எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். ஆண்களுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட ஆளுமை, தன்மை அல்லது விஷயத்தை பெண்கள் விரும்புகிறார்கள். பெண்களும் அத்தகைய ஆண்களை சொந்தமாக்க விரும்புகிறார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி பெண்களை ஈர்க்கும் ஆணின் குணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நேர்மை
உறவுகளில் நேர்மையாக இருப்பவருக்கு எல்லா இடங்களிலும் மரியாதை கிடைக்கும் என்கிறார் சாணக்யா. மரியாதைக்குரிய நோக்கத்துடன் பெண்களுடன் பழகும் ஆண்கள் தங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்கள். ஆண்களின் இந்த குணம் பெண்களை மிகவும் கவர்கிறது. அத்தகைய ஆண்கள் தங்கள் உறவை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவில் ஒருபோதும் நேர்மையின்மையை காட்ட மாட்டார்கள்.

நல்ல நடத்தை
நன்னடத்தை, இனிமையாகப் பேசுதல், மென்மை போன்ற குணங்கள் பெரும்பாலும் பெண்களிடம் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு இந்த குணங்கள் இருந்தால் அது அவர்களின் நேர்மையை காட்டுகிறது. அத்தகையவர்கள் தங்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களின் இதயங்களை வெல்வார்கள். இந்த குணங்கள் பெண்களை மிகவும் ஈர்க்கின்றன.

நன்றாக கேட்பவர்கள்
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவர் நிழலைப் போல எப்போதும் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாளர். அவர்கள் ஒரு நல்ல கேட்பவரை விரும்புகிறார்கள். பேசும் திறன் இருந்தால், கேட்கும் தைரியமும் வேண்டும். இது ஒரு நல்ல ஆணின் அடையாளம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். பெண்கள் சொல்வதைக் கேட்டு அலட்சியப்படுத்தாத ஆண்களையே பெண்களுக்கு எப்போதும் பிடிக்கும்.

நம்பகத்தன்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தனிப்பட்ட ஒன்றைச் சொன்னால், அவர் அதைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டால், அத்தகைய விசுவாசமான ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும் என்கிறார் சாணக்கியர். பெண்கள் தங்கள் நம்பிக்கைகளை சமரசம் செய்யாத மற்றும் அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஆண்களை விரும்புகிறார்கள்.

பாதுகாப்பு வழங்குபவர்கள்
பெண்கள் பாதுகாப்பை வழங்கும் ஆண்களை நேசிக்கிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணுடன் பாதுகாப்பாக உணரும்போது, பெண்கள் அத்தகைய ஆணை நம்புகிறார்கள்.

மரியாதை கொடுப்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் மற்றவர்களை மதிக்கத் தெரிந்த ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். யாரையும் மதிக்காத மற்றும் பிறரை புண்படுத்தாத ஆண்களை பெண்கள் எப்போதும் வெறுக்கிறார்கள், அது உறவாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி.

கண்ணியமானவர்கள்
சாணக்யா தனது சாணக்ய நீதியில் கூறியபடி, பெண்கள் கண்ணியமான ஆண்களை விரைவாக விரும்புவார்கள். ஆணவம் இல்லாத, எந்தத் தவறையும் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் என்று இதற்கு அர்த்தம். தங்களுடைய இந்த குணம் உறவில் இனிமையாக இருக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். எனவே ஒரு மனிதன் முதலில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications