Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
புதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், குருவும் உள்ளார்கள்.

வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திர சாஸ்திரங்களின் படி விநாயகரை தனிப்பட்ட நன்மைக்காகவும், வியாபார நன்மைக்காகவும் பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். புதன் கிழமையில் இந்த வடிவங்களில் ஒரு பிள்ளையாரை வழிபடுவது பல நன்மைகளை வழங்கும்.

வெள்ளை பிள்ளையார்
குறிப்பிட்ட தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிற விநாயகர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கணபதி ஸ்வேதர்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து, சரியான சடங்குகளுடன் வழிபடுவது வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்ட உதவுகிறது.

சிவப்பு விநாயகர்
வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு விநாயகரை புதன் கிழமையில் வழிபட வேண்டும். இது உங்களை அனைத்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

வெள்ளி பிள்ளையார்
வெள்ளி பிள்ளையாரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் புதன் கிழமையில் வெள்ளி பிள்ளையாரை சரியான முறையில் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும். வெள்ளி பிள்ளையார் வழிபாடு வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

சந்தன பிள்ளையார்
குடும்ப உறவுகளை பொறுத்த வரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. விநாயகரின் வழிபாடு குடும்ப உறவுகளை இணைக்க உதவுகிறது. சந்தன பிள்ளையாரை புதன் கிழமையன்று வழிபடுவது குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

மெர்குரி விநாயகர்
மெர்குரி விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிள்ளையாரை புதன் கிழமை வழிபடுவது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதோடு உங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











