Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
விஷ்ணுவை வழிபடும் போது செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும்...!
விஷ்ணு பகவான் அன்பே உருவான கடவுளாக இருந்தாலும் அவரை வணங்கும்போது செய்யும் சில தவறுகள் அவரின் கோபத்தை தூண்டக்கூடியதாக அமைந்துவிடுகிறது.
இந்து மதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு காக்கும் தொழிலை செய்து வருகிறார். விஷ்ணு பகவானும் அவரின் அவதாரங்களும் காலத்தால் என்றுமே அழியாதவை. இராமனாக வந்து இராவணனை வதம் செய்ததும், கிருஷ்ண பரமாத்மாவாக வந்து குருஷேத்ர போரை தலைமையேற்று நடத்தி பூமியில் தர்மத்தை நிலை நாட்டியதும் தான் இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்னும் இருபெரும் இதிகாசங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விஷ்ணு பகவானை வழிபடுவது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரும். அதுமட்டுமின்றி நம் வாழ்க்கையில் மேன்மையடைய விரும்பினால் அதற்கு விஷ்ணு வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அடிப்படையில் விஷ்ணு பகவான் அன்பே உருவான கடவுளாக இருந்தாலும் அவரை வணங்கும்போது செய்யும் சில தவறுகள் அவரின் கோபத்தை தூண்டக்கூடியதாக அமைந்துவிடுகிறது. விஷ்ணு பகவானின் கோபத்தால் உங்கள் வாழ்வில் பல மோசமான விளைவுகள் ஏற்படலாம். இந்த பதிவில் விஷ்ணுவை வணங்கும் போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

தவறு 1
காலை நேரத்தில் விஷ்ணு பகவானை வழிபடும்போது உணவு உண்ட பிறகு வணங்கக்கூடாது. காலையில் குளித்த பிறகு விஷ்ணுவை வணங்கிய பிறகே உணவு உண்ண வேண்டும். அதேபோல குளிப்பதற்கு முன்னரும் விஷ்ணுவின் அருகே செல்லக்கூடாது.

தவறு 2
விஷ்ணு பகவானுக்கு பூக்களை வைத்து வழிபடுவது என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக மஞ்சள் நிற மலர்கள் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்ததாகும். ஆனால் விஷ்ணுவிற்கு வைத்து வழிபடும் மலர்களோ, பழங்களோ உங்களின் சொந்த பணத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும். ஒருபோதும் கடன் வாங்கியதாகவோ, திருடியதாகவோ இருக்கக்கூடாது.

தவறு 3
நீங்கள் வெளியே செல்லும் இடங்களில் பலவித எதிர்மறை சக்திகள் இருக்கலாம். எனவே நீங்கள் சென்று வந்த இடத்தில் இருந்து எந்தவித துர்சக்திகளும் தொற்றிக்கொண்டு வராமல் இருக்க கோவிலுக்கு செல்லும் முன்னரோ அல்லது வீட்டிற்குள் வழிபடும் முன்னரோ பாதங்களை தூய்மையாக கழுவி விடவேண்டும்.

தவறு 4
விஷ்ணு பகவானுக்கு பசு என்பது மிகவும் பிடித்தமான பொருளாகும். விஷ்ணு பகவானை வழிபடும் போதும் அவருக்கு பிரசாதம் வைத்து வழிபடும் போதும் பசு நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற எண்ணெய்களையோ, உபயோகப்படுத்திய எண்ணெய்களையோ பயன்படுத்தக்கூடாது. இது விஷ்ணு பகவானுக்கு பிடிக்காத செயலாகும்.

தவறு 5
முன்பே கூறியது போல விஷ்ணுவிற்கு பிடித்த நிறம் மஞ்சள் நிறமாகும். எனவே விஷ்ணுவை வழிபடும் போது மஞ்சள் நிற உடையணிந்து வழிபடுவது உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும். அதேசமயம் நீல நிற ஆடையணிந்து விஷ்ணுவை வழிபடுவது கோபத்தை அதிகரிக்கும்.

தவறு 6
கழிவறையை பயன்படுத்திய பிறகு விஷ்ணுவை வழிபட கூடாது, அதேபோல பிறர் விஷ்ணுவை வழிபட்டு கொண்டிருக்கும்போதும் விஷ்ணுவை வழிபடக்கூடாது. இது விஷ்ணுபகவானை அவமதிக்கும் செயலாகும்.

தவறு 7
விஷ்ணுவை வழிபடும் போது கைகளை கட்டி கொண்டு வணங்கக்கூடாது. அதேபோல தலையை கீழ்நோக்கியோ அல்லது உடல் பாகங்களை மறைத்து கொண்டோ வணங்குவது விஷ்ணுவை அவமதிப்பதாகும்.

தவறு 8
விஷ்ணு பூஜை மட்டுமின்றி எந்த கடவுளின் பூஜையாக இருந்தாலும் வெளிச்சம் இருக்கும் போது மட்டுமே செய்ய வேண்டும். இருட்டில் பூஜை செய்வதோ அல்லது சிலையை தொடுவதோ உங்களுக்கு பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தவறு 9
முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்காமல் எந்த பூஜையையும் செய்யக்கூடாது. அப்படி செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. விநாயகரை தவிர்த்து செய்யப்படும் எந்த பூஜையும் முழுமையான பூஜையாக கடவுள்களால் ஏற்றுக்கொள்ளப்படாது.



Click it and Unblock the Notifications