Just In
- 4 min ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 39 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 1 hr ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Automobiles உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் அடிப்படை அடையாளமாக இருப்பது அவர்களின் பெயர்தான். ஒருவரின் பெயர் என்பது தன்னிச்சையாக வைக்கப்படுவதில்லை.
ஒவ்வொருவருக்கும் அடிப்படை அடையாளமாக இருப்பது அவர்களின் பெயர்தான். ஒருவரின் பெயர் என்பது தன்னிச்சையாக வைக்கப்படுவதில்லை. அதேபோல நமது குணங்கள், மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் நமது பெயருக்கு முக்கியப்பங்கு உள்ளது.
நமது பெயரின் முதல் எழுத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குணம் உள்ளது. இந்த பதிவில் முதல் எழுத்தான A- வில் பெயர் தொடங்குபவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்காலம்.
முதல் எழுத்து
A முதல் எழுத்தாக இருப்பதற்கு காரணம் அது முதன்மையான குணங்களை பிரதிபலிப்பதுதான். எப்பொழுதும் வரிசையில் முதலாக இருக்கும் இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், பொறுப்பானவராகவும் இருப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்கும் இவர்கள் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தக்கூடியர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் குழுவின் முன்னேற்றம் இவர்களின் முடிவை பொறுத்ததாக இருக்கும்.
முதலாளியாக இருப்பீர்கள்
நீங்கள் அனைவரையும் பொறுப்பாக வழிநடத்த விரும்புவதால் நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கான விதிமுறைகளை நீங்களே உருவாக்கி கொள்வீர்கள். நீங்கள் சொந்த முயற்சியில் எதையும் சாதிப்பீர்கள் அதற்கு காரணம் அதனை செய்வதற்கான நம்பிக்கையும், தைரியமும் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த குணங்களால் நீங்கள் பெரும்பாலும் முதலாளியாகத்தான் இருங்க விரும்புவீர்கள் அல்லது இருப்பீர்கள்.
சாகசங்கள்
சோர்ந்து போய் அமர்வது என்பது உங்களால் இயலாத ஒன்று. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் நீங்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்பீர்கள். எங்கெல்லாம் வேடிக்கையும், சாகசமும் இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் இருப்பீர்கள்.
போலி தைரியம்
உங்கள் துணிச்சலும் நம்பிக்கையும் இயல்பானது, ஆனால் சில சமயங்களில், நீங்கள் நம்பிக்கை குறைவாக உணர்ந்தால், உங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள போலி தைரியத்தை முகத்தில் அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் கண்களுக்கு நீங்கள் எப்பொழுதும் தைரியமானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டுமென்று நடிப்பீர்கள்.
வேலை
வழிநடத்தும் எந்த வேலையும் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். உங்களுக்கு கீழ் இருப்பவர்களுக்கு சரியான வழியை காட்ட நீங்கள் எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள். சொந்த தொழில், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
பிடிவாதம்
உங்களின் உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அது பல சமயங்களில் பிடிவாதமாக மாறி மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் பிடிவாதத்தால் உங்களை விட மற்றவர்களுக்கே எப்பொழுதும் பாதிப்பு அதிகமாக இருக்கும். நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்ல நீங்கள் தயங்க மாட்டிர்கள்.
ஊக்கமிழப்பு
தன்னம்பிக்கை உங்களின் தனிப்பட்ட குணங்களில் ஒன்று. ஆனால் நீங்கள் அதே குணத்தை அனைவரிடமும் எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு கீழே உள்ளவர்களிடம் நீங்கள் கடுமையாய் நடந்து கொள்வீர்கள். அது அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் செய்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களை ஊக்கமிழக்க செய்யும்.
MOST READ: இந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா?
காயப்படுத்துவது
மற்றவர்களை காயப்படுத்துவது மற்றும் தவறாக எடைபோடுவது உங்களிடம் இருந்து பிரிக்க முடியதா குணங்களாகும். காயப்படுத்தும் முன் மட்டுமல்ல காயப்படுத்திய பின்னரும் கூட நீங்கள் அதை பற்றி யோசிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ நினைக்க மாட்டிர்கள்.