Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
புதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், குருவும் உள்ளார்கள்.

வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திர சாஸ்திரங்களின் படி விநாயகரை தனிப்பட்ட நன்மைக்காகவும், வியாபார நன்மைக்காகவும் பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். புதன் கிழமையில் இந்த வடிவங்களில் ஒரு பிள்ளையாரை வழிபடுவது பல நன்மைகளை வழங்கும்.

வெள்ளை பிள்ளையார்
குறிப்பிட்ட தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிற விநாயகர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கணபதி ஸ்வேதர்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து, சரியான சடங்குகளுடன் வழிபடுவது வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்ட உதவுகிறது.

சிவப்பு விநாயகர்
வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு விநாயகரை புதன் கிழமையில் வழிபட வேண்டும். இது உங்களை அனைத்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

வெள்ளி பிள்ளையார்
வெள்ளி பிள்ளையாரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் புதன் கிழமையில் வெள்ளி பிள்ளையாரை சரியான முறையில் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும். வெள்ளி பிள்ளையார் வழிபாடு வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

சந்தன பிள்ளையார்
குடும்ப உறவுகளை பொறுத்த வரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. விநாயகரின் வழிபாடு குடும்ப உறவுகளை இணைக்க உதவுகிறது. சந்தன பிள்ளையாரை புதன் கிழமையன்று வழிபடுவது குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

மெர்குரி விநாயகர்
மெர்குரி விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிள்ளையாரை புதன் கிழமை வழிபடுவது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதோடு உங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











