Just In
- 29 min ago
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 4 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 7 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 15 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- News
கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் தேர்தல் என எதிர்க்கட்சிகள் கூச்சல்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Movies
தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாஸ்துப்படி, ஒரு வாளி தண்ணீரை இப்படி வெச்சா கடன் பிரச்சனை சீக்கிரம் சரியாயிடும்...
வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் வெவ்வெறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை கவனிக்க வேண்டியது அவசியம். இதனால் வீட்டுச்சூழல் இனிமையாகவும், வாழ்க்கை சீராகவும் செல்லும். வாழ்க்கை என்றால் அதில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகள் ஒருவரது வீட்டில் திடீரென்று அதிகரிக்கிறது என்றால், அதற்கு வீட்டில் நாம் வைத்திருக்கும் சில பொருட்களும் முக்கிய காரணமாக இருக்கும் என வாஸ்து வாஸ்திரம் கூறுகிறது.
குறிப்பாக நீங்கள் கடன் பிரச்சனையால் அதிகம் கஷ்டப்பட்டு வந்தால், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, நிதி நிலைமை மேம்படும். இப்போது அந்த மாதிரியான ஒரு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

குளியலறையில் நீல நிற வாளி
வாஸ்துப்படி, குளியலறையில் எப்போதும் நீல நிற வாளியைத் தான் வைத்திருக்க வேண்டும். மேலும் வாளியானது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கும்.

இந்நீரில் குளிக்கக்கூடாது
உங்களுக்கு கடன் இருந்தால், இரவு தூங்கும் முன் ஒரு நீல நிற வாளி முழுவதும் நீரை நிரப்பி, மறுநாள் காலையில் அந்நீரால் குளியலறையை சுத்தம் செய்ய வேண்டுமே தவிர, மறந்தும் அந்நீரில் குளிக்கக்கூடாது.

காலியான வாளியை வைத்திருக்கக்கூடாது
வாஸ்துப்படி, குளியலறையில் இருக்கும் வாளி காலியாக இருக்கக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை வரவழைக்கும். முக்கியமாக வாளியில் நீரை நிரப்பி அதை மூடி வைக்காமல், திறந்து வைத்திருங்கள். இதனால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

அழுக்கு பாத்திரங்கள்
இரவு நேரங்களில் சமையலறையில் அழுக்குப் பாத்திரங்களை வைத்திருக்கக்கூடாது. இரவு நேரத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்ய முடியாவிட்டால், நீரில் மட்டுமாவது கழுவி வைத்திருங்கள். இதனால் பண இழப்பு ஏற்படாமல் இருக்கும்.

குறிப்பு
வாஸ்து சாஸ்திரத்தின் பொருள், வீட்டின் நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதாகும். இந்த ஆற்றல்கள சரியான முறையில் பெற்றால், வீட்டுச் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். சமநிலை இல்லாவிட்டால், வீட்டில் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வாஸ்துப்படி வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.