Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
புதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், குருவும் உள்ளார்கள்.

வேத குறிப்புகளின் படி புதன் கிழமை விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திர சாஸ்திரங்களின் படி விநாயகரை தனிப்பட்ட நன்மைக்காகவும், வியாபார நன்மைக்காகவும் பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். புதன் கிழமையில் இந்த வடிவங்களில் ஒரு பிள்ளையாரை வழிபடுவது பல நன்மைகளை வழங்கும்.

வெள்ளை பிள்ளையார்
குறிப்பிட்ட தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிற விநாயகர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கணபதி ஸ்வேதர்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து, சரியான சடங்குகளுடன் வழிபடுவது வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்ட உதவுகிறது.

சிவப்பு விநாயகர்
வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு விநாயகரை புதன் கிழமையில் வழிபட வேண்டும். இது உங்களை அனைத்து எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

வெள்ளி பிள்ளையார்
வெள்ளி பிள்ளையாரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் புதன் கிழமையில் வெள்ளி பிள்ளையாரை சரியான முறையில் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணக்கஷ்டத்தையும் போக்கும். வெள்ளி பிள்ளையார் வழிபாடு வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

சந்தன பிள்ளையார்
குடும்ப உறவுகளை பொறுத்த வரை கடவுள் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. விநாயகரின் வழிபாடு குடும்ப உறவுகளை இணைக்க உதவுகிறது. சந்தன பிள்ளையாரை புதன் கிழமையன்று வழிபடுவது குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

மெர்குரி விநாயகர்
மெர்குரி விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிள்ளையாரை புதன் கிழமை வழிபடுவது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதோடு உங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications