Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
வாஸ்துப்படி, ஒரு வாளி தண்ணீரை இப்படி வெச்சா கடன் பிரச்சனை சீக்கிரம் சரியாயிடும்...
நீங்கள் கடன் பிரச்சனையால் அதிகம் கஷ்டப்பட்டு வந்தால், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, நிதி நிலைமை மேம்படும்.
வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் வெவ்வெறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை கவனிக்க வேண்டியது அவசியம். இதனால் வீட்டுச்சூழல் இனிமையாகவும், வாழ்க்கை சீராகவும் செல்லும். வாழ்க்கை என்றால் அதில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகள் ஒருவரது வீட்டில் திடீரென்று அதிகரிக்கிறது என்றால், அதற்கு வீட்டில் நாம் வைத்திருக்கும் சில பொருட்களும் முக்கிய காரணமாக இருக்கும் என வாஸ்து வாஸ்திரம் கூறுகிறது.

குறிப்பாக நீங்கள் கடன் பிரச்சனையால் அதிகம் கஷ்டப்பட்டு வந்தால், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, நிதி நிலைமை மேம்படும். இப்போது அந்த மாதிரியான ஒரு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

குளியலறையில் நீல நிற வாளி
வாஸ்துப்படி, குளியலறையில் எப்போதும் நீல நிற வாளியைத் தான் வைத்திருக்க வேண்டும். மேலும் வாளியானது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கும்.

இந்நீரில் குளிக்கக்கூடாது
உங்களுக்கு கடன் இருந்தால், இரவு தூங்கும் முன் ஒரு நீல நிற வாளி முழுவதும் நீரை நிரப்பி, மறுநாள் காலையில் அந்நீரால் குளியலறையை சுத்தம் செய்ய வேண்டுமே தவிர, மறந்தும் அந்நீரில் குளிக்கக்கூடாது.

காலியான வாளியை வைத்திருக்கக்கூடாது
வாஸ்துப்படி, குளியலறையில் இருக்கும் வாளி காலியாக இருக்கக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை வரவழைக்கும். முக்கியமாக வாளியில் நீரை நிரப்பி அதை மூடி வைக்காமல், திறந்து வைத்திருங்கள். இதனால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

அழுக்கு பாத்திரங்கள்
இரவு நேரங்களில் சமையலறையில் அழுக்குப் பாத்திரங்களை வைத்திருக்கக்கூடாது. இரவு நேரத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்ய முடியாவிட்டால், நீரில் மட்டுமாவது கழுவி வைத்திருங்கள். இதனால் பண இழப்பு ஏற்படாமல் இருக்கும்.

குறிப்பு
வாஸ்து சாஸ்திரத்தின் பொருள், வீட்டின் நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதாகும். இந்த ஆற்றல்கள சரியான முறையில் பெற்றால், வீட்டுச் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். சமநிலை இல்லாவிட்டால், வீட்டில் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வாஸ்துப்படி வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.



Click it and Unblock the Notifications